Skip to main content

"உறுப்புதானம் செய்வோருக்கு அரசு மரியாதை பாராட்டுக்குரியது; ஆனால், பணம்..." - ஹிதேந்திரன் அப்பா

"உடல் உறுப்புகளை தானம் செய்வோரின் இறுதிச்சடங்குகள், இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும்" என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தபடியே, தேனியில் உடல் உறுப்பு தானம் செய்த வடிவேலுவுக்கு முதன் முறையாக அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெற்று, இந்தியாவையே நெகிழ்ச்சியோடு கவனிக்க வைத்திருக்கிறது.

இதுகுறித்து, தன் மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்து தமிழ்நாட்டிற்கே முன்மாதிரியாக இருந்த ஹிதேந்திரனின் தந்தை டாக்டர் அசோகனிடம் நாம் பேசியபோது, நெகிழ்ச்சியோடு பேசினார்...

"என் மகன் ஹிதேந்திரன் நினைவு தினத்தை உடல் உறுப்புதான தினமாக அறிவிக்கவேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்துவந்தோம். அதன்படி, செப்டம்பர் 23-ம் தேதியை உறுப்புதான தினமாக அறிவித்தது தமிழ்நாடு அரசு. கடந்த 2009-ம் ஆண்டு என் மனைவிக்கு 'கல்பனா சாவ்லா' விருதும் வழங்கி கெளரவித்தது. மகனை இழந்த துக்கத்தில், அந்த விருது தேவையா என்று யோசித்தாலும் விழிப்புணர்வு ஏற்படும் என்பதற்காகப் பெற்றுக்கொண்டோம்.

ஹிதேந்திரன் குடும்பத்தினர்

அதன்பிறகு, தமிழகத்தில் உடல் உறுப்பு தானம் செய்வோர் எண்ணிக்கை அதிகரித்ததோடு விழிப்புணர்வும் ஏற்பட்டது. எங்களுக்குக் கிடைத்த அங்கீகாரம் எல்லா குடும்பத்திற்கும் கிடைக்கவேண்டும் என்று நாங்கள் விருப்பப்பட்டோம். அரசும் வருடந்தோறும் உடல் உறுப்பு தானம் செய்வோரின் குடும்பத்தினருக்கு ஒரு விழா ஏற்படுத்தி சான்றிதழ் அளித்துப் பாராட்டிக்கொண்டிருந்தது.

அதேநேரம், உறுப்பு தானம் செய்யும் செய்திகள் முன்பெல்லாம் அடிக்கடி ஊடகங்களில் வந்துகொண்டிருக்கும். இப்போது, பெரிதாக வருவதில்லை. வந்தாலும் எத்தனைப் பேர் படிக்கிறார்கள் என்பது தெரியாது. சமூகத்திற்கு மிகப்பெரிய பங்களிப்பைச் செய்துள்ள தலைவர்கள், ராணுவ வீரர்கள், மக்கள் மனம் கவர்ந்த பிரபலங்களின் இறுதிச் சடங்கிற்கு அரசு மரியாதை கொடுக்கப்படுகிறது. இப்போது, அவர்கள் வரிசையில் உடல் உறுப்பு தானம் செய்வோரையும் சேர்த்திருப்பது வரவேற்புக்குரியது. உடல் உறுப்பு தானம் செய்வோரின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருப்பது பாராட்டுக்குரியது.

உறுப்பு தானம் செய்வோரும் சமூகத்திற்கான பங்களிப்பை அளிப்பவர்கள்தான். இப்போது, அரசு மரியாதை கொடுப்பதால், எல்லோரும் கவனிப்பார்கள். விழிப்புணர்வும் அதிகமாகும். இறந்தவர்களுக்கும் குடும்பத்தினருக்கும் ஒரு கெளரவம் கிடைக்கும்.

ஹிதேந்திரன் பெற்றோர்

சமூதாயத்திற்கும் உறுப்புதானம் குறித்த சிந்தனை வரும். அதேநேரத்தில், அரசு மரியாதை என்ற அங்கீகாரத்துடன் உறுப்புதானம் செய்வோரின் குடும்பத்திற்குப் பணம் எல்லாம் கொடுக்கக்கூடாது. அப்படி எதிர்காலத்தில் அறிவிக்கவும் கூடாது. ஏனென்றால், இது ஒரு தானம். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் வழங்குவது. இதனை பணம் கொடுத்து அங்கீகாரம் செய்தால் தவறு நடக்க வாய்ப்புள்ளது. சில நேரங்களில் கட்டாய மூளைச்சாவும் நிகழலாம். அதனால், பண மரியாதை எல்லாம் வேண்டாம்.

