Skip to main content

தன்பாலின ஈர்ப்பு; மனைவியுடன் செக்ஸ் மறுப்பு... நியாயமா..? - காமத்துக்கு மரியாதை | சீஸன் 4 - 116

தன்பாலின ஈர்ப்புக்கொண்ட ஆண்கள், ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டால் வரக்கூடிய சிக்கல்கள், அவற்றுக்கான தீர்வுகள் பற்றி ஒரு கேஸ் ஹிஸ்டரியுடன் விளக்குகிறார் செக்ஸாலஜிஸ்ட் காமராஜ்.

Sexologist Kamaraj

''ஓர் இளம்பெண் என்னை சந்திக்க மருத்துவமனைக்கு வந்திருந்தார். அவருக்குத்தான் பிரச்னைபோல... அதனால்தான் என்னை சந்திக்க தனியாக வந்திருக்கிறார் என்று நினைத்தேன். ஆனால், பேசிய பிறகுதான் அவருக்கு எந்தப் பிரச்னையும் இல்லை என்பது புரிந்தது. அந்தப் பெண்ணுக்கு சில மாதங்களுக்கு முன்பு தான் திருமணமாகியிருந்தது. ஆனால், இதுவரைக்கும் தாம்பத்திய உறவு நிகழவில்லை. அதற்கான எந்த முயற்சிகளையும் அவருடைய கணவர் எடுக்கவே இல்லையாம்.

'எங்களோடது பெற்றோர் பார்த்து செஞ்சு வைச்ச கல்யாணம். என்கிட்ட ஆரம்பத்துல இருந்தே ஒட்டுதல் இல்லாமதான் இருந்தார். தவிர, எப்போ பார்த்தாலும் செல்போனை கையிலேயே வெச்சிக்கிட்டிருந்ததால கல்யாணத்துக்கு முன்னாடி யாரையாவது காதலிச்சிருப்பார் போல... அதனாலதான் என்கூட சேர்றதுக்கு தயங்கறாருனு நினைச்சிக்கிட்டேன். ஒரு நாள் அவர் குளிக்க போனப்போ, அவரோட எக்ஸ் யாரு; அவங்க கூட தான் தினமும் பேசிக்கிட்டிருக்கிறாரான்னு தெரிஞ்சுக்கிறதுக்காக அவரோட போனை செக் பண்ணிப் பார்த்தேன். ஆனா, அதுக்குள்ள அப்படியொரு ஷாக் இருக்கும்னு நான் கொஞ்சம்கூட எதிர்பார்க்கலை டாக்டர். இந்தாங்க, அவர் செல்போன்ல இருந்த கண்றாவியையெல்லாம் ஸ்கிரீன்ஷாட் எடுத்துட்டு வந்திருக்கேன். நீங்களே பாருங்க' என்று என்னிடம் காண்பித்தார்.

Sex Education

அத்தனையும் ஹோமோசெக்ஸ் வீடியோக்கள். அவருக்கு சில ஆண் நண்பர்களுடனும் உறவு இருந்திருக்கிறது. அந்த சாட்டிங்குகளையும் ஸ்கிரீன்ஷாட் எடுத்து வந்திருந்தார் அந்தப் பெண். உண்மையில் ஹோமோசெக்ஸ் தவறில்லை. ஆனால், அதில் ஆர்வமிருக்கிற ஆண், அதை மறைத்து ஒரு பெண்ணை திருமணம் செய்து அவருடைய வாழ்க்கையை வீணாக்கியிருக்கியதுதான் தவறு. பெற்றோர்கள் வற்புறுத்தினாலும், ஒரு பெண்ணை திருமணம் செய்துகொள்ள மாட்டேன் என்பதில் இவர்கள் தீர்மானமாக இருக்க வேண்டும். 'பெற்றோர்கிட்ட சொல்ல தைரியமில்ல... சொன்னா, அவங்களால தாங்க முடியாது... அது அவங்க உயிருக்கே ஆபத்தாகிடும்...' என்று பயப்படுகிற ஆண்கள், திருமணம் செய்துகொள்ளவிருக்கிற பெண்ணுடன் தாம்பத்திய உறவு வைத்துக்கொள்வதற்கு தன்னை தயார்படுத்திக்கொள்ள வேண்டும். இன்னும் சிலர், ஆண், பெண் இருவருடனும் உறவு வைத்துக்கொள்வார்கள். இவர்களால் மனைவியுடனும் தாம்பத்திய உறவு வைத்துக்கொள்ள முடியும். இதை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், தன்பாலின ஈர்ப்பு மட்டுமே இருக்கிறது... பெண்கள் மீது எந்த ஈர்ப்புமில்லை என்பவர்கள், பெற்றோர் வற்புறுத்தலுக்காக ஒரு பெண்ணின் தாம்பத்திய உரிமையைப் பறிப்பது எந்த விதத்திலும் நியாயம் கிடையாது'' என்று பேசி முடித்தார் டாக்டர் காமராஜ்.


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...