Skip to main content

Doctor Vikatan: இரண்டு பிரச்னைகள்... ஒரே நேரத்தில் இருவேறு ஆன்டிபயாடிக் எடுத்துக்கொள்வது சரியானதா?

Doctor Vikatan: கடந்த வாரம் எனக்கு சரும அலர்ஜி வந்தது. அதற்காக சரும மருத்துவரை அணுகியபோது, 10 நாள்களுக்கு ஆன்டிபயாடிக் எடுத்துக்கொள்ளச் சொன்னார். இரண்டு நாள்கள் அந்த மாத்திரைகளை எடுத்த நிலையில் வைரல் ஃபீவர் வந்தது. அதற்காக பொது மருத்துவரை அணுகிய போது அவரும் ஆன்டிபயாடிக் பரிந்துரைத்தார்.

ஒரே நேரத்தில் இரண்டு பிரச்னைகளுக்காக இருவேறு ஆன்டிபயாடிக் எடுப்பது சரியா? சரும மருத்துவர் தான் பரிந்துரைத்ததை எடுக்க வேண்டாம் என்கிறார். பொது மருத்துவரோ இரண்டையும் எடுத்துக்கொள்ளலாம் என்கிறார். இதை எப்படிப் புரிந்துகொள்வது?

தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் பூங்குழலி

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் பூங்குழலி.

``இதில் இரண்டு, மூன்று விஷயங்களை கவனிக்க வேண்டியிருக்கிறது. தேவை ஏற்படும்போது ஒரே நேரத்தில் இரண்டு ஆன்டிபயாடிக் எடுப்பது தவறில்லை. அதாவது ஒன்றுடன் இன்னொன்று ரியாக்ட் செய்யும், ஒன்றை எடுப்பதால் இன்னொன்றின் வீரியம் குறையும், வேலை செய்யாது, ஒவ்வாமை வரும் என்ற நிலையில் அது குறித்து யோசிக்கலாம்...இப்படி எந்தப் பிரச்னையும் இல்லை என்ற நிலையில் ஒரே நேரத்தில் இரண்டு ஆன்டிபயாடிக் எடுக்கலாம்.

ஆன்டிபயாடிக் எடுப்பதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம் ஒன்று இருக்கிறது. ஆன்டிபயாடிக் மருந்துகளைப் பொறுத்தவரை அவற்றை ஐந்து நாள்கள், பத்து நாள்கள் எடுக்க வேண்டும் என ஒரு விதி உண்டு.

medicine intake!

மருத்துவர் குறிப்பிடும் நாள்களுக்கு அந்த ஆன்டிபயாடிக்கை எடுத்து முடித்துவிட வேண்டும். பிரச்னை சரியாகிவிட்டதே என அதைப் பாதியிலேயே நிறுத்தினால், அடுத்த முறை அந்த ஆன்டிபயாடிக் உங்களுக்கு வேலை செய்யாமல் போகலாம். அதைவிட வீரியமான ஆன்டிபயாடிக் உங்களுக்குத் தேவைப்படலாம்.

எனவே உங்கள் பொது மருத்துவர் அறிவுறுத்தியபடி இரண்டு ஆன்டிபயாடிக்குகளையும் எடுத்துக்கொள்ளலாம், தவறில்லை. அவர் இரண்டு ஆன்டிபயாடிக்குகளின் தன்மையையும் வீரியத்தையும் பார்த்துதான் உங்களுக்கு அப்படி அறிவுறுத்தியிருப்பார். எனவே இரண்டையும் மருத்துவர் குறிப்பிட்ட நாள்களுக்கு எடுத்து முடித்துவிடுவதுதான் நல்லது.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...

மரபணு சிகிச்சையில் செவித்திறன் பெற்ற சிறுமி - அனைத்து பரம்பரை நோய்களுக்கும் தீர்வு கிடைக்குமா?

நம் உடல், பல கோடான கோடி செல்களால் ஆனது. இந்தச் செல்களில் சுமார் 22 ஆயிரம் மரபணுக்கள் உள்ளன. பெரும்பாலான செல்களில் உட்கரு உண்டு. இங்குதான் DNA மூலக்கூறுகள் உள்ளன. இந்த DNA மூலக்கூறுகள்தான் இந்த மரபணுத் தகவல்களைச் சுமந்து கொண்டு உள்ளன. இந்த மரபணுக்களின் இயக்கம்தான், நம் இயக்கம். உதாரணமாக, நம் உமிழ் நீரில் அமைலேஸ் என்ற ஒரு நொதி உள்ளது. இந்த நொதிதான் நம் உணவில் உள்ள மாவுப் பொருளைச் சிதைத்து குளுக்கோஸை உற்பத்தி செய்கிறது. இந்த நொதியை உற்பத்தி செய்யத் தேவையான தகவல், AMY1 என்ற மரபணுவில் உள்ளது. இந்த மரபணுவில் உள்ள தகவலின் படிதான் அமைலேஸ் என்ற ஒரு நொதி தயாரிக்கப்படுகிறது. அதாவது, AMY1 என்ற மரபணுவில் ஏதாவது தவறு இருந்தால், அமைலேஸ் என்ற ஒரு நொதி செயலிழக்கும். இந்த நிலையில் உள்ள மரபணு நோயாளி, உணவு சாப்பிட்டால் அவருக்குச் செரிமானமாகாது. மரபணு அதிகரிக்கும் உணவுத் தேவை: தொழில்நுட்பத்தில் தயாராகும் செயற்கை மீன், இறைச்சி... உடலுக்கு நல்லதா..? மரபணுவில் உள்ள தகவலில் தவறு இருந்தால், மரபணு நோய் ஏற்படும். இதனைப் பரம்பரை நோய் எனலாம். காரணம், இந்த நோய் பெற்றோர்கள்/மூதாதையர்களிடமிருந்து பிள்ளைகளுக்கு ...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...