அதேநேரம், உறுப்புதானம் செய்வோரின் இறுதிச் சடங்கிற்கு அரசு மரியாதை கொடுப்பது போலவே, அரசு மருத்துவமனைகளில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யும் சிறந்த மருத்துவர்களுக்கும் அரசு ஊக்கத்தொகை அறிவிக்கவேண்டும். அவர்கள் இன்னும் சிறப்பாகச் செயல்படுவார்கள்" என்கிறார் கோரிக்கையாக.


Comments

Popular posts from this blog

மதச் சுதந்திர அறிக்கை: இந்தியா குறித்து அமெரிக்க ஆய்வறிக்கை சொல்வதென்ன?!

இந்தியாவின் பிரதமராக மூன்றாவது முறை தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சியில், சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் இந்தியாவில் அதிகரித்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவின் வெளியுறவுத்துறை நேற்று வெளியிட்ட, 2023-ம் ஆண்டுக்கான சர்வதேச மத சுதந்திரம் குறித்த ஆய்வறிக்கையில், ``சிறுபான்மையினர், குறிப்பாக முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மீதான வன்முறை தாக்குதல்கள், கொலைகள், வழிபாட்டு தளங்களை சேதப்படுத்துதல் உள்ளிட்டவை அதிகரித்திருக்கிறது.அமெரிக்கா முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகள், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தல், அடிப்படையில் பாரபட்சமான சட்டம் என ஐ.நா குறிப்பிட்டிருக்கும் குடியுரிமைச் சட்டம் அமல்படுத்தியது, சட்டவிரோத கட்டுமானங்களை அகற்றுவது என்ற பெயரில் இஸ்லாமிய சொத்துக்களை இடிப்பது, ரயிலில் ஒரு பாதுகாப்பு அதிகாரி முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்துக்காக மூன்று முஸ்லிம்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது, பசு பாதுகாப்பு என்ற பெயரில் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்துவது, சில நேரங்களில் அது கொலையில்...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

Doctor Vikatan: நாள்பட்ட இருமல், கூடவே சிறுநீர்க்கசிவும், காதில் ஒலிக்கும் சத்தமும்... என்ன பிரச்னை?

Doctor Vikatan: என் வயது 50. எனக்கு நாள்பட்ட இருமல் இருக்கிறது. மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து எடுத்துக் கொண்டு இருக்கிறேன். இருமினால் சிறுநீர்க் கசிவு ஏற்படுகிறது. காதில் சில நேரங்களில் அலை அடிப்பது போல் சத்தம் கேட்கிறது. இதற்கெல்லாம் என்ன சிகிச்சை எடுக்க வேண்டும்? - Jayarani, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம். பொது மருத்துவர் அருணாசலம் உங்கள் விஷயத்தில் இருமலைக் கட்டுப்படுத்த முதலில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இரண்டு வாரங்களுக்கு மேல் தொடரும் இருமல், காசநோயின் அறிகுறியாகவும் இருக்கக்கூடும். நிறைய பேர் அது தெரியாமல் இருமல் மருந்தைக் குடித்துக் குடித்து அதைக் கட்டுப்பாட்டில் வைக்க முயல்கிறார்கள். இது தவறு. இருமலுக்கான காரணம் தெரிந்து சிகிச்சை எடுப்பதுதான் சரியானது. இருமலில் வறட்டு இருமல், சளியுடன் கூடிய இருமல், ஆஸ்துமா இருமல் என மூன்று வகை உண்டு. வறட்டு இருமல் என்பது ஒருவித பாக்டீரியாவால் வருவது. ஒவ்வொரு முறை இருமும்போதும் சளியும் சேர்ந்து வருவது, சளி இருமல். மூன்றாவது ஆஸ்துமாவினால், வீஸிங்கால் வருவது. அதாவது காற்றுப்பாதை ச...