Skip to main content

மனநல மருத்துவமனைகள்... குணமடைந்தும் வீடு திரும்ப வழியின்றி நாடு முழுக்க 2000 பேர்!

நாடு முழுவதும் பல மனநல மருத்துவமனைகள் இருக்கின்றன. இந்த மருத்துவமனைகளில் உறவினர்களால் சேர்க்கப்படும் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் நாளடைவில் குணமடைந்த பிறகும், அவர்கள் தங்களது வீட்டிற்குத் திரும்ப முடியாமல் போய்விடுகிறது. அவர்களை உறவினர்களே கைவிட்டு விடுகின்றனர். இதுபற்றி அவ்வப்போது பேசப்படுவதுண்டு.

இந்நிலையில், டெல்லியில் மனநலம் குறித்த தேசிய மாநாடு நடந்தது. இதில் மத்திய அமைச்சர் பாரதி பிரவின் பவார் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில், தேசிய மனித உரிமைகள் கமிஷன் தலைவரும், ஓய்வுபெற்ற நீதிபதியுமான அருண் குமார் மிஸ்ரா, மனநல நோயாளிகள் சிகிச்சைக்குப் பிறகும் கைவிடப்படும் நிலைபற்றி பேசினார்.

’’குணமடைந்த நோயாளிகள் தங்கும் இடமாக மருத்துவமனைகள் இருக்கக்கூடாது. கடந்த 2022ம் ஆண்டு ஜூலையில் இருந்து 2023ம் ஆண்டு ஜனவரி வரை நாடு முழுவதும் உள்ள மனநல மருத்துவமனைகளில் தேசிய மனித உரிமை கமிஷன் ஆய்வு செய்தது. இதில் குணமடைந்த நிலையில் 2000 பேர் தங்களது சொந்த ஊருக்குச் செல்லாமல் தொடர்ந்து மருத்துவமனையிலேயே தங்கி இருக்கின்றனர். அவர்களால் வீட்டிற்குச் செல்ல முடியவில்லை. அவர்களில் 50 சதவிகிதம் பேர் மேற்கு வங்க மருத்துவமனைகளில் இருக்கின்றனர்.

மருத்துவமனைகள் குணமடைந்த நோயாளிகளுக்கான இடம் கிடையாது. மனநலம் பாதிக்கப்பட்டவர்களிடம் அனுதாபம் காட்டுவது மட்டும் போதுமானது கிடையாது. மனநிலை பாதித்தவர்களின் கண்ணியம் பாதுகாக்கப்படவேண்டும். பத்தில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் பல்வேறு விதமான மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மனநோயை சரி செய்ய இரக்கத்தை வரவழைக்கும் உரையாடல்கள் அவசியம்’’ என்று குறிப்பிட்டார்.

மனித உரிமை கமிஷன் ஆரம்பத்தில் குவாலியர், ராஞ்சி, ஆக்ரா மனநல மருத்துவமனைகளை ஆய்வு செய்தது. அதில் கிடைத்த அறிக்கையை தொடர்ந்து நாடு முழுவதும் இருக்கும் 47 மருத்துவமனைகளில் ஆய்வு செய்யப்பட்டதாக மனித உரிமை கமிஷன் அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் பேசிய அமைச்சர் பிரவின் பவார், மனநல பிரச்னையை பொது சுகாதார பிரச்னையாக கருதி அதனை சரி செய்வதில் அரசு வேகமாகச் செயல்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.

மனநலம் பாதிப்பு

மும்பையின் புறநகர் பகுதியான தானேயில் மனநல மருத்துவமனை இருக்கிறது. இம்மருத்துவமனையில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை உறவினர்கள் கொண்டு வந்துவிட்டு விட்டு சென்று விடுகின்றனர். அதன் பிறகு அவர்கள் வந்து பார்ப்பதோ, நிதியுதவி செய்வதோ கிடையாது. அதோடு குணமடைந்துவிட்டதாக தகவல் கொடுத்தாலும் வந்து அழைத்து செல்வதில்லை என்று மனநல மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்தனர்.


Comments

Popular posts from this blog

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...