Skip to main content

கேரளா: நிபா வைரஸ் பாதித்த அனைவரும் குணமடைந்தனர்... விலங்குகள் இறந்தால் கண்காணிக்க குழு!

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நிபா வைரஸ் பாதித்து கடந்த மாதம் 30-ம் தேதியும், இந்த மாதத் தொடக்கத்திலும் 2 பேர் மரணம் அடைந்துள்ளனர். மேலும் 4 பேர் நிபா பாதிப்புடன் சிகிச்சையில் இருந்தனர். அதிலும் நிபா பாதித்து இறந்த ஒருவரின் 9 வயது மகனுக்கு வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதற்கிடையே திருவனந்தபுரம் உள்ளிட்ட வேறு இரண்டு இடங்களில் நிபா அறிகுறிகள் கண்டறியப்பட்டன.

இதையடுத்து கேரளாவை ஒட்டி உள்ள தமிழ்நாடு, கர்நாடகா மாநிலங்களில் சுகாதாரத்துறை உஷார்படுத்தப்பட்டது. கேரளாவில் இருந்து காய்ச்சல் பாதித்தவர்கள் வந்தால் எல்லைப் பகுதியில் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பப்பட்டனர். அதே சமயம் கேரளாவில் நிபா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு தொற்று இல்லை என சாம்பிள் பரிசோதனையில் தெரியவந்தது.

கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ்

மேலும் நிபா பாதித்த 4 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டதை அடுத்து அவர்கள் நிபா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டு வந்துள்ளனர். அவர்கள் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து கேரளாவில் நிபா பாதித்தவர்கள் எண்ணிக்கை பூஜ்ஜியமாக மாறி உள்ளது. வெளவால்கள் மூலம் நிபா வைரஸ் பரவியதாகக் கூறப்பட்ட நிலையில் வீட்டு விலங்குகளும், காட்டு விலங்குகளும் இறந்தால் உடனே ரிப்போர்ட் செய்ய கோழிக்கோட்டில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறுகையில், "கோழிக்கோட்டில் நிபா வைரஸ் பாதித்து சிகிச்சை பெற்ற 4 பேரின் சாம்பிள்களும் 5 நாள்கள் இடைவெளியில் இரண்டு முறை பரிசோதனை செய்யப்பட்டன. இரண்டு பரிசோதனையிலும் நெகட்டிவ் என ரிசல்ட் வந்துள்ளது. அவர்களது ரத்தம், சிறுநீர் உள்ளிட்ட மூன்று வகையான சாம்பிள்களை ஆய்வுக்கு அனுப்பியதில் அனைத்திலும் நெகட்டிவ் என வந்ததைத் தொடர்ந்து நான்குபேரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். அவர்களை வீட்டுக்கு அனுப்புவதற்கு முன்பு அவர்களின் வீடுகளில் சுகாதாரம் உறுதி செய்யப்பட்டது. அவர்கள் மேலும் 14 நாள்கள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மற்றவர்களிடம் இருந்து தொற்று பரவாமல் இருப்பதற்காக இந்த நடவடிக்கை ஏற்படுத்தப்படுள்ளது.

வௌவால்

நிபா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களில் 568 பேர் இப்போது தனிமைப்படுத்தலில் உள்ளனர். சுகாதாரத்துறை அறிவித்துள்ள வழிமுறைப்படி அக்டோபர் 5-ம் தேதி வரை இவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தலில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சுகாதாரத்துறையின் நிபா கட்டுப்பாட்டு அறை அக்டோபர் 26-ம் தேதி வரை செயல்படும். நிபா வைரஸ் கண்டறியப்பட்டபிறகு ஒரு மரணம்கூட ஏற்படாமல் தடுக்க முடிந்தது. இனியும் நிபா வைரஸ் அச்சுறுத்தாமல் இருக்க கால்நடைத்துறை, வனத்துறை, விவசாயத்துறை ஆகியவை இணைந்து கம்யூனிட்டி சர்வேலென்ஸ் தொடர்ச்சியாக நடத்த உத்தரவிட்டுள்ளேன். மாவட்ட கலெக்டர் தலைமையில் 2 வாரங்களுக்கு ஒருமுறை இந்த கமிட்டி கூட்டம் நடைபெறும். வீட்டில் வளர்க்கும் பிராணிகளான பூனைகள் போன்றவை ஒன்றுக்கும் அதிகமானவை இறந்துபோனாலோ, காட்டு மிருகங்கள் வழக்கத்துகு மாறாக இறந்துபோனாலோ உடனே கண்டுபிடித்து அந்த புள்ளி விவரங்களை ஆன்லைனில் பதிவு செய்வதற்காக இந்தக் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. கோழிக்கோட்டில் நிபா பரவாமல் இருக்க இந்தக் குழு தொடர்ந்து கண்காணிக்கும்" என்றார்.


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...