Skip to main content

``இதெல்லாம் அலர்ஜி” லிஸ்ட்டை நீட்டிய கஸ்டமர்... டென்ஷன் ஆன ரெஸ்டாரன்ட் ஊழியர்..!

சிலருக்கு குறிப்பிட்ட சில உணவுகளைச் சாப்பிட்டால் அலர்ஜி ஏற்படும். மீன்கள், காளான்கள் சாப்பிட்டால் அலர்ஜி உண்டாகும் என பலர் கூறுவதைக் கேட்டிருப்போம். அதனால் தாங்கள் சாப்பிடும் உணவுகளை மிகவும் கவனமாகப் பார்த்துப் பார்த்து சாப்பிடும் பழக்கம் இவர்களிடையே இருக்கும்.

உணவு (சித்தரிப்பு படம்)

இன்னும் ஹோட்டல்களுக்கு செல்லும்போது கூடுதல் கவனத்துடன் தாங்கள் உண்ணும் உணவுகளை ஆராய்ந்த பின்னரே சாப்பிடுவார்கள்.

இந்த நிலையில் நபர் ஒருவர் உணவகத்தில் தனக்கு அலர்ஜி இருப்பதாக 17 உணவுப் பொருள்களைக் குறிப்பிட்டு பேப்பர் ஒன்றை கொடுத்திருக்கிறார். இந்த பேப்பரை புகைப்படம் எடுத்து ரெட்டிட் தள பயனர் ஒருவர் வெளியிட அது இணையவாசிகள் மத்தியில் கவனத்தைப் பெற்றது.

அந்தப் புகைப்படத்தில், ``பின்வரும் உணவுகளை உண்ண முடியாது. புதிதாக இல்லாத அல்லது உறையாமல் இருக்கும் புரதம், அவகேடோ, உலர் பழங்கள், ஸ்ட்ராபெர்ரி, வாழைப்பழங்கள், கத்திரிக்காய், கீரை, சோயா, தக்காளி, சாக்லேட், பீன்ஸ், ஆல்கஹால், ஊறுகாய், பழைய சீஸ், சில மீன்கள் மற்றும் வெண்ணெய் போன்ற பல உணவுப் பொருள்களுக்கு அலர்ஜி உள்ளது'' என அதில் குறிக்கப்பட்டுள்ளது.

17 உணவுகளுக்கு அலர்ஜி!

இதனைக் கண்ட பலரும் சில உணவுகளில் அலர்ஜி இருக்கலாம். இத்தனை உணவுகளும் அலர்ஜியா என வியந்துள்ளனர்.

அதோடு ஒருவர் கமென்ட்டில், `இப்படி ஒருவர் 17 உணவு பொருள்கள் அலர்ஜி என பேப்பரை நீட்டினால், நீங்கள் வீட்டிலேயே சமைத்துச் சாப்பிடுவது நல்லது. செய்யப்படும் உணவுகளுக்கு இடையில் நீங்கள் குறிப்பிட்டுள்ள உணவுகள் சேர்க்கப்படாமல் இருக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதத்தையும் உணவகத்தால் அளிக்க முடியாது. வெளியே அனுப்பி விடுவேன்’’ என்று கூறியுள்ளார். 

அலர்ஜியை ஏற்படுத்தும் உணவுகளைச் சாப்பிடும் பட்சத்தில், சில நேரங்களில் உயிருக்கே கூட ஆபத்து ஏற்படலாம். எனவே குறிப்பிட்ட சில உணவுகளைச் சாப்பிட்டால் அலர்ஜி உண்டாகும் எனச் சொல்லும் நபர்கள் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.


Comments

Popular posts from this blog

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

Doctor Vikatan: நாள்பட்ட இருமல், கூடவே சிறுநீர்க்கசிவும், காதில் ஒலிக்கும் சத்தமும்... என்ன பிரச்னை?

Doctor Vikatan: என் வயது 50. எனக்கு நாள்பட்ட இருமல் இருக்கிறது. மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து எடுத்துக் கொண்டு இருக்கிறேன். இருமினால் சிறுநீர்க் கசிவு ஏற்படுகிறது. காதில் சில நேரங்களில் அலை அடிப்பது போல் சத்தம் கேட்கிறது. இதற்கெல்லாம் என்ன சிகிச்சை எடுக்க வேண்டும்? - Jayarani, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம். பொது மருத்துவர் அருணாசலம் உங்கள் விஷயத்தில் இருமலைக் கட்டுப்படுத்த முதலில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இரண்டு வாரங்களுக்கு மேல் தொடரும் இருமல், காசநோயின் அறிகுறியாகவும் இருக்கக்கூடும். நிறைய பேர் அது தெரியாமல் இருமல் மருந்தைக் குடித்துக் குடித்து அதைக் கட்டுப்பாட்டில் வைக்க முயல்கிறார்கள். இது தவறு. இருமலுக்கான காரணம் தெரிந்து சிகிச்சை எடுப்பதுதான் சரியானது. இருமலில் வறட்டு இருமல், சளியுடன் கூடிய இருமல், ஆஸ்துமா இருமல் என மூன்று வகை உண்டு. வறட்டு இருமல் என்பது ஒருவித பாக்டீரியாவால் வருவது. ஒவ்வொரு முறை இருமும்போதும் சளியும் சேர்ந்து வருவது, சளி இருமல். மூன்றாவது ஆஸ்துமாவினால், வீஸிங்கால் வருவது. அதாவது காற்றுப்பாதை ச...