Skip to main content

ஃப்ளூ காய்ச்சல் பரவாமல் தடுக்க, இதையெல்லாம் கண்டிப்பா செய்யுங்க..! - மருத்துவர் அறிவுறுத்தல்!

மழைக்காலம் என்பதால் தமிழகத்தில் காய்ச்சல், இருமல், சளித் தொந்தரவு போன்ற பிரச்னைகள் பரவலாக இருப்பதைக் காண முடிகிறது. இந்நிலையில், ``தமிழ்நாட்டில் பருவநிலை மாற்றத்தால் ஃப்ளூ காய்ச்சல் அதிகமாகப் பரவி வருகிறது. அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும்.

மழை

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற போதிய படுக்கை வசதிகளை ஏற்படுத்த வேண்டும்" என்று என்று தமிழக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கூறியுள்ளார். அந்த வகையில் தற்போது கோவை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஃப்ளூ காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது என்றும் செய்திகள் வெளியாகின்றன.

ஃப்ளூ காய்ச்சல் அறிகுறிகள், தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விளக்குகிறார் பொது மருத்துவர் விஷால்.

''குளிர்காலத்தில் அதிகமாகத் தொற்று நோய்கள் பரவக்கூடும். பருவநிலை மாற்றத்தின் காரணமாக ஏற்படக்கூடிய ஃப்ளூ காய்ச்சல் குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை பாதிக்கலாம்.

cold and fever

Influenza- A, B, மற்றும் C வைரஸ் மூலமாக இந்த நோய் பரவுகிறது. இது வைரஸ் நோய்த்தொற்று என்பதால் உடல் சோர்வு, சளி, மூக்கிலிருந்து நீர் வடிதல், தொண்டை வலி, இருமல், மூச்சுத் திணறல், உடல்வலி, தலைவலி போன்ற அறிகுறிகள் ஏற்படும். தற்போது இன்ஃப்ளூயென்சா வைரஸ் மட்டுமன்றி H1N1 மற்றும் H3N2 ஆகிய வைரஸ் மூலமாகவும் ஃப்ளூ காய்ச்சல்கள் பரவி வருகின்றன.

இந்த வைரஸ் காய்ச்சலானது, பெரும்பாலும் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து மற்றவர்களுக்குப் பரவுகிறது. ஒருவர் இருமும்போதும் தும்மும்போதும் வைரஸ் வேகமாகப் பரவுகிறது. பொதுவாக ஏழு நாள்களுக்கு காய்ச்சலின் தாக்கம் இருக்கும்.

தும்மல்

உயர் ரத்தஅழுத்தம், ஆஸ்துமா, இதயநோய் இருப்பவர்களுக்கு தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே, காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்வது மிகவும் அவசியம் ஆகும்.

ஃப்ளூ காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கான வழி முறைகள்:

1. தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்துக் குடிக்க வேண்டும். அடுத்தவர்களிடமிருந்து தண்ணீர் வாங்கிக் குடிப்பதைத் தவிர்த்துவிடுவது நல்லது.

2. தொண்டை வலி இருந்தால் வெந்நீரில் உப்பு போட்டு வாய்க் கொப்பளிக்க வேண்டும்.

அடுத்தவர்களிடமிருந்து தண்ணீர் வாங்கிக் குடிப்பதை தவிர்த்துவிடுவது நல்லது.

3. வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்பிய பின் கை, கால்களை சோப்பு போட்டு கழுவிய பிறகு வீட்டிற்குள் நுழைய வேண்டும். அடிக்கடி கை கழுவுவதும் நல்லது.

4. வைட்டமின்- சி மற்றும் புரதச்சத்துள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

5. முக்கியமாக வெளியில் செல்லும்போது மாஸ்க் அணிந்துகொண்டால் நோய் பரவுவதிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம்.

6. இருமும்போதும் தும்மும்போதும் முகத்தை மூடிக்கொள்ள வேண்டும்.

மருத்துவர் விஷால்

7. இந்தியாவில் இன்ஃப்ளூயென்சா தடுப்பூசி செலுத்திக்கொள்வது கட்டாயமில்லை. இருப்பினும் முதியோர், இதயநோய், HIV தொற்று, சர்க்கரைநோய், ஆஸ்துமா, உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் மருத்துவரின் அறிவுறுத்தலின்படி தேவைப்பட்டால் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.

ஃப்ளூ காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு நீர்ச்சத்து இழப்பு ஏற்படும் என்பதால் தண்ணீர் அதிகமாக அருந்த வேண்டும். உடல்வலி, உடல் சோர்வு போன்ற அறிகுறிகள் இருக்கும் என்பதால் போதிய ஓய்வு எடுக்க வேண்டும்.

mask

தன்னையும் தன்னைச் சுற்றியுள்ள இடத்தையும் தூய்மையாக வைத்துக்கொண்டால் தொற்று நோய்கள் பரவுவதைத் தவிர்க்கலாம். போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டு, மருத்துவர்களின் ஆலோசனைக்கேற்றபடி செயல்பட்டால் இம்மாதிரியான நோய்கள் பரவுவதைத் தவிர்க்கவும், பாதிப்பு ஏற்பட்டால் எளிதில் குணமடையவும் முடியும்" என்றார்.


Comments

Popular posts from this blog

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

மரபணு சிகிச்சையில் செவித்திறன் பெற்ற சிறுமி - அனைத்து பரம்பரை நோய்களுக்கும் தீர்வு கிடைக்குமா?

நம் உடல், பல கோடான கோடி செல்களால் ஆனது. இந்தச் செல்களில் சுமார் 22 ஆயிரம் மரபணுக்கள் உள்ளன. பெரும்பாலான செல்களில் உட்கரு உண்டு. இங்குதான் DNA மூலக்கூறுகள் உள்ளன. இந்த DNA மூலக்கூறுகள்தான் இந்த மரபணுத் தகவல்களைச் சுமந்து கொண்டு உள்ளன. இந்த மரபணுக்களின் இயக்கம்தான், நம் இயக்கம். உதாரணமாக, நம் உமிழ் நீரில் அமைலேஸ் என்ற ஒரு நொதி உள்ளது. இந்த நொதிதான் நம் உணவில் உள்ள மாவுப் பொருளைச் சிதைத்து குளுக்கோஸை உற்பத்தி செய்கிறது. இந்த நொதியை உற்பத்தி செய்யத் தேவையான தகவல், AMY1 என்ற மரபணுவில் உள்ளது. இந்த மரபணுவில் உள்ள தகவலின் படிதான் அமைலேஸ் என்ற ஒரு நொதி தயாரிக்கப்படுகிறது. அதாவது, AMY1 என்ற மரபணுவில் ஏதாவது தவறு இருந்தால், அமைலேஸ் என்ற ஒரு நொதி செயலிழக்கும். இந்த நிலையில் உள்ள மரபணு நோயாளி, உணவு சாப்பிட்டால் அவருக்குச் செரிமானமாகாது. மரபணு அதிகரிக்கும் உணவுத் தேவை: தொழில்நுட்பத்தில் தயாராகும் செயற்கை மீன், இறைச்சி... உடலுக்கு நல்லதா..? மரபணுவில் உள்ள தகவலில் தவறு இருந்தால், மரபணு நோய் ஏற்படும். இதனைப் பரம்பரை நோய் எனலாம். காரணம், இந்த நோய் பெற்றோர்கள்/மூதாதையர்களிடமிருந்து பிள்ளைகளுக்கு ...