Skip to main content

`ஸ்டெர்லைட் ஆலை பராமரிப்பு பணிகளுக்கு அனுமதி?' - வலுக்கும் எதிர்ப்பு... பின்னணி என்ன?

2018-ம் ஆண்டும் மே மாதம் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 99 நாட்கள் அறவழியில் நடந்த போராட்டத்தில் 100-வது நாளில் போலீஸார் நடத்திய தடியடி, துப்பாக்கிச்சூடு சம்பங்களால் இரண்டு பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். பல நூறு பேர் கலவரத்தின்போது படுகாயமடைந்தனர். அதனையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவு பிறப்பித்தது தமிழக அரசு

ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டம்

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என கங்கணம் கட்டிக் கொண்டு திரிகிறது வேதாந்தா குழுமம். ஆகவே அரசின் உத்தரவை எதிர்த்து நீதிமன்றங்களில் மன்றாடி வருகிறது. ஆனால் எந்த முயற்சிகளும் கதைக்கு ஆகவில்லை. ஆகவே 2022 ஜூன் மாதம் தாமிர தயாரிப்பிற்குப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்களை விற்பதாக விளம்பரம் வெளியிட்டிருந்தது ஸ்டெர்லைட் நிறுவனம்.

இந்நிலையில் சமீபத்தில் ஆலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும், நிபுணர் குழுவின் அறிக்கையின்படி ஜிப்சம் உள்ளிட்ட பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும், இல்லையெனினும் ஆலையின் உபகரணங்கள் பாதிப்படையும். பராமரிப்பு பணி மேற்கொள்வதற்கான அனுமதியைக் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனுத்தாக்கல் செய்திருந்தது வேதாந்தா நிறுவனம்.

ஸ்டெர்லைட் ஆலை

இந்த மனு விசாரணைக்கு வந்தபோது பராமரிப்பு பணிகள், ஆய்வு பணிகளை என்போன்ற கோரிக்கைகளை நிராகரித்தது நீதிமன்றம். அதே சமயம் ஜிப்சம் கழிவுகளை அகற்ற 5 ஆண்டுகளுக்கு முன்பே நீதிமன்ற உத்திரவிட்டிருப்பதும், அதனை ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் செய்யத் தவறியதாகவும் தமிழ்நாடு அரசு தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. மேலும் ஜிப்சம் கழிவுகளை அகற்றிக் கொள்வதற்கு அரசு ஒருபோதும் தடையாக இருந்தது இல்லை என தமிழக அரசு நீதிமன்றத்தில் கூறியதை தொடர்ந்து ஜிப்சம் கழிவுகளை வெளியேற்றவும் பசுமை மண்டலத்தை பராமரிக்கவும் இது தொடர்பான பணிகளை மட்டும் மேற்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்திற்கு அனுமதியளித்துள்ளது உச்ச நீதிமன்றம்.

இதற்கு பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக ”ஸ்டெர்லைட் ஆலைக்குள் நிர்வாகத்தினரை அனுமதிக்கக் கூடாது, எந்த வகையான பராமரிப்புகளாக இருந்தாலும் அதனைத் தமிழக அரசே நேரடியாகச் செய்திட வேண்டும்” என ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கங்களும், பூவுலகின் நண்பர்கள் அமைப்பினரும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரை நேரடியாகச் சந்தித்து மனு அளித்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

உச்ச நீதிமன்றம்

நம்முடன் பேசிய பூவுலகின் நண்பர்கள் அமைப்பினர் சிலர் "ஸ்டெர்லைட் வளாகத்தில் ஜிப்சம் கழிவுகளை வெளியேற்ற தற்போது ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது இதனைத் தமிழக அரசின் உயர்மட்ட குழுவின் ஆலோசனையுடனே நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ஆலை நிர்வாகம் இதர சில பராமரிப்புகளுக்கும் அனுமதி கேட்டிருந்தாலும் தேவைகளை ஆராய்ந்து ஜிப்சம் கழிவுகளை வெளியேற்ற மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. ஜிப்சம் கழிவுகளை அகற்றும் பணிகளை அரசு எடுத்த செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கிறோம். தமிழ்நாடு அரசின் மாசு கட்டுப்பாட்டு வாரியம் முன்வந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும். ஒருபோதும் வேதாந்தா குழுவினரை ஆலைக்குள் அனுமதிக்கக் கூடாது

அரசு முன்னெடுத்து அதற்கான செலவுகள் ஆலை நிர்வாகத்திடம் வாங்கிக் கொள்ளட்டும். ஆலை நிர்வாகத்தினரை உள்ளே அனுமதித்தால் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயங்க வைக்க ஏதேனும் சதி வேலைகளைச் செய்திட வாய்ப்புகள் உள்ளது. காப்பர் தயாரிக்காமல் வேறொன்றைத் தயாரிக்கிறோம், அரசுக்கு உதவுகிறோம் என கிளம்பிவிடுவார்கள் ஆகவே தமிழக அரசே பராமரிப்பு வேலைகளைக் கையாள வேண்டும்” என்கிறார்கள் உறுதியாக...

ஸ்டெர்லைட் ஆலை

மேலும், ஸ்டெர்லைட் ஆலை எப்படியாவது மீண்டும் இயக்க வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு உள்ளடி வேலைகளைச் நிர்வாகத்தினர் செய்கின்றனர். தூத்துக்குடி பகுதி மக்களை அணுகி அவர்களின் கொந்தளிப்பைத் தணிப்பது, விளம்பரங்களின் மூலம் நல்லதொரு நிறுவனமாக தங்களை அடையாளப்படுத்திக் கொள்வது, தமிழ்நாடு ஆளுநரை ஸ்டெர்லைடுக்கு ஆதரவாகப் பேச வைப்பது, ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க-வின் உதவியை நாடி ஆலையைத் திறக்க திட்டம் தீட்டுவது உள்ளிட்ட பல வேலைகளைச் செய்துவரும