Skip to main content

மலேரியாவுக்கு தடுப்பூசி... கொசுவினால் பரவும் நோய்க்கு எதிரான போராட்டத்தில் மைல்கல்..!

மலேரியாவுக்கு எதிரான உலகின் முதல் ரொட்டீன் தடுப்பூசி திட்டம், ஆப்பிரிக்கா முழுவதும் ஆயிரக்கணக்கான குழந்தைகளின் உயிர்களைக் காப்பாற்றும் நடவடிக்கையாக கேமரூனில் தொடங்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார நிறுவனத்தின் தரவுகளின்படி, ஒவ்வோர் ஆண்டும் 6,00,000 பேர் ஆப்பிரிக்காவில் மலேரியாவால் உயிரிழக்கின்றனர். அதில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் இறப்பு 80% உள்ளது. 2021-ம் ஆண்டில், உலகளவில் மலேரியாவால் பாதிக்கப்பட்டவர்களில் 95%, மற்றும் மலேரியா பாதித்து உயிரிழந்தவர்களில் 96% ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர்கள்.

மலேரியா தடுப்பு மருந்து

இதைத் தடுக்கும் வகையில் மலேரியாவுக்கு எதிரான உலகின் முதல் தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கேமரூனில் உள்ள சுகாதார நிலையத்தில் டேனியலா என்ற பெண் குழந்தைக்கு முதல் மலேரியா தடுப்பூசி வழங்கப்பட்டது.

கேமரூனில், ஆறு மாதத்துக்குட்பட்ட குழந்தைகள் அனைவருக்கும் இலவசமாக மலேரியா தடுப்பூசி வழங்கப்பட உள்ளது. மொத்தம் நான்கு தவணைகளாக இந்தத் தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு பிற தடுப்பூசிகளுடன் சேர்த்து இதுவும் வழங்கப்படும் என்று அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மலேரியாவுக்குத் தடுப்பூசி

திட்டம் தொடங்குவதற்கு முன்பாக கென்யா, கானா மற்றும் மலாவி ஆகிய நாடுகளில் மாதிரித் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது. அதில் தடுப்பூசி செலுத்தப்பட்ட குழந்தைகள் மலேரியா பாதித்து இறக்கும் எண்ணிக்கை குறைந்தது தெரியவந்தது. இந்தத் தடுப்பூசியானது மூன்றில் ஓர் உயிரைக் காப்பாற்றக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மலேரியாவுக்கு எதிரான போராட்டத்தில் கொசு வலைகள் மற்றும் மலேரியா மாத்திரைகளுடன் தடுப்பூசியும் முக்கியமான கூடுதல் கருவியாகப் பயன்படும் என்று நம்பப்படுகிறது. இந்த மூன்றையும் ஒன்றாகப் பயன்படுத்தும்போது குழந்தைகளுக்கு மலேரியாவிலிருந்து 90% பாதுகாப்பை அளிக்கும் என்று மற்றோர் ஆய்வில் தெரியவந்துள்ளது.

Vaccine

மலேரியா தடுப்பூசியை உருவாக்க பிரிட்டிஷ் மருந்து தயாரிப்பு நிறுவனமான ஜிஎஸ்கே 30 ஆண்டு ஆராய்ச்சியில் ஈடுபட்டது. இந்தத் தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனமும் ஒப்புதல் அளித்துள்ளது. கொசுக்களால் பரவும் நோய்க்கு எதிரான உலகளாவிய போராட்டத்தில் ஒரு வரலாற்றுத் தருணம் இது என்று கருதப்படுகிறது.


Comments

Popular posts from this blog

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...