Skip to main content

`கடந்த 29 நாள்களில் 189 உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டிருக்கின்றன!' - TRANSTAN தகவல்

தமிழ்நாட்டில் கடந்த 29 நாள்களில் 30 நபர்கள் மூலம், 189 உடல் உறுப்புகள் தானம் பெறப்பட்டுள்ளதாக தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையம் TRANSTAN தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி விபத்து, புற்றுநோய், பிறவிக் குறைபாடு மற்றும் தீக்காயம் உள்ளிட்ட பிரச்னைகளால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உடல் உறுப்புகள், அவர்களின் குடும்பத்தினரின் முழு சம்மதத்தோடு, அறுவை சிகிச்சையின் மூலம் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. அந்த வகையில், ஒவ்வோர் ஆண்டும் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்பவர்களுக்கு மாற்று உறுப்புகள் தேவைப்படுவதன் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

அத்துடன் பொதுமக்களிடையே சாலை பாதுகாப்பு விதிகள் பற்றிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் நாள்தோறும் ஏராளமான சாலை விபத்துகள் ஏற்படுகிறது. போக்குவரத்துக் காவல்துறையினரின் அறிவிப்புகள், போக்குவரத்து விதிகள் என எவற்றையும் மதியாது சரியான பாதுகாப்பு வசதிகள் இல்லாது (ஹெல்மட், சீட் பெல்ட் போடாமல்), பலர் வாகனங்களில் பயணம் செய்கின்றனர். 

இதனால் பெரிய அளவிலான ஆபத்துகளும், சில நேரங்களில் மூளைச்சாவு ஏற்படும் அபாயமும் இருக்கிறது. இதையடுத்து, விபத்துகளில் மூளைச்சாவு அடைந்தவர்களின் உடல் உறுப்புகள் யாருக்கும் பலனில்லாமல் வீணாய் மண்ணுக்குத்தான் செல்கிறது. உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு இல்லாததும் இதற்கான முக்கியக் காரணமாக விளங்குகிறது.

இந்த நிலையில், தமிழகத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் 23-ம் தேதி உடல் உறுப்புகளை தானம் செய்பவர்களுக்கு, அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறும் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்தார்.

அதன்படி, மூளைச்சாவு அடைந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், உடல் உறுப்பு தானம் அளிக்க ஒப்புதல் அளித்தவுடன்தான், உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்படுகின்றன. இதனைத் தொடர்ந்து அந்தந்த மாவட்ட நிர்வாகம் சார்பில் உடல் உறுப்பு தானம் செய்தவரின் இல்லத்தில் நடைபெறும் இறுதிச்சடங்கில், மாவட்ட ஆட்சியர் நேரடியாகப் பங்கேற்பதோடு இறந்தவருக்கு 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செய்யப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு முதல்வர் சட்டமன்றத்தில் வெளியிட்ட இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, உடல் உறுப்பு தானம் செய்பவர்களின்  எண்ணிக்கை கடந்த சில மாதங்களாக அதிகரித்து வருவதோடு, உடல் உறுப்பு தானம் குறித்து சாமானிய மக்களுக்கும்  விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதாகவும், அதிகப்படியான நபர்கள் தற்போது உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வருவதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

முதல்வர் ஸ்டாலின்

இந்த நிலையில் தமிழ்நாட்டில் கடந்த 29 நாள்களில், 30 பேர் தங்களின் உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளனர் என்று, தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையம் (TRANSTAN) தகவல் தெரிவித்துள்ளது. இதன்படி 2024 ஜனவரி 1-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி, 2008 - ஆண்டுக்குப் பிறகு ஒரு மாதத்தில் பதிவான அதிகபட்ச எண்ணிக்கை இதுவாகும்.

தற்போதைய நிலவரப்படி, சிறுநீரகம் 48 பேர், கல்லீரல் 27 பேர், இதயம் 10 பேர், நுரையீரல் 13 பேர் என மொத்தம் 30 நபர்களிடமிருந்து 189  உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டுள்ளதாகவும், இதனால் உடல் உறுப்புகள் மாற்று அறுவை சிகிச்சை செய்யும் பலருக்கு இது பயன்படும் எனவும் TRANSTAN தெரிவித்துள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/47zomWY


Comments

Popular posts from this blog

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

Doctor Vikatan: நாள்பட்ட இருமல், கூடவே சிறுநீர்க்கசிவும், காதில் ஒலிக்கும் சத்தமும்... என்ன பிரச்னை?

Doctor Vikatan: என் வயது 50. எனக்கு நாள்பட்ட இருமல் இருக்கிறது. மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து எடுத்துக் கொண்டு இருக்கிறேன். இருமினால் சிறுநீர்க் கசிவு ஏற்படுகிறது. காதில் சில நேரங்களில் அலை அடிப்பது போல் சத்தம் கேட்கிறது. இதற்கெல்லாம் என்ன சிகிச்சை எடுக்க வேண்டும்? - Jayarani, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம். பொது மருத்துவர் அருணாசலம் உங்கள் விஷயத்தில் இருமலைக் கட்டுப்படுத்த முதலில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இரண்டு வாரங்களுக்கு மேல் தொடரும் இருமல், காசநோயின் அறிகுறியாகவும் இருக்கக்கூடும். நிறைய பேர் அது தெரியாமல் இருமல் மருந்தைக் குடித்துக் குடித்து அதைக் கட்டுப்பாட்டில் வைக்க முயல்கிறார்கள். இது தவறு. இருமலுக்கான காரணம் தெரிந்து சிகிச்சை எடுப்பதுதான் சரியானது. இருமலில் வறட்டு இருமல், சளியுடன் கூடிய இருமல், ஆஸ்துமா இருமல் என மூன்று வகை உண்டு. வறட்டு இருமல் என்பது ஒருவித பாக்டீரியாவால் வருவது. ஒவ்வொரு முறை இருமும்போதும் சளியும் சேர்ந்து வருவது, சளி இருமல். மூன்றாவது ஆஸ்துமாவினால், வீஸிங்கால் வருவது. அதாவது காற்றுப்பாதை ச...