Skip to main content

Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா?

Doctor Vikatan: என் வயது 38. என்னால் லேசான குளிரைக் கூட தாங்கிக்கொள்ள முடிவதில்லை. தியேட்டர், பணியிடம் போன்ற இடங்களில் ஏசி செய்யப்பட்ட சூழலில் என்னால் இயல்பாக இருக்க முடிவதில்லை. மற்றவர்கள் எல்லோரும் இயல்பாக இருக்க நான் மட்டும் நடுங்கியபடி உட்கார்ந்திருக்கிறேன். இதற்கு என்ன காரணம்.... சிகிச்சை தேவைப்படுமா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண்       

ஸ்பூர்த்தி அருண்

இதை மருத்துவமொழியில் 'கோல்டு இன்டாலரென்ஸ்' (Cold intolerance) என்று சொல்வோம்.  இந்தப் பிரச்னை உள்ளவர்களால் எந்தவிதமான குளிர்ச்சியையும் தாங்கிக்கொள்ளவே முடியாது. 

உடலின் வெப்பநிலை ஒரேயடியாகக் குறையும் 'ஹைப்போதெர்மியா' ( Hypothermia) பிரச்னையும் இதுவும் வேறு வேறு. அதாவது கோல்டு இன்டாலரென்ஸ் உள்ளவர்களுக்கு உடல் வெப்பநிலை இயல்பாகவே இருக்கும். ஆனால் அவர்களால் குளிரை மட்டும் தாங்கவே முடியாது. இந்தப் பிரச்னை ஏற்பட பல காரணங்கள் உண்டு. முக்கியமாக உடலின் கொழுப்பு சதவிகிதம் மிகவும் குறைவாக இருந்தால், இப்படி உணரலாம். அதாவது நம் சருமத்தின் அடியில் சப்கியூட்டேனியஸ் கொழுப்பு என ஒன்று இருக்கும். 

ஏசி செய்யப்பட்ட இடம்

அதுதான் உடல்வெப்பநிலையிலிருந்து பாதுகாப்பு அளிப்பது.  இது குறைவாக இருந்தால் அவர்களால் குளிரைத் தாங்கிக்கொள்ள இயலாமல் போகலாம். குளிர்ச்சியான சூழல்களில் இருந்து பழக்கமில்லாதவர்களுக்கும் இப்படி நிகழலாம். திடீரென அப்படிப்பட்ட சூழலில் இருக்க வேண்டி வரும்போது ஆரம்பத்தில் சில நாள்களுக்கு அப்படித்தான் இருக்கும். பழகப் பழக உடல் அந்தக் குளிரைத் தாங்கிக் கொள்ளும்.

அனோரெக்ஸியா என்ற உணவுக்குறைபாடு பிரச்னை சிலருக்கு இருக்கலாம். இந்தக் குறைபாடு உள்ளவர்களுக்கு உடல் எடை அதிகரித்துவிடக்கூடாது என்ற கவலை எப்போதும் இருக்கும். அதனால் உணவு விஷயத்தில் அதிதீவிர எச்சரிக்கை உணர்வோடு இருப்பார்கள்.  இதனாலும் அவர்களது உடலில் கொழுப்பு அளவு குறைந்து, அதன் தொடர்ச்சியாக குளிரைத் தாங்க முடியாத நிலை ஏற்படலாம்.

ரத்தச்சோகை

அடுத்த காரணம் அனீமியா எனப்படும் ரத்தச்சோகை.  அதாவது ரத்தச்சோகை காரணமாக ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு குறையும். அதனாலும் குளிர் தாங்க முடியாத நிலை ஏற்படும். இரும்புச்சத்துக் குறைபாடு, வைட்டமின் பி குறைபாடு போன்றவற்றால் ரத்தச்சோகை வரும். அதை சரிசெய்ய வேண்டியது அவசியம்.

தைராய்டு சுரப்பி குறைவாக வேலை செய்யும் ஹைப்போதைராய்டு பாதிப்பு உள்ளவர்களுக்கும் குளிரைத் தாங்க முடியாத நிலை ஏற்படலாம். சிலருக்கு குளிரைத் தாங்க முடியாதது மட்டுமன்றி, வலி, மரத்துப்போவது, உதறல் போன்றவைகூட இருக்கலாம். இன்னும் சிலருக்கு சருமம் வெளிறியோ, நீலநிறத்திலோ மாறக்கூடும். அதை 'ரேனாட்ஸ் டிசீஸ்' (Raynaud's disease) என்று சொல்வோம்.

