Skip to main content

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 6.9 மில்லியன் பெண்களின் இறப்புகளை தடுத்திருக்கலாம்... ஏன் முடியவில்லை?

இந்தியாவில் பெரும்பாலான பெண்கள் எளிதில் புற்றுநோய்க்கான சிகிச்சையை அணுக முடியாத சூழலில் உள்ளனர். அதனால் நோய் பாதிப்பு அதிகமாகி விரைவில் உயிரிழக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

பெண்கள்

இப்படியான பெண்களின் நிலை குறித்து லான்செட் கமிஷன் சமீபத்தில் ஓர் ஆய்வு நடத்தியுள்ளது. ‘பெண்கள், சக்தி மற்றும் புற்றுநோய்’ என்று தலைப்பிடப்பட்ட அந்த அறிக்கை பெண்கள் ஆரோக்கியத்தின் மீதான சமூக அக்கறையின்மை, அறிவு இல்லாமை, விழிப்புணர்வு இல்லாமை ஆகியவற்றை சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் பெண்களை பாதிக்கும் புற்றுநோயைத் தடுப்பது, கண்டறிவது மற்றும் கவனிப்பு ஆகியவை எவ்வாறு தாமதப்படுத்தப்படுகின்றன என்பதையும் குறிப்பிட்டுள்ளது.

லான்செட் ஆய்வு முடிவின் படி இந்திய பெண்களின் புற்றுநோய் இறப்புகளில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு தடுக்கக் கூடியவை, மற்றும் 37% அவர்கள் சரியான நேரத்தில் கண்டறியப்பட்டு அணுகினால் மட்டுமே உரிய சிகிச்சை அளிக்கக் கூடிய நிலையில் உள்ளவை என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இந்திய பெண்களில் சுமார் 6.9 மில்லியன் புற்றுநோய் இறப்புகள் தடுக்கக்கூடியவை, மற்றும் 4.03 மில்லியன் நோயாளிகள் சிகிச்சை அளிக்கக்கூடியர்கள் என்று லான்செட் கமிஷனர் டாக்டர் இஷு கட்டாரியா கூறியுள்ளார்.

புற்றுநோய் செல்

2020-ம் ஆண்டில் இந்தியாவில் உள்ள பெண்களிடையே ஏற்படும் புற்றுநோய் இறப்புகளுக்கு முக்கியக் காரணமாக இருந்தது மார்பகம், கர்ப்பப்பை வாய், கருப்பை புற்றுநோய்களே என்று அதிகாரபூர்வ தரவு காட்டுகிறது. மேலும் புற்றுநோய்களின் அபாயத்தை அதிகரிக்கும் நோய்த்தொற்றுகளில் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை ஏற்படுத்தும் HPV வைரஸ் மற்றும் கல்லீரல் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும் ஹெபடைடிஸ் பி மற்றும் சி தொற்று ஆகியவை அடங்கும். புற்றுநோய்க்கான இரண்டாவது முக்கிய ஆபத்து காரணியாக புகையிலை உள்ளது. இது புற்றுநோய் இறப்புகளில் 6%-க்கு பங்களிக்கிறது என்று அறிக்கை கூறுகிறது. மது அருந்துதல் மற்றும் உடல் பருமன் ஆகியவை இந்தியாவில் புற்றுநோய் இறப்பு விகிதத்தில் 1%க்கு பங்கு வகிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

பெண்கள் தங்களது குடும்பப் பொறுப்புகளால் தங்கள் உடல் நிலை பிரச்னைகளை உரிய கவனம் கொடுக்காத பல காரணங்களால் முன்கூட்டியே சிகிச்சை பெறத் தவறுகிறார்கள். `கல்வி மற்றும் நிதி ரீதியாகக் குறைந்த அதிகாரம் பெற்ற பெண்களிடையே புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை தீவிரப்படுத்த வேண்டும்’ என்கிறார் மையத்தின் துணை இயக்குநர் டாக்டர் பங்கஜ் சதுர்வேதி.


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...