Skip to main content

Apollo: மூளைச்சாவு அடைந்த அரசு ஊழியர்; உடல் தானம் செய்ததை அடுத்து முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம்!

தேனி அருகே நடந்த விபத்தில் மூளைச்சாவு அடைந்த அரசு ஊழியர் வடிவேலின்(43) உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது குடும்பத்தினர் முன் வந்துள்ளதையடுத்து அவரது உடல், தமிழக முதல்வர் அறிவித்த படி முழு அரசு பாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

தேனி மாவட்டம், சின்னமனுர் காந்தி நகர் காலனியை சேர்ந்தவர் வடிவேல். தேனி கலெக்டர் அலுவலகத்தில் முதுநிலை ஆய்வாளராக பணிபுரிந்தார். வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட பொருளாளராகவும் இருந்தார். இவரது மனைவி பட்டுலட்சுமி தேனி மாவட்ட நீதிமன்றத்தில் பணிபுரிந்து வருகிறார். செப் 23-ல் வடிவேல் அலுவலக பனி முடிந்து டூவீலரில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தப்போது சீலையம்பட்டி அருகே சென்றபோது ரோட்டின் குறுக்கே வந்த மாடு அவரது டூவீலரில் மோதியது கீழே விழுந்த வடிவேல் தலை,காது, மூக்கு பகுதியில் பலத்த காயமடைந்தார். சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

மூளைச்சாவு அடைந்த அரசு ஊழியர்

அங்கிருந்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின் தீவிர சிகிச்சைக்காக மதுரை அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அவர் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர். அதன்பின் அவரது குடும்பத்தினரிடம், வடிவேலின் உடல் நிலை மருத்துவமனையின் கவுன்சிலர்கள்  பேசினர். அப்போது, அவரது உடல் உறுப்புகளை தானம் செய்தால் இன்னும் பலர் பயனடைய வாய்ப்பு உள்ளது என்று எடுத்துக் கூறினர். அதனை ஏற்றுக் கொண்ட அவரது குடும்பத்தினர் மிகுந்த வருத்தத்துடன் உடல் உறுப்புக்களை தானம் செய்ய சம்மதித்தனர்.

முழு மனதாக உடல் உறுப்புக்களை தானம் செய்வோர் உடல் அரசு முழு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ள நிலையில், வடிவேலின் உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. அவரது இறுதி ஊர்வலத்தில் தமிழக மருத்துவம் மருத்துவக்கல்வி, மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தேனி மாவட்ட ஆட்சியர் திரு.சஜீவனா I.A.S., மதுரை அரசு மருத்துவமனை டீன் ரத்தினவேல் மற்றும் அப்போலோ மருத்துவமனை - மதுரை டிவிஷன் coo திரு நீலக்கண்ணன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். உடல் உறுப்பு தானத்தில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ள நிலையில், தமிழக முதல்வரின் இந்த அறிவிப்பு உடல் உறுப்பு தானத்தை ஊக்குவிக்கும் விதமாக உள்ளது.

மூளைச்சாவு அடைந்த அரசு ஊழியர்

தினமும் பலர் தங்களது உடல் உறுப்புக்களை தானமாக தந்து உதவும் நிலையில், முதல்வர் அறிவிப்புக்கு பின் இறந்த வடிவேலின் உடல் உறுப்புக்களை தானமாக வழங்க சம்மதித்த அவரது குடும்பத்தினருக்கு மனமார நன்றிகளை அப்போலோ குழுமத்தினர் தெரிவித்துள்ளனர். மேலும், உடல் உறுப்பு தானம் என்ற மகத்தான சேவையை ஊக்குவிக்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் என்று அறிவிப்பை வெளியிட்ட தமிழக முதல்வர் திரு.ஸ்டாலின் அவர்களுக்கும் இந்த சமயத்தில் நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாக அப்போலோ குழுமத்தினர் தெரிவித்துள்ளனர்.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...