Skip to main content

`` குழந்தைகள் கூச்சல் போட்டால், பெற்றோருக்கு அபராதம்" ஹோட்டலின் பாலிசி... ஏன் தெரியுமா?

பல உணவகங்கள் வித்தியாசமான ஆஃபர்களையும், ரூல்ஸ்களையும் அறிமுகப்படுத்தி கவனம் பெறுவதுண்டு. அந்தவகையில் அமெரிக்காவின் ஜார்ஜியாவில் உள்ள உணவகம் ஒன்று மோசமான பெற்றோருக்குக் கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவித்து கவனம் பெற்றுள்ளது. 

அட்லாண்டாவின் ப்ளூ ரிட்ஜ் மலைகளில் அமைந்துள்ள டோக்கோவா ரிவர்சைடு உணவகத்தின் மெனுவில் விதிமுறைகள் வித்தியாசமாக இருந்ததால் அவற்றை ரெட்டிட் தள பயனர் ஒருவர் பதிவிட்டுள்ளார். foodDoctor Vikatan: அடிக்கடி உதடுகளில் வரும் கொப்புளங்கள்... பல்லி எச்சம்தான் காரணமா?

அதில், ``மோசமான பெற்றோருக்கு இந்த உணவகம் கூடுதல் கட்டணம் வசூலிக்கிறது. பெரியவர்களுக்கான கூடுதல் கட்டணம் எனக் குறிப்பிடப்பட்டு $$$ எனத் தொகையை வெளிப்படுத்தாமல் குறிக்கப்பட்டுள்ளது. உணவகத்தில் கூச்சலிடும் குழந்தைகளைக் கட்டுப்படுத்த முடியாத மோசமான பெற்றோருக்குக் கூடுதல் கட்டணம்.

உணவகத்தில் பணிபுரியும் ஊழியர்களிடம் மரியாதையாக நடந்துகொள்ள வேண்டும். `நோ பாலிசி நோ சர்வீஸ்’ என்ற கொள்கையைப் பின்பற்றி உணவகம் செயல்படுகிறது.

அதோடு ஆறு பேருக்கு மேல் குழுவாக வருபவர்களுக்கும், பில்களை பிரித்துக் கொள்பவர்களுக்கும், தனித்தனியாக செக் கொடுப்பவர்களுக்கும், பிறந்தநாள் மெனுவில் இருந்து ஆர்டர் செய்பவர்களுக்கும் கட்டண தொகையில் இருந்து 20 சதவிகித தொகை கழிக்கப்படுகிறது.

கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்த முடிவு செய்தீர்கள் என்றால் மெனுவில் குறிப்பிடப்பட்ட விலைகளுக்கும் மேல் கூடுதலாக 3.5 சதவிகித கட்டணம் விதிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளது. ரெஸ்டாரன்ட் மெனு! கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு வாடிக்கையாளர்களுக்குப் புது ரூல்ஸ்! மிஸ் பண்ணாதீங்க...

வாங்கிய உணவைப் பகிர்ந்துகொள்வதற்கு 3 அமெரிக்க டாலர்கள் கூடுதல் கட்டணமாக விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளது’’ என்று அந்த மெனுவில் குறிப்பிட்டுள்ள விஷயங்களைப் பதிவிட்டுள்ளார்.

இந்த விதிகள் நெட்டிசன்கள் மத்தியில் கவனம் பெற்ற நிலையில் விமர்சனங்கள் அதிகரித்துள்ளன. ஒருவர் கமென்டில், ``அடங்காத குழந்தைகளுக்கான கட்டணமாக 3 அமெரிக்க டாலர்கள் விதிக்கப்படுகின்றன. நான் இதை ஓர் உணவகத்தின் மெனுவில் படித்தால், அந்த உணவகத்தை விட்டு வெளியேறிவிடுவேன்’’ என்று பதிவிட்டுள்ளார்.

இதுபோன்று ரூல்ஸ் போட்டு ரெஸ்டாரன்ட்டில் உங்களிடம் மெனு கொடுக்கப்பட்டால் என்ன செய்வீர்கள்?!


http://dlvr.it/Sy1Nt9

Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...