Skip to main content

தன்பாலின ஈர்ப்பு; மனைவியுடன் செக்ஸ் மறுப்பு... நியாயமா..? - காமத்துக்கு மரியாதை | சீஸன் 4 - 116

தன்பாலின ஈர்ப்புக்கொண்ட ஆண்கள், ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டால் வரக்கூடிய சிக்கல்கள், அவற்றுக்கான தீர்வுகள் பற்றி ஒரு கேஸ் ஹிஸ்டரியுடன் விளக்குகிறார் செக்ஸாலஜிஸ்ட் காமராஜ்.

Sexologist Kamaraj

''ஓர் இளம்பெண் என்னை சந்திக்க மருத்துவமனைக்கு வந்திருந்தார். அவருக்குத்தான் பிரச்னைபோல... அதனால்தான் என்னை சந்திக்க தனியாக வந்திருக்கிறார் என்று நினைத்தேன். ஆனால், பேசிய பிறகுதான் அவருக்கு எந்தப் பிரச்னையும் இல்லை என்பது புரிந்தது. அந்தப் பெண்ணுக்கு சில மாதங்களுக்கு முன்பு தான் திருமணமாகியிருந்தது. ஆனால், இதுவரைக்கும் தாம்பத்திய உறவு நிகழவில்லை. அதற்கான எந்த முயற்சிகளையும் அவருடைய கணவர் எடுக்கவே இல்லையாம்.

'எங்களோடது பெற்றோர் பார்த்து செஞ்சு வைச்ச கல்யாணம். என்கிட்ட ஆரம்பத்துல இருந்தே ஒட்டுதல் இல்லாமதான் இருந்தார். தவிர, எப்போ பார்த்தாலும் செல்போனை கையிலேயே வெச்சிக்கிட்டிருந்ததால கல்யாணத்துக்கு முன்னாடி யாரையாவது காதலிச்சிருப்பார் போல... அதனாலதான் என்கூட சேர்றதுக்கு தயங்கறாருனு நினைச்சிக்கிட்டேன். ஒரு நாள் அவர் குளிக்க போனப்போ, அவரோட எக்ஸ் யாரு; அவங்க கூட தான் தினமும் பேசிக்கிட்டிருக்கிறாரான்னு தெரிஞ்சுக்கிறதுக்காக அவரோட போனை செக் பண்ணிப் பார்த்தேன். ஆனா, அதுக்குள்ள அப்படியொரு ஷாக் இருக்கும்னு நான் கொஞ்சம்கூட எதிர்பார்க்கலை டாக்டர். இந்தாங்க, அவர் செல்போன்ல இருந்த கண்றாவியையெல்லாம் ஸ்கிரீன்ஷாட் எடுத்துட்டு வந்திருக்கேன். நீங்களே பாருங்க' என்று என்னிடம் காண்பித்தார்.

Sex Education

அத்தனையும் ஹோமோசெக்ஸ் வீடியோக்கள். அவருக்கு சில ஆண் நண்பர்களுடனும் உறவு இருந்திருக்கிறது. அந்த சாட்டிங்குகளையும் ஸ்கிரீன்ஷாட் எடுத்து வந்திருந்தார் அந்தப் பெண். உண்மையில் ஹோமோசெக்ஸ் தவறில்லை. ஆனால், அதில் ஆர்வமிருக்கிற ஆண், அதை மறைத்து ஒரு பெண்ணை திருமணம் செய்து அவருடைய வாழ்க்கையை வீணாக்கியிருக்கியதுதான் தவறு. பெற்றோர்கள் வற்புறுத்தினாலும், ஒரு பெண்ணை திருமணம் செய்துகொள்ள மாட்டேன் என்பதில் இவர்கள் தீர்மானமாக இருக்க வேண்டும். 'பெற்றோர்கிட்ட சொல்ல தைரியமில்ல... சொன்னா, அவங்களால தாங்க முடியாது... அது அவங்க உயிருக்கே ஆபத்தாகிடும்...' என்று பயப்படுகிற ஆண்கள், திருமணம் செய்துகொள்ளவிருக்கிற பெண்ணுடன் தாம்பத்திய உறவு வைத்துக்கொள்வதற்கு தன்னை தயார்படுத்திக்கொள்ள வேண்டும். இன்னும் சிலர், ஆண், பெண் இருவருடனும் உறவு வைத்துக்கொள்வார்கள். இவர்களால் மனைவியுடனும் தாம்பத்திய உறவு வைத்துக்கொள்ள முடியும். இதை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், தன்பாலின ஈர்ப்பு மட்டுமே இருக்கிறது... பெண்கள் மீது எந்த ஈர்ப்புமில்லை என்பவர்கள், பெற்றோர் வற்புறுத்தலுக்காக ஒரு பெண்ணின் தாம்பத்திய உரிமையைப் பறிப்பது எந்த விதத்திலும் நியாயம் கிடையாது'' என்று பேசி முடித்தார் டாக்டர் காமராஜ்.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...