Skip to main content

Doctor Vikatan: உண்மையிலேயே சரும அழகுக்கு உதவுமா குங்குமப்பூ?

Doctor Vikatan: பிறக்கும் குழந்தை நிறமாக இருக்க வேண்டும் என்பதற்காக கர்ப்ப காலத்தில் குங்குமப்பூ எடுத்துக்கொள்ளும் வழக்கம் இன்றும் இருக்கிறது. குங்குமப்பூவுக்கு வேறு மருத்துவ பலன்கள் உண்டா.... அது உண்மையிலேயே சரும அழகுக்கு உதவுமா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் வரலட்சுமி

அரசு சித்த மருத்துவர் வரலட்சுமி

குழந்தை அழகாக, சிவப்பாகப் பிறக்க வேண்டும் என்பதற்காக, கர்ப்ப காலத்தில் மட்டுமே நினைவில் வைத்துக்கொள்ளப்படுகிற குங்குமப்பூவுக்கு வேறு சில பலன்களும் உள்ளன.

மிக முக்கியமாக நரம்பியல் மண்டலத்தைத் தூண்டக்கூடிய சக்தி கொண்டது குங்குமப்பூ. வலிப்புநோய் மாதிரியான தீவிர பாதிப்புக்குள்ளானவர்களுக்குக்கூட இது மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. சிறிதளவு குங்குமப்பூவை பாலில் சேர்த்துக் கொதிக்கவைத்துக் குடிக்கலாம். வெற்றிலை போடும் பழக்கமுள்ளவர்கள், வெற்றிலையோடு சிறிது குங்குமப்பூ, ஏலக்காய் சேர்த்துச் சாப்பிட்டால் பசி உணர்வு தூண்டப்படும். சித்த மருத்துவர்கள் பரிந்துரைக்கும் சில மாத்திரைகளையும் வெற்றிலையோடு சேர்த்துச் சாப்பிடலாம்.

நுண்ணூட்டச்சத்துகளை உடல் முழுமையாக கிரகித்துக்கொள்ள குங்குமப்பூ உதவும். வளர்சிதை மாற்ற இயக்கத்தைச் சீராக வைக்கும். சுவாசப்பாதை கோளாறுகள் உள்ளவர்கள், வீஸிங் பிரச்னை உள்ளவர்கள் வெற்றிலையோடு குங்குமப்பூவும் மிளகும்  சேர்த்து எடுத்துக்கொள்ளலாம். நீர்க்கோவை மாத்திரை போல குங்குமப்பூவை அரைத்து  பற்றுப்போட தலைவலி குணமாகும்.

குங்குமப்பூ!

சிலர் எப்போதும் அதீத சிந்தனையில் இருப்பார்கள். அதன் காரணமாக அவர்களுக்கு சரியான தூக்கம் இருக்காது. ஸ்ட்ரெஸ்ஸும் இருக்கும். எந்தக் காரணத்துக்காக தூக்கம் இல்லாவிட்டாலும் குங்குமப்பூ உதவும் என அர்த்தமில்லை. நரம்பு தொடர்பான பிரச்னைகளால் தூக்கமின்றி தவிப்போருக்கு குங்குமப்பூ நல்ல, ஆழ்ந்த உறக்கத்தையும் அமைதியையும் தரும்.

சருமப் பளபளப்புக்கான தன்மைகள் கொண்டது குங்குமப்பூ. வைட்டமின் ஈ, குளுட்டோதயாமின் போன்ற சரும அழகுக்கான தன்மைகள் உள்ளதால், சருமத்தை மென்மையாக்கும். சித்தா, ஆயுர்வேத மருத்துவத்தில் குங்குமாதி லேபம் என்பது மிகவும் பிரபலம். குங்குமப்பூவிலிருந்து தயாரிக்கப்படும் அந்தத் தைலத்தை வெளிப்பூச்சாகப் பூசிக்கொள்ளும்போது சருமம் பளபளப்பாக மாறும்.

கர்ப்பிணிகள் குங்குமப்பூவை அளவுக்கதிகமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. இரண்டு, மூன்று இதழ்களில் தொடங்கி, 15 இதழ்கள் வரை எடுத்துக்கொள்ளலாம். 

பிரசவத்துக்குப் பிறகு கர்ப்பப்பை சுருங்க உதவும்...

பிரசவத்துக்குப் பிறகு கர்ப்பப்பை சுருங்கவும் ப்ளீடிங் அதிகரிக்காமல் இருக்கவும் குங்குமப்பூ உதவும். இத்தனை நல்ல தன்மைகள் இருந்தாலும் குங்குமப்பூவில் நிறைய கலப்படங்கள் வருகின்றன. தேங்காய்ப்பூவை சாயமேற்றி குங்குமப்பூ என்ற பெயரில் விற்கிறார்கள். தரமான குங்குமப்பூவை, அளவோடு உபயோகிக்கும்போது அது அருமருந்தாக வேலை செய்யும் என்பதில் சந்தேகமில்லை.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...