Skip to main content

``அந்தப் பெண்ணுக்கு வேற யாரும் ஆதரவில்ல... அதனாலதான்...'' - காமத்துக்கு மரியாதை | சீஸன் 4 - 138

ஒருவனுக்கு ஒருத்தி என்ற நிலை வந்த பிறகும், திருமணம் தாண்டிய உறவுகள் இருந்துகொண்டே தான் இருக்கின்றன. அதிலும், சமீப சில வருடங்களாக இத்தகைய உறவுகள் சற்று அதிகரித்திருப்பதாகத் தெரிவிக்கிற செக்ஸாலஜிஸ்ட் காமராஜ், இதுதொடர்பான கேஸ் ஹிஸ்டரி ஒன்றையும் பகிர்ந்துகொள்கிறார்.

Sexologist Kamaraj

''நடுத்தர வயது ஆண் ஒருவர், மிகுந்த படபடப்புடன் என்னைச் சந்திக்க வந்திருந்தார். 'நான் திருமணம் தாண்டிய உறவுல இருக்கேன் டாக்டர். எனக்கு ஏதாவது பால்வினை நோய் வந்திருக்குமோன்னு பயமா இருக்கு. செக் பண்ணி சொல்லுங்களேன்' என்றார். அவருடைய படபடப்புக்கான காரணம் எனக்கும் புரிந்தது. இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். திருமண பந்தத்தில் இருந்துகொண்டு ஏன் இப்படி நடந்து கொண்டீர்கள் என்றேன். 'அந்தப் பொண்ணுதான் என்னைக் கூப்பிட்டாங்க' என்றார். நீங்கள் சொல்வது உண்மையாகவே இருந்தாலும் நீங்கள் ஏன் அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டீர்கள் என்றேன். 'அவங்களுக்கு வேற யாரும் ஆதரவில்ல... அதனாலதான்...' என்று இழுத்தார்.

திருமணம் என்பதே ஒருவருக்கொருவர் உண்மையாக இருப்போம் என்று எடுத்துக்கொள்கிற உறுதிமொழிதான். நீங்கள் அதை மீறியிருக்கிறீர்கள். இது சரியல்ல. உங்கள் மனைவி உங்கள் மீது வைத்த நம்பிக்கையை உடைத்திருக்கிறீர்கள். நீங்கள் திருமணம் தாண்டி உறவு வைத்திருக்கும் அந்தப் பெண்ணுக்கு வேறு யாரும் ஆதரவு இல்லை என்றெல்லாம் காரணம் சொல்லாதீர்கள். நீங்கள் செய்ததைப் போலவே உங்கள் மனைவியும் திருமணம் தாண்டிய உறவில் இருந்துகொண்டு, 'அந்த ஆணுக்கு யாருமில்ல... அதனாலதான் அவர்கூட செக்ஸ் வெச்சுக்கிட்டேன்' என்று சொன்னால் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா என்றேன். 'நான் செஞ்ச தப்பு நல்லா புரியுது டாக்டர்' என்று கண்கலங்கினார். அதன்பிறகு அவர் கேட்டுக்கொண்டபடி, ஹெச்.ஐ.வி உள்ளிட்ட பால்வினை நோய்கள் தொடர்பான பரிசோதனைகளை செய்யும்படி அறிவுறுத்தினேன். நல்லவேளை, பரிசோதனைகளின் முடிவில் அவருக்கு எந்த நோயும் இல்லையென்பது உறுதியானது.

Sex Education

எல்லோருக்கும் ஒரு வார்த்தை. திருமண உறுதிமொழியை மீறுவது தவறு என்பதில் இரண்டாவது கருத்தில்லை. அதே நேரம், 'தன் துணையைத் தவிர்த்து, வேறொரு நபருடன் பாதுகாப்பில்லாமல் உறவில் ஈடுபட்டவர்கள், உடனடியாக அந்தரங்க உறுப்பை 2 அல்லது 3 முறை சோப்பை பயன்படுத்தி நன்கு சுத்தமாக்க வேண்டும். இதனால், ஹெச்.ஐ.வி உள்ளிட்ட கிருமிகள் உடலுக்குள் நுழைவதை ஓரளவுக்குத் தடுக்க முடியும். இந்த 'ஓரளவு' வாய்ப்பும் ஆண்களுக்கு மட்டுமே... பெண்களுடைய அந்தரங்க உறுப்பின் அமைப்பின்படி, உறவுகொண்ட உடனே வாஷ் செய்தாலும் பலன் கிடைக்காது.

பால்வினை நோய்களே வராமல் இருக்க வேண்டுமென்றால், தன்னுடைய துணையைத் தவிர்த்து வேறு யாருடனும் உறவுகொள்ளக்கூடாது'' என்கிறார் டாக்டர் காமராஜ்.


Comments

Popular posts from this blog

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

Doctor Vikatan: நாள்பட்ட இருமல், கூடவே சிறுநீர்க்கசிவும், காதில் ஒலிக்கும் சத்தமும்... என்ன பிரச்னை?

Doctor Vikatan: என் வயது 50. எனக்கு நாள்பட்ட இருமல் இருக்கிறது. மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து எடுத்துக் கொண்டு இருக்கிறேன். இருமினால் சிறுநீர்க் கசிவு ஏற்படுகிறது. காதில் சில நேரங்களில் அலை அடிப்பது போல் சத்தம் கேட்கிறது. இதற்கெல்லாம் என்ன சிகிச்சை எடுக்க வேண்டும்? - Jayarani, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம். பொது மருத்துவர் அருணாசலம் உங்கள் விஷயத்தில் இருமலைக் கட்டுப்படுத்த முதலில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இரண்டு வாரங்களுக்கு மேல் தொடரும் இருமல், காசநோயின் அறிகுறியாகவும் இருக்கக்கூடும். நிறைய பேர் அது தெரியாமல் இருமல் மருந்தைக் குடித்துக் குடித்து அதைக் கட்டுப்பாட்டில் வைக்க முயல்கிறார்கள். இது தவறு. இருமலுக்கான காரணம் தெரிந்து சிகிச்சை எடுப்பதுதான் சரியானது. இருமலில் வறட்டு இருமல், சளியுடன் கூடிய இருமல், ஆஸ்துமா இருமல் என மூன்று வகை உண்டு. வறட்டு இருமல் என்பது ஒருவித பாக்டீரியாவால் வருவது. ஒவ்வொரு முறை இருமும்போதும் சளியும் சேர்ந்து வருவது, சளி இருமல். மூன்றாவது ஆஸ்துமாவினால், வீஸிங்கால் வருவது. அதாவது காற்றுப்பாதை ச...