Skip to main content

`ஸ்டெர்லைட் ஆலை பராமரிப்பு பணிகளுக்கு அனுமதி?' - வலுக்கும் எதிர்ப்பு... பின்னணி என்ன?

2018-ம் ஆண்டும் மே மாதம் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 99 நாட்கள் அறவழியில் நடந்த போராட்டத்தில் 100-வது நாளில் போலீஸார் நடத்திய தடியடி, துப்பாக்கிச்சூடு சம்பங்களால் இரண்டு பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். பல நூறு பேர் கலவரத்தின்போது படுகாயமடைந்தனர். அதனையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவு பிறப்பித்தது தமிழக அரசு

ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டம்

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என கங்கணம் கட்டிக் கொண்டு திரிகிறது வேதாந்தா குழுமம். ஆகவே அரசின் உத்தரவை எதிர்த்து நீதிமன்றங்களில் மன்றாடி வருகிறது. ஆனால் எந்த முயற்சிகளும் கதைக்கு ஆகவில்லை. ஆகவே 2022 ஜூன் மாதம் தாமிர தயாரிப்பிற்குப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்களை விற்பதாக விளம்பரம் வெளியிட்டிருந்தது ஸ்டெர்லைட் நிறுவனம்.

இந்நிலையில் சமீபத்தில் ஆலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும், நிபுணர் குழுவின் அறிக்கையின்படி ஜிப்சம் உள்ளிட்ட பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும், இல்லையெனினும் ஆலையின் உபகரணங்கள் பாதிப்படையும். பராமரிப்பு பணி மேற்கொள்வதற்கான அனுமதியைக் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனுத்தாக்கல் செய்திருந்தது வேதாந்தா நிறுவனம்.

ஸ்டெர்லைட் ஆலை

இந்த மனு விசாரணைக்கு வந்தபோது பராமரிப்பு பணிகள், ஆய்வு பணிகளை என்போன்ற கோரிக்கைகளை நிராகரித்தது நீதிமன்றம். அதே சமயம் ஜிப்சம் கழிவுகளை அகற்ற 5 ஆண்டுகளுக்கு முன்பே நீதிமன்ற உத்திரவிட்டிருப்பதும், அதனை ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் செய்யத் தவறியதாகவும் தமிழ்நாடு அரசு தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. மேலும் ஜிப்சம் கழிவுகளை அகற்றிக் கொள்வதற்கு அரசு ஒருபோதும் தடையாக இருந்தது இல்லை என தமிழக அரசு நீதிமன்றத்தில் கூறியதை தொடர்ந்து ஜிப்சம் கழிவுகளை வெளியேற்றவும் பசுமை மண்டலத்தை பராமரிக்கவும் இது தொடர்பான பணிகளை மட்டும் மேற்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்திற்கு அனுமதியளித்துள்ளது உச்ச நீதிமன்றம்.

இதற்கு பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக ”ஸ்டெர்லைட் ஆலைக்குள் நிர்வாகத்தினரை அனுமதிக்கக் கூடாது, எந்த வகையான பராமரிப்புகளாக இருந்தாலும் அதனைத் தமிழக அரசே நேரடியாகச் செய்திட வேண்டும்” என ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கங்களும், பூவுலகின் நண்பர்கள் அமைப்பினரும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரை நேரடியாகச் சந்தித்து மனு அளித்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

உச்ச நீதிமன்றம்

நம்முடன் பேசிய பூவுலகின் நண்பர்கள் அமைப்பினர் சிலர் "ஸ்டெர்லைட் வளாகத்தில் ஜிப்சம் கழிவுகளை வெளியேற்ற தற்போது ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது இதனைத் தமிழக அரசின் உயர்மட்ட குழுவின் ஆலோசனையுடனே நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ஆலை நிர்வாகம் இதர சில பராமரிப்புகளுக்கும் அனுமதி கேட்டிருந்தாலும் தேவைகளை ஆராய்ந்து ஜிப்சம் கழிவுகளை வெளியேற்ற மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. ஜிப்சம் கழிவுகளை அகற்றும் பணிகளை அரசு எடுத்த செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கிறோம். தமிழ்நாடு அரசின் மாசு கட்டுப்பாட்டு வாரியம் முன்வந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும். ஒருபோதும் வேதாந்தா குழுவினரை ஆலைக்குள் அனுமதிக்கக் கூடாது