தைராய்டு

இந்தப் பிரச்னையில் ரத்த நாளங்கள் சுருங்கி, ரத்த ஓட்டம் பாதிக்கப்படுவதால் சருமம் வெளிறிப்போய், பிறகு நீலநிறமாக மாறும். இதற்கு மருத்துவ ஆலோசனையும் சிகிச்சையும் தேவைப்படும். எனவே உங்கள் விஷயத்தில் இவற்றில் எது காரணம் என்பதைக் கண்டறிந்து அதற்கேற்ற சிகிச்சையை எடுக்கவும். 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

மதச் சுதந்திர அறிக்கை: இந்தியா குறித்து அமெரிக்க ஆய்வறிக்கை சொல்வதென்ன?!

இந்தியாவின் பிரதமராக மூன்றாவது முறை தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சியில், சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் இந்தியாவில் அதிகரித்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவின் வெளியுறவுத்துறை நேற்று வெளியிட்ட, 2023-ம் ஆண்டுக்கான சர்வதேச மத சுதந்திரம் குறித்த ஆய்வறிக்கையில், ``சிறுபான்மையினர், குறிப்பாக முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மீதான வன்முறை தாக்குதல்கள், கொலைகள், வழிபாட்டு தளங்களை சேதப்படுத்துதல் உள்ளிட்டவை அதிகரித்திருக்கிறது.அமெரிக்கா முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகள், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தல், அடிப்படையில் பாரபட்சமான சட்டம் என ஐ.நா குறிப்பிட்டிருக்கும் குடியுரிமைச் சட்டம் அமல்படுத்தியது, சட்டவிரோத கட்டுமானங்களை அகற்றுவது என்ற பெயரில் இஸ்லாமிய சொத்துக்களை இடிப்பது, ரயிலில் ஒரு பாதுகாப்பு அதிகாரி முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்துக்காக மூன்று முஸ்லிம்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது, பசு பாதுகாப்பு என்ற பெயரில் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்துவது, சில நேரங்களில் அது கொலையில்...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

Doctor Vikatan: நாள்பட்ட இருமல், கூடவே சிறுநீர்க்கசிவும், காதில் ஒலிக்கும் சத்தமும்... என்ன பிரச்னை?

Doctor Vikatan: என் வயது 50. எனக்கு நாள்பட்ட இருமல் இருக்கிறது. மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து எடுத்துக் கொண்டு இருக்கிறேன். இருமினால் சிறுநீர்க் கசிவு ஏற்படுகிறது. காதில் சில நேரங்களில் அலை அடிப்பது போல் சத்தம் கேட்கிறது. இதற்கெல்லாம் என்ன சிகிச்சை எடுக்க வேண்டும்? - Jayarani, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம். பொது மருத்துவர் அருணாசலம் உங்கள் விஷயத்தில் இருமலைக் கட்டுப்படுத்த முதலில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இரண்டு வாரங்களுக்கு மேல் தொடரும் இருமல், காசநோயின் அறிகுறியாகவும் இருக்கக்கூடும். நிறைய பேர் அது தெரியாமல் இருமல் மருந்தைக் குடித்துக் குடித்து அதைக் கட்டுப்பாட்டில் வைக்க முயல்கிறார்கள். இது தவறு. இருமலுக்கான காரணம் தெரிந்து சிகிச்சை எடுப்பதுதான் சரியானது. இருமலில் வறட்டு இருமல், சளியுடன் கூடிய இருமல், ஆஸ்துமா இருமல் என மூன்று வகை உண்டு. வறட்டு இருமல் என்பது ஒருவித பாக்டீரியாவால் வருவது. ஒவ்வொரு முறை இருமும்போதும் சளியும் சேர்ந்து வருவது, சளி இருமல். மூன்றாவது ஆஸ்துமாவினால், வீஸிங்கால் வருவது. அதாவது காற்றுப்பாதை ச...