Skip to main content

``மதிமுக-வை நடத்துவது வீண் வேலை; கட்சியிலிருந்து விலகுகிறேன்!" - வைகோவுக்கு சு.துரைசாமி கடிதம்

ம.தி.மு.க-வில் வைகோவின் மகன் துரை வைகோவின் நியமனத்துக்கு தொடக்கத்திலிருந்து எதிர்ப்பு தெரிவித்துவரும் அந்தக் கட்சியின் அவைத்தலைவர் சு.துரைசாமி, தற்போது ம.தி.மு.க-விலிருந்து விலகும் முடிவுக்கு வந்திருக்கிறார். இது தொடர்பாக திருப்பூரில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், ``ம.தி.மு.க-வின் வாழ்நாள் உறுப்பினர் பொறுப்பு உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் விலகுகிறேன். எனது விலகல் கடிதத்தை கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ, துணைப் பொதுச்செயலாளர்கள் மல்லை சத்யா, ஏ.கே.மணி ஆகியோருக்கு அனுப்பியிருக்கிறேன். நான் எந்த அரசியல் கட்சியிலும் சேருவதாக இல்லை. ஆனால் பெரியாரும், அண்ணாவும் எந்த லட்சியத்துக்காகப் பாடுபாட்டார்களோ, அந்த லட்சியத்துக்காக இனி என் வாழ்நாள் முழுவதும் பணியாற்றுவேன். சு.துரைசாமி கடந்த சட்டப்பேரவை, மக்களவைத் தேர்தல்களிலும் ம.தி.மு.க-விலிருந்து ராஜினாமா செய்துவிட்டுதான், தி.மு.க-வில் இணைந்து உதயசூரியன் சின்னம் பெற்று தேர்தலில் போட்டியிட்டார்கள். அப்படியென்றால், ஏற்கெனவே தி.மு.க-வில் இணைந்து விட்டதாகத்தானே அர்த்தம். ம.தி.மு.க இனி தனிக்கட்சி நடத்த வேண்டிய அவசியம் இல்லை. இனியும் ம.தி.மு.க-வை நடத்துவது வீண் வேலை. இளைஞர்களின் ஆற்றலை விரயமாக்க வேண்டாம். வைகோ சொல்வதை நான் பலமுறை எதிர்த்திருக்கிறேன். பேசுவது என்றாலும், விமர்சிப்பது என்றாலும் அவர் எல்லை தாண்டுவார். ஒருமுறை தன்னுடைய தவற்றை உணர்ந்து வைகோ என்னிடம் மன்னிப்புக் கடிதம் கொடுத்தார். அந்தக் கடிதம் என்னிடம் பத்திரமாக இருக்கிறது. கோயமுத்தூர் பெரியார் மாவட்ட திராவிட பஞ்சாலைத் தொழிலாளர் முன்னேற்றச் சங்கத்தின் பொதுச்செயலாளராக நானும், பொருளாளராக சீனிவாசனும் இருக்கிறோம். தொழிற்சங்கம் பதிவுசெய்யப்பட்ட அமைப்பு. ஆண்டுதோறும் வரவு, செலவு கணக்கு தாக்கல் செய்கிறோம். 1967-ம் ஆண்டு தி.மு.க சட்டப்பேரவை உறுப்பினராக நான் இருந்தபோது, கோவையில் தொழிற்சங்க கட்டடத்தை கருணாநிதி திறந்துவைத்தார். ம.தி.மு.க-வுக்கும், நாங்கள் நடத்திவரும் தொழிற்சங்கத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பஞ்சாலைத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளராகவே நான் தொடர்வேன்.வைகோ - திருப்பூர் துரைசாமி கொரோனா காலகட்டத்துக்குப் பிறகுதான் துரை வைகோ கட்சிக்குள் வந்தார். ம.தி.மு.க-வில் வைகோவுக்கு அடுத்து மல்லை சத்யா இருக்கிறார். அவர் கடந்த 30 ஆண்டுகளாக வைகோ செல்ல முடியாத இடங்களுக்கும், பல போராட்டங்களிலும் ஈடுபட்டவர். ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர், அவருக்குத்தான் பொறுப்பு கொடுத்திருக்க வேண்டும். ஆனால், கட்சிக்குப் பாடுபட்டவர்களை ஒதுக்கும் நிலைதான் இன்றைக்கு ம.தி.மு.க-வில் நிலவுகிறது” என்றார்.Loading…
http://dlvr.it/SpvWd1

Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...