Skip to main content

தொடர்ந்து மாஸ்க் அணிவதால் நோய் எதிர்ப்பு‌ சக்தி குறையுமா? மருத்துவ விளக்கம்!

கடந்த 2020-ம் ஆண்டில், ஒட்டுமொத்த உலகையே அச்சுறுத்தியது கொரோனா வைரஸ். கொரோனா தொற்றுப்பரவலுக்குப் பின், பொதுமக்களுக்கு பல சுகாதார நடைமுறைகள் கட்டாயமாக்கப்பட்டன. அதன்படி, சமூக இடைவெளியைப் பின்பற்றுவது, கட்டாயம் முகக்கவசம் அணிவது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் இருந்தன. ஆனால், சுகாதாரத்துறை நடவடிக்கைகள், தடுப்பூசி கண்டுபிடிப்பு போன்ற காரணங்களால் கொரோனா தொற்றின் பரவல் கட்டுக்குள் வந்தது. இதன் காரணமாக தற்போது சமூக இடைவெளி, முகக்கவசம் போன்ற எதுவும் கட்டாயம் இல்லை என்ற நிலைக்கு வந்துவிட்டோம்.

யோகா மற்றும் இயற்கை மருத்துவர் எஸ். வெங்கடேஸ்வரன்

எனினும், சிலர் முகக்கவசம் அணிவதைப் பார்க்கிறோம். வெளியில் செல்லும் நேரங்களைத் தவிர்த்து மணிக்கணக்காவும் சிலர் முகக்கவசம் போட்டுக்கொள்கின்றனர். இவ்வாறு எந்த நேரமும் முகக்கவசம் அணிவதால், நோய் எதிர்ப்பு சக்தி குறைவதற்கான வாய்ப்பு இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதன் உண்மைத்தன்மையை அறிய, யோகா மற்றும் இயற்கை மருத்துவர் வெங்கடேஷ்வரன் மற்றும் தொற்றுநோய் மருத்துவர் சுப்ரமணியன் சுவாமிநாதனிடம் ஆகியோரிடம் பேசினோம்.

மருத்துவர் வெங்கடேஷ்வரன் கூறுகையில், ``முகக்கவசம் அணிவது நல்லதுதான். முகக்கவசம் அணிவதால் நோய் எதிர்ப்பு சக்தி ஒருபோதும் குறையாது‌. தூசியிலிருந்து நம்மை காத்துக் கொள்ளலாம். காற்று மூலம் பரவும் நோய்களைக் கூட இதன் மூலம் தடுக்க முடியும். முகக்கவசம் அணிவதால் மூச்சுத்திணறல் ஏற்படும், நோய் எதிர்ப்பு சக்தி குறையும் என்று சொல்வதெல்லாம் நாமே நினைத்துக் கொள்வதுதான். முகக்கவசம் அணிவதால் சளி, இருமல், காய்ச்சல் வராமல் தடுக்க முடியும். அலர்ஜி, புகையினால் வரக்கூடிய புற்றுநோயைக்கூட ஓரளவு தடுக்க முடியும்" என்றார்.

தொற்றுநோய் மருத்துவர் சுப்ரமணியம் சுவாமிநாதன்

மருத்துவர் சுப்ரமணியன் சுவாமிநாதன் கூறும்போது, ``முகக்கவசம் அணிவதால் நோய் எதிர்ப்பு சக்தி குறையாது. இப்படி நினைப்பதே தவறான கண்ணோட்டம். மருத்துவர்கள் காலம் காலமாக 16 -18 மணிநேரம் முகக்கவசம் அணிந்துதான் அறுவை சிகிச்சை செய்கிறார்கள். அப்படியென்றால் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி எப்போதோ குறைந்திருக்க வேண்டும். எனவே, முகக்கவசம் அணிந்தால் நோய் எதிர்ப்பு சக்தி குறையும் என்பதெல்லாம் உண்மையல்ல" என்றார்.

ஜப்பான் போன்ற நாடுகளில், கொரோனாவுக்கு முன்பிருந்தே முகக்கவசம் அணிவது அவர்களது அன்றாட வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது. இதனால் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்க வாய்ப்புள்ளதா?

``ஜப்பான், கொரியா மக்களுக்கு முகக்கவசம் அணிவது அவர்களது கலாசாரத்தில் ஒன்றாகிவிட்டது. அவர்கள் எப்போது இந்தியாவிற்கு வந்தாலும் முகக்கவசம் அணிவதைப் பார்க்க முடியும். தங்களது உடல் குறித்த பாதுகாப்பில் ரொம்பவே அக்கறையுடன் இருப்பவர்கள். அவர்களுக்கு இதுவரை நோய் எதிர்ப்பு சக்தி குறைந்ததாகவும் எந்த சான்றும்‌ இல்லை".

WHO உலக சுகாதார அமைப்பு

கொரோனாவின் அடுத்த அலை வரக்கூடும்... தயாராக இருக்குமாறு, உலக சுகாதார அமைப்பு சமீபத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளதே?

``கொரோனாவின் அடுத்த அலை எப்போது வேண்டுமானாலும் ஏற்பட வாய்ப்புள்ளது. ஏற்கெனவே உண்டான கொரோனா பாதிப்பின்‌போது ஏராளமானோர் தடுப்பூசிகளைப் போட்டுக் கொண்டுள்ளனர். நோய்த்தொற்று பாதிப்பு இருந்து, தடுப்பூசியும் போட்டுக் கொண்டவர்களுக்கு நிச்சயம் எதிர்ப்பு சக்தி இருக்கும்.

மேலும் எல்லோரும் எல்லா நேரங்களிலும் முகக்கவசம் அணிய வேண்டும் என்பதும் கட்டாயமில்லை. முதியோர், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள் முகக்கவசம் அணிந்து கொள்வது நல்லது. கொரோனா மட்டுமன்றி பன்றிக் காய்ச்சல், இன்ஃப்ளுயென்ஸா போன்ற வைரஸ் பாதிப்புகளிலிருந்தும் நம்மை பாதுகாத்துக் கொள்ள இது உதவும்” என்றார்.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...