Skip to main content

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 6.9 மில்லியன் பெண்களின் இறப்புகளை தடுத்திருக்கலாம்... ஏன் முடியவில்லை?

இந்தியாவில் பெரும்பாலான பெண்கள் எளிதில் புற்றுநோய்க்கான சிகிச்சையை அணுக முடியாத சூழலில் உள்ளனர். அதனால் நோய் பாதிப்பு அதிகமாகி விரைவில் உயிரிழக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

பெண்கள்

இப்படியான பெண்களின் நிலை குறித்து லான்செட் கமிஷன் சமீபத்தில் ஓர் ஆய்வு நடத்தியுள்ளது. ‘பெண்கள், சக்தி மற்றும் புற்றுநோய்’ என்று தலைப்பிடப்பட்ட அந்த அறிக்கை பெண்கள் ஆரோக்கியத்தின் மீதான சமூக அக்கறையின்மை, அறிவு இல்லாமை, விழிப்புணர்வு இல்லாமை ஆகியவற்றை சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் பெண்களை பாதிக்கும் புற்றுநோயைத் தடுப்பது, கண்டறிவது மற்றும் கவனிப்பு ஆகியவை எவ்வாறு தாமதப்படுத்தப்படுகின்றன என்பதையும் குறிப்பிட்டுள்ளது.

லான்செட் ஆய்வு முடிவின் படி இந்திய பெண்களின் புற்றுநோய் இறப்புகளில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு தடுக்கக் கூடியவை, மற்றும் 37% அவர்கள் சரியான நேரத்தில் கண்டறியப்பட்டு அணுகினால் மட்டுமே உரிய சிகிச்சை அளிக்கக் கூடிய நிலையில் உள்ளவை என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இந்திய பெண்களில் சுமார் 6.9 மில்லியன் புற்றுநோய் இறப்புகள் தடுக்கக்கூடியவை, மற்றும் 4.03 மில்லியன் நோயாளிகள் சிகிச்சை அளிக்கக்கூடியர்கள் என்று லான்செட் கமிஷனர் டாக்டர் இஷு கட்டாரியா கூறியுள்ளார்.

புற்றுநோய் செல்

2020-ம் ஆண்டில் இந்தியாவில் உள்ள பெண்களிடையே ஏற்படும் புற்றுநோய் இறப்புகளுக்கு முக்கியக் காரணமாக இருந்தது மார்பகம், கர்ப்பப்பை வாய், கருப்பை புற்றுநோய்களே என்று அதிகாரபூர்வ தரவு காட்டுகிறது. மேலும் புற்றுநோய்களின் அபாயத்தை அதிகரிக்கும் நோய்த்தொற்றுகளில் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை ஏற்படுத்தும் HPV வைரஸ் மற்றும் கல்லீரல் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும் ஹெபடைடிஸ் பி மற்றும் சி தொற்று ஆகியவை அடங்கும். புற்றுநோய்க்கான இரண்டாவது முக்கிய ஆபத்து காரணியாக புகையிலை உள்ளது. இது புற்றுநோய் இறப்புகளில் 6%-க்கு பங்களிக்கிறது என்று அறிக்கை கூறுகிறது. மது அருந்துதல் மற்றும் உடல் பருமன் ஆகியவை இந்தியாவில் புற்றுநோய் இறப்பு விகிதத்தில் 1%க்கு பங்கு வகிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

பெண்கள் தங்களது குடும்பப் பொறுப்புகளால் தங்கள் உடல் நிலை பிரச்னைகளை உரிய கவனம் கொடுக்காத பல காரணங்களால் முன்கூட்டியே சிகிச்சை பெறத் தவறுகிறார்கள். `கல்வி மற்றும் நிதி ரீதியாகக் குறைந்த அதிகாரம் பெற்ற பெண்களிடையே புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை தீவிரப்படுத்த வேண்டும்’ என்கிறார் மையத்தின் துணை இயக்குநர் டாக்டர் பங்கஜ் சதுர்வேதி.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...