Skip to main content

Doctor Vikatan: எடையைக் குறைத்ததால் ஏற்பட்ட ஸ்ட்ரெச் மார்க்ஸ்... நிரந்தரமாக நீக்க வாய்ப்பு உண்டா?

Doctor Vikatan: எனக்கு பிரசவமாகி 5 வருடங்களாகின்றன. இன்னும் பிரசவமான தழும்புகள் வயிற்றில் மறையாமல் இருக்கின்றன. அவற்றை நிரந்தரமாக நீக்க முடியுமா....? என்னுடைய தங்கைக்கு உடல் எடை குறைத்ததன் விளைவாக தோள்பட்டை, முதுகு போன்ற பகுதிகளில் தழும்புகள் இருக்கின்றன. அதையும் நீக்க முடியுமா?

பதில் சொல்கிறார் கோயம்புத்தூரைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவரும் அழகியல்  மருத்துவருமான நித்யா ரங்கநாதன்

மகப்பேறு மருத்துவரும் அழகியல் மருத்துவருமான நித்யா ரங்கநாதன்

முதலில் ஸ்ட்ரெச் மார்க் எனப்படும் தழும்புகள் ஏன் ஏற்படுகின்றன என புரிந்துகொள்ளுங்கள். சருமமானது அளவுக்கு அதிகமாக விரிவடைவதால், அதன் எலாஸ்டிசிட்டி போய், தசைநார்கள் உடைவதாலேயே ஸ்ட்ரெச் மார்க்ஸ் ஏற்படுகின்றன.

கர்ப்ப காலத்தில் வயிற்றுத் தசைகள் மெள்ள மெள்ள விரிவடையத் தொடங்கும். அதனால் சருமம் விரிவடைந்து எலாஸ்டிக் தன்மையை இழந்து தழும்புகள் உருவாகக் காரணமாகிறது. கர்ப்பிணிகளுக்கு மட்டுமன்றி, மற்றவர்களுக்கும் இப்படி சருமத்தில் ஸ்ட்ரெச் மார்க்ஸ் வரலாம். உடல் எடை அதிகமாக உள்ளவர்களுக்கும் திடீரென உடல் எடை குறைப்பவர்களுக்கும் இது சகஜம்.  திடீரென ஜிம் போய் எடையைத் தூக்கி வொர்க் அவுட் செய்வோருக்கு ஸ்ட்ரெச் மார்க் வரலாம். 

தழும்பு

ஸ்ட்ரெச் மார்க்கில் பிங்க் நிற ஸ்ட்ரெட்ச் மார்க், வெள்ளை நிற ஸ்ட்ரெச் மார்க் என இரண்டு உண்டு.  பிங்க் நிற ஸ்ட்ரெச் மார்க் என்பது ஆரம்ப நிலையில் இருப்பதால் அதறகு சிகிச்சை அளிப்பதும் சற்று சுலபமாக இருக்கும்.  வெள்ளை நிற ஸ்ட்ரெச் மார்க் என்பது தசை நார்கள் உடைவதால் ஏற்படுவது. அது கிட்டத்தட்ட நிரந்தர தழும்பாகவே மாறிவிடும்.

ஸட்ரெச் மார்க்கை 100 சதகிவிதம் நீக்கிவிட முடியுமா என்றால் முடியாது. இதைத் தவிர்க்கலாமே தவிர ரிவர்ஸ் செய்ய வாய்ப்பில்லை. கர்ப்ப காலத்தில் 3-வது மாதத்தில் இருந்தே சருமத்துக்கு மாய்ஸ்ச்சரைசர் உபயோகித்து அதை வறட்சியின்றி வைத்துக்கொள்ள வேண்டும். செராமைடு உள்ள மாய்ஸ்ச்சரைசர் உபயோகிப்பது சிறந்தது. 

Weightloss

வெயிட்லாஸ் முயற்சியில் இருப்போருக்கும் இது முக்கியம். வெயிட் லிஃப்டிங் செய்வது, ஜிம்முக்குச் செல்வதற்கு முன்பு சருமத்தை நன்கு மாய்ஸ்ச்சரைஸ் செய்ய வேண்டும். திடீரென எடையைக் குறைப்பது ஸ்ட்ரெச் மார்க்ஸ் வரும் வாய்ப்பை அதிகப்படுத்தும்.  ஏற்கெனவே சொன்னது போல ஸ்ட்ரெச் மார்க்கை முழுமையாக நீக்க முடியாது. அதன் வீரியத்தை சற்று குறைக்கலாம். மருத்துவரிடம் சென்று எடுத்துக்கொள்ளும் சிகிச்சை, வீட்டிலேயே பின்பற்றும் சிகிச்சை என இதற்கு இரண்டு வகையான தீர்வுகள் உள்ளன.  கெமிக்கல் பீல், மைக்ரோ நீட்லிங் உள்ளிட்ட லேசர் சிகிச்சைகள் உள்ளன. 

இந்தச் சிகிச்சைகளாலும் உங்கள் தழும்புகளை 100 சதவிகிதம் ரிவர்ஸ் செய்ய முடியாது  உங்கள் உடலின் தன்மை, கொலாஜென் அளவு, ஸ்ட்ரெச் மார்க்கின் தீவிரம் போன்றவற்றைப் பொறுத்து இது தீர்மானிக்கப்படும். ஸ்ட்ரெச் மார்க் பிரச்னை உங்களை ரொம்பவே ஸ்ட்ரெஸ்ஸுக்கு உள்ளாக்குவதாக நினைத்தால் அதற்கான சிகிச்சையை எடுத்துக்கொள்ளலாம்.  

கர்ப்பம்

பெரும்பாலும் பிரசவத் தழும்புகள் குறித்து பலரும் கவலை கொள்வதில்லை. அதை  பெருமையாகவே எடுத்துக் கொண்டு கடந்து போகிறார்கள் பலரும். அதையும் தாண்டி இந்தத் தழும்புகள் உங்களைத் தொந்தரவு செய்தால் சிகிச்சை எடுக்கலாம். 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...