Skip to main content

தன்பாலின ஈர்ப்பு; மனைவியுடன் செக்ஸ் மறுப்பு... நியாயமா..? - காமத்துக்கு மரியாதை | சீஸன் 4 - 116

தன்பாலின ஈர்ப்புக்கொண்ட ஆண்கள், ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டால் வரக்கூடிய சிக்கல்கள், அவற்றுக்கான தீர்வுகள் பற்றி ஒரு கேஸ் ஹிஸ்டரியுடன் விளக்குகிறார் செக்ஸாலஜிஸ்ட் காமராஜ்.

Sexologist Kamaraj

''ஓர் இளம்பெண் என்னை சந்திக்க மருத்துவமனைக்கு வந்திருந்தார். அவருக்குத்தான் பிரச்னைபோல... அதனால்தான் என்னை சந்திக்க தனியாக வந்திருக்கிறார் என்று நினைத்தேன். ஆனால், பேசிய பிறகுதான் அவருக்கு எந்தப் பிரச்னையும் இல்லை என்பது புரிந்தது. அந்தப் பெண்ணுக்கு சில மாதங்களுக்கு முன்பு தான் திருமணமாகியிருந்தது. ஆனால், இதுவரைக்கும் தாம்பத்திய உறவு நிகழவில்லை. அதற்கான எந்த முயற்சிகளையும் அவருடைய கணவர் எடுக்கவே இல்லையாம்.

'எங்களோடது பெற்றோர் பார்த்து செஞ்சு வைச்ச கல்யாணம். என்கிட்ட ஆரம்பத்துல இருந்தே ஒட்டுதல் இல்லாமதான் இருந்தார். தவிர, எப்போ பார்த்தாலும் செல்போனை கையிலேயே வெச்சிக்கிட்டிருந்ததால கல்யாணத்துக்கு முன்னாடி யாரையாவது காதலிச்சிருப்பார் போல... அதனாலதான் என்கூட சேர்றதுக்கு தயங்கறாருனு நினைச்சிக்கிட்டேன். ஒரு நாள் அவர் குளிக்க போனப்போ, அவரோட எக்ஸ் யாரு; அவங்க கூட தான் தினமும் பேசிக்கிட்டிருக்கிறாரான்னு தெரிஞ்சுக்கிறதுக்காக அவரோட போனை செக் பண்ணிப் பார்த்தேன். ஆனா, அதுக்குள்ள அப்படியொரு ஷாக் இருக்கும்னு நான் கொஞ்சம்கூட எதிர்பார்க்கலை டாக்டர். இந்தாங்க, அவர் செல்போன்ல இருந்த கண்றாவியையெல்லாம் ஸ்கிரீன்ஷாட் எடுத்துட்டு வந்திருக்கேன். நீங்களே பாருங்க' என்று என்னிடம் காண்பித்தார்.

Sex Education

அத்தனையும் ஹோமோசெக்ஸ் வீடியோக்கள். அவருக்கு சில ஆண் நண்பர்களுடனும் உறவு இருந்திருக்கிறது. அந்த சாட்டிங்குகளையும் ஸ்கிரீன்ஷாட் எடுத்து வந்திருந்தார் அந்தப் பெண். உண்மையில் ஹோமோசெக்ஸ் தவறில்லை. ஆனால், அதில் ஆர்வமிருக்கிற ஆண், அதை மறைத்து ஒரு பெண்ணை திருமணம் செய்து அவருடைய வாழ்க்கையை வீணாக்கியிருக்கியதுதான் தவறு. பெற்றோர்கள் வற்புறுத்தினாலும், ஒரு பெண்ணை திருமணம் செய்துகொள்ள மாட்டேன் என்பதில் இவர்கள் தீர்மானமாக இருக்க வேண்டும். 'பெற்றோர்கிட்ட சொல்ல தைரியமில்ல... சொன்னா, அவங்களால தாங்க முடியாது... அது அவங்க உயிருக்கே ஆபத்தாகிடும்...' என்று பயப்படுகிற ஆண்கள், திருமணம் செய்துகொள்ளவிருக்கிற பெண்ணுடன் தாம்பத்திய உறவு வைத்துக்கொள்வதற்கு தன்னை தயார்படுத்திக்கொள்ள வேண்டும். இன்னும் சிலர், ஆண், பெண் இருவருடனும் உறவு வைத்துக்கொள்வார்கள். இவர்களால் மனைவியுடனும் தாம்பத்திய உறவு வைத்துக்கொள்ள முடியும். இதை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், தன்பாலின ஈர்ப்பு மட்டுமே இருக்கிறது... பெண்கள் மீது எந்த ஈர்ப்புமில்லை என்பவர்கள், பெற்றோர் வற்புறுத்தலுக்காக ஒரு பெண்ணின் தாம்பத்திய உரிமையைப் பறிப்பது எந்த விதத்திலும் நியாயம் கிடையாது'' என்று பேசி முடித்தார் டாக்டர் காமராஜ்.


Comments

Popular posts from this blog

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

Doctor Vikatan: நாள்பட்ட இருமல், கூடவே சிறுநீர்க்கசிவும், காதில் ஒலிக்கும் சத்தமும்... என்ன பிரச்னை?

Doctor Vikatan: என் வயது 50. எனக்கு நாள்பட்ட இருமல் இருக்கிறது. மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து எடுத்துக் கொண்டு இருக்கிறேன். இருமினால் சிறுநீர்க் கசிவு ஏற்படுகிறது. காதில் சில நேரங்களில் அலை அடிப்பது போல் சத்தம் கேட்கிறது. இதற்கெல்லாம் என்ன சிகிச்சை எடுக்க வேண்டும்? - Jayarani, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம். பொது மருத்துவர் அருணாசலம் உங்கள் விஷயத்தில் இருமலைக் கட்டுப்படுத்த முதலில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இரண்டு வாரங்களுக்கு மேல் தொடரும் இருமல், காசநோயின் அறிகுறியாகவும் இருக்கக்கூடும். நிறைய பேர் அது தெரியாமல் இருமல் மருந்தைக் குடித்துக் குடித்து அதைக் கட்டுப்பாட்டில் வைக்க முயல்கிறார்கள். இது தவறு. இருமலுக்கான காரணம் தெரிந்து சிகிச்சை எடுப்பதுதான் சரியானது. இருமலில் வறட்டு இருமல், சளியுடன் கூடிய இருமல், ஆஸ்துமா இருமல் என மூன்று வகை உண்டு. வறட்டு இருமல் என்பது ஒருவித பாக்டீரியாவால் வருவது. ஒவ்வொரு முறை இருமும்போதும் சளியும் சேர்ந்து வருவது, சளி இருமல். மூன்றாவது ஆஸ்துமாவினால், வீஸிங்கால் வருவது. அதாவது காற்றுப்பாதை ச...