Skip to main content

``இதெல்லாம் அலர்ஜி” லிஸ்ட்டை நீட்டிய கஸ்டமர்... டென்ஷன் ஆன ரெஸ்டாரன்ட் ஊழியர்..!

சிலருக்கு குறிப்பிட்ட சில உணவுகளைச் சாப்பிட்டால் அலர்ஜி ஏற்படும். மீன்கள், காளான்கள் சாப்பிட்டால் அலர்ஜி உண்டாகும் என பலர் கூறுவதைக் கேட்டிருப்போம். அதனால் தாங்கள் சாப்பிடும் உணவுகளை மிகவும் கவனமாகப் பார்த்துப் பார்த்து சாப்பிடும் பழக்கம் இவர்களிடையே இருக்கும்.

உணவு (சித்தரிப்பு படம்)

இன்னும் ஹோட்டல்களுக்கு செல்லும்போது கூடுதல் கவனத்துடன் தாங்கள் உண்ணும் உணவுகளை ஆராய்ந்த பின்னரே சாப்பிடுவார்கள்.

இந்த நிலையில் நபர் ஒருவர் உணவகத்தில் தனக்கு அலர்ஜி இருப்பதாக 17 உணவுப் பொருள்களைக் குறிப்பிட்டு பேப்பர் ஒன்றை கொடுத்திருக்கிறார். இந்த பேப்பரை புகைப்படம் எடுத்து ரெட்டிட் தள பயனர் ஒருவர் வெளியிட அது இணையவாசிகள் மத்தியில் கவனத்தைப் பெற்றது.

அந்தப் புகைப்படத்தில், ``பின்வரும் உணவுகளை உண்ண முடியாது. புதிதாக இல்லாத அல்லது உறையாமல் இருக்கும் புரதம், அவகேடோ, உலர் பழங்கள், ஸ்ட்ராபெர்ரி, வாழைப்பழங்கள், கத்திரிக்காய், கீரை, சோயா, தக்காளி, சாக்லேட், பீன்ஸ், ஆல்கஹால், ஊறுகாய், பழைய சீஸ், சில மீன்கள் மற்றும் வெண்ணெய் போன்ற பல உணவுப் பொருள்களுக்கு அலர்ஜி உள்ளது'' என அதில் குறிக்கப்பட்டுள்ளது.

17 உணவுகளுக்கு அலர்ஜி!

இதனைக் கண்ட பலரும் சில உணவுகளில் அலர்ஜி இருக்கலாம். இத்தனை உணவுகளும் அலர்ஜியா என வியந்துள்ளனர்.

அதோடு ஒருவர் கமென்ட்டில், `இப்படி ஒருவர் 17 உணவு பொருள்கள் அலர்ஜி என பேப்பரை நீட்டினால், நீங்கள் வீட்டிலேயே சமைத்துச் சாப்பிடுவது நல்லது. செய்யப்படும் உணவுகளுக்கு இடையில் நீங்கள் குறிப்பிட்டுள்ள உணவுகள் சேர்க்கப்படாமல் இருக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதத்தையும் உணவகத்தால் அளிக்க முடியாது. வெளியே அனுப்பி விடுவேன்’’ என்று கூறியுள்ளார். 

அலர்ஜியை ஏற்படுத்தும் உணவுகளைச் சாப்பிடும் பட்சத்தில், சில நேரங்களில் உயிருக்கே கூட ஆபத்து ஏற்படலாம். எனவே குறிப்பிட்ட சில உணவுகளைச் சாப்பிட்டால் அலர்ஜி உண்டாகும் எனச் சொல்லும் நபர்கள் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...