அரசு முன்னெடுத்து அதற்கான செலவுகள் ஆலை நிர்வாகத்திடம் வாங்கிக் கொள்ளட்டும். ஆலை நிர்வாகத்தினரை உள்ளே அனுமதித்தால் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயங்க வைக்க ஏதேனும் சதி வேலைகளைச் செய்திட வாய்ப்புகள் உள்ளது. காப்பர் தயாரிக்காமல் வேறொன்றைத் தயாரிக்கிறோம், அரசுக்கு உதவுகிறோம் என கிளம்பிவிடுவார்கள் ஆகவே தமிழக அரசே பராமரிப்பு வேலைகளைக் கையாள வேண்டும்” என்கிறார்கள் உறுதியாக...

ஸ்டெர்லைட் ஆலை

மேலும், ஸ்டெர்லைட் ஆலை எப்படியாவது மீண்டும் இயக்க வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு உள்ளடி வேலைகளைச் நிர்வாகத்தினர் செய்கின்றனர். தூத்துக்குடி பகுதி மக்களை அணுகி அவர்களின் கொந்தளிப்பைத் தணிப்பது, விளம்பரங்களின் மூலம் நல்லதொரு நிறுவனமாக தங்களை அடையாளப்படுத்திக் கொள்வது, தமிழ்நாடு ஆளுநரை ஸ்டெர்லைடுக்கு ஆதரவாகப் பேச வைப்பது, ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க-வின் உதவியை நாடி ஆலையைத் திறக்க திட்டம் தீட்டுவது உள்ளிட்ட பல வேலைகளைச் செய்துவரும் சூழலில் நிர்வாகத்தினரை ஆலை வளாகத்தில் அனுமதிப்பதை நாங்கள் எதிர்க்கிறோம் என்கிறார்கள் ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்தினர்.


Comments

Popular posts from this blog

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

Doctor Vikatan: நாள்பட்ட இருமல், கூடவே சிறுநீர்க்கசிவும், காதில் ஒலிக்கும் சத்தமும்... என்ன பிரச்னை?

Doctor Vikatan: என் வயது 50. எனக்கு நாள்பட்ட இருமல் இருக்கிறது. மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து எடுத்துக் கொண்டு இருக்கிறேன். இருமினால் சிறுநீர்க் கசிவு ஏற்படுகிறது. காதில் சில நேரங்களில் அலை அடிப்பது போல் சத்தம் கேட்கிறது. இதற்கெல்லாம் என்ன சிகிச்சை எடுக்க வேண்டும்? - Jayarani, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம். பொது மருத்துவர் அருணாசலம் உங்கள் விஷயத்தில் இருமலைக் கட்டுப்படுத்த முதலில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இரண்டு வாரங்களுக்கு மேல் தொடரும் இருமல், காசநோயின் அறிகுறியாகவும் இருக்கக்கூடும். நிறைய பேர் அது தெரியாமல் இருமல் மருந்தைக் குடித்துக் குடித்து அதைக் கட்டுப்பாட்டில் வைக்க முயல்கிறார்கள். இது தவறு. இருமலுக்கான காரணம் தெரிந்து சிகிச்சை எடுப்பதுதான் சரியானது. இருமலில் வறட்டு இருமல், சளியுடன் கூடிய இருமல், ஆஸ்துமா இருமல் என மூன்று வகை உண்டு. வறட்டு இருமல் என்பது ஒருவித பாக்டீரியாவால் வருவது. ஒவ்வொரு முறை இருமும்போதும் சளியும் சேர்ந்து வருவது, சளி இருமல். மூன்றாவது ஆஸ்துமாவினால், வீஸிங்கால் வருவது. அதாவது காற்றுப்பாதை ச...