Skip to main content

இளம் வயதில் மனச்சோர்வா... வயதான காலத்தில் டிமென்ஷியா வரலாம் - புதிய ஆய்வு சொல்வதென்ன?

இளம் வயதில் ஏற்படும் மனச்சோர்வானது, வயதான காலத்தில் டிமென்ஷியாவை உருவாக்கும் அபாயத்தை இரட்டிப்பாக்கலாம் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

ஒருவகையான மறதி நோயான டிமென்ஷியாவுக்கும், மனச்சோர்வுக்கும் உள்ள தொடர்புகள் குறித்த ஆராய்ச்சியை நிபுணர்கள் பல ஆண்டுகளாக மேற்கொண்டு வருகின்றனர். அவ்வப்போது ஆராய்ச்சியில் கிடைத்த தகவல்களை மருத்துவத்துறை வல்லுநர்கள் வெளியிட்டு வருகின்றனர்.

மறதி

அவ்வகையில், JAMA Neurology இதழின் சமீபத்திய பதிப்பில், டிமென்ஷியா குறித்த புதிய ஆய்வு முடிவு ஒன்று வெளியாகி உள்ளது.

அதில், இளம் வயதில் ஏற்படும் மனச்சோர்வானது, வயதான காலத்தில் டிமென்ஷியாவை உருவாக்கும் அபாயத்தை இரட்டிப்பாக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வானது 1977 முதல் 2018-ம் ஆண்டுக்கு இடையே, 1.4 மில்லியனுக்கும் அதிகமான டேனிஷ் குடிமக்களிடம் இருந்து பெறப்பட்ட தரவின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டதாக ஆய்வு ஆசிரியரும், தொற்றுநோயியல் நிபுணரும், பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் நரம்பியல் மருத்துவருமான ஹோலி எல்சர் கூறினார்.

மனச்சோர்வு

மனச்சோர்வு நோய் கண்டறியப்பட்டவர்கள் அல்லது இல்லாதவர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களில் பிற்கால வாழ்க்கையில் யாரெல்லாம் டிமென்ஷியாவுக்கு ஆளாகிறார்கள் என்பதை அறிய, பல ஆண்டு காலம் அவர்கள் கண்காணிக்கப்பட்டதாக, இந்த ஆய்வு தெரிவிக்கிறது. கல்வி, வருமானம், இதய நோய், நீரிழிவு நோய் போன்ற காரணிகள் அடிப்படையில் ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்திய பெரிய தரவுத்தொகுப்பு மற்றும் பல பகுப்பாய்வுகள், அவர்களின் கண்டுபிடிப்புகளை வலுவானதாகவும் நம்பகமானதாகவும் மாற்றியிருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய ஆய்வு, டிமென்ஷியா ஆபத்து மற்றும் மனச்சோர்வு நோயறிதல்களுக்கு இடையே ஆரம்ப மற்றும் நடுப்பகுதியில் உள்ள தொடர்பைக் காட்டுகிறது. இளமைப் பருவத்தின் பிற்பகுதியில் உண்டாகும் மனச்சோர்வு, பெரும்பாலும் டிமென்ஷியாவின் ஆரம்ப அறிகுறியாகக் கருதப்படுகிறது, மேலும் பல முந்தைய ஆய்வுகள், இரண்டுக்கும் இடையே உள்ள தொடர்பைக் காட்டியுள்ளது.

Representational Image

ஆராய்ச்சி முடிவுகள் மனச்சோர்வு, முதுமை மறதியின் ஆரம்ப அறிகுறி மட்டுமல்ல, மனச்சோர்வு டிமென்ஷியா அபாயத்தை அதிகரிக்கிறது என்பதற்கு வலுவான ஆதாரங்களை வழங்குவதாக, மருத்துவர் ஹோலி எல்சர் கூறியுள்ளார்.

மனச்சோர்வு என்பது பரவலாக உள்ளதையும், நிகழ்காலத்தில் மன ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்வது, எதிர்கால நல்வாழ்வுக்கு மிகவும் முக்கியமானது என்றும் அவர் கூறினார்.


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...