Skip to main content

இளம் வயதில் மனச்சோர்வா... வயதான காலத்தில் டிமென்ஷியா வரலாம் - புதிய ஆய்வு சொல்வதென்ன?

இளம் வயதில் ஏற்படும் மனச்சோர்வானது, வயதான காலத்தில் டிமென்ஷியாவை உருவாக்கும் அபாயத்தை இரட்டிப்பாக்கலாம் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

ஒருவகையான மறதி நோயான டிமென்ஷியாவுக்கும், மனச்சோர்வுக்கும் உள்ள தொடர்புகள் குறித்த ஆராய்ச்சியை நிபுணர்கள் பல ஆண்டுகளாக மேற்கொண்டு வருகின்றனர். அவ்வப்போது ஆராய்ச்சியில் கிடைத்த தகவல்களை மருத்துவத்துறை வல்லுநர்கள் வெளியிட்டு வருகின்றனர்.

மறதி

அவ்வகையில், JAMA Neurology இதழின் சமீபத்திய பதிப்பில், டிமென்ஷியா குறித்த புதிய ஆய்வு முடிவு ஒன்று வெளியாகி உள்ளது.

அதில், இளம் வயதில் ஏற்படும் மனச்சோர்வானது, வயதான காலத்தில் டிமென்ஷியாவை உருவாக்கும் அபாயத்தை இரட்டிப்பாக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வானது 1977 முதல் 2018-ம் ஆண்டுக்கு இடையே, 1.4 மில்லியனுக்கும் அதிகமான டேனிஷ் குடிமக்களிடம் இருந்து பெறப்பட்ட தரவின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டதாக ஆய்வு ஆசிரியரும், தொற்றுநோயியல் நிபுணரும், பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் நரம்பியல் மருத்துவருமான ஹோலி எல்சர் கூறினார்.

மனச்சோர்வு

மனச்சோர்வு நோய் கண்டறியப்பட்டவர்கள் அல்லது இல்லாதவர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களில் பிற்கால வாழ்க்கையில் யாரெல்லாம் டிமென்ஷியாவுக்கு ஆளாகிறார்கள் என்பதை அறிய, பல ஆண்டு காலம் அவர்கள் கண்காணிக்கப்பட்டதாக, இந்த ஆய்வு தெரிவிக்கிறது. கல்வி, வருமானம், இதய நோய், நீரிழிவு நோய் போன்ற காரணிகள் அடிப்படையில் ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்திய பெரிய தரவுத்தொகுப்பு மற்றும் பல பகுப்பாய்வுகள், அவர்களின் கண்டுபிடிப்புகளை வலுவானதாகவும் நம்பகமானதாகவும் மாற்றியிருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய ஆய்வு, டிமென்ஷியா ஆபத்து மற்றும் மனச்சோர்வு நோயறிதல்களுக்கு இடையே ஆரம்ப மற்றும் நடுப்பகுதியில் உள்ள தொடர்பைக் காட்டுகிறது. இளமைப் பருவத்தின் பிற்பகுதியில் உண்டாகும் மனச்சோர்வு, பெரும்பாலும் டிமென்ஷியாவின் ஆரம்ப அறிகுறியாகக் கருதப்படுகிறது, மேலும் பல முந்தைய ஆய்வுகள், இரண்டுக்கும் இடையே உள்ள தொடர்பைக் காட்டியுள்ளது.

Representational Image

ஆராய்ச்சி முடிவுகள் மனச்சோர்வு, முதுமை மறதியின் ஆரம்ப அறிகுறி மட்டுமல்ல, மனச்சோர்வு டிமென்ஷியா அபாயத்தை அதிகரிக்கிறது என்பதற்கு வலுவான ஆதாரங்களை வழங்குவதாக, மருத்துவர் ஹோலி எல்சர் கூறியுள்ளார்.

மனச்சோர்வு என்பது பரவலாக உள்ளதையும், நிகழ்காலத்தில் மன ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்வது, எதிர்கால நல்வாழ்வுக்கு மிகவும் முக்கியமானது என்றும் அவர் கூறினார்.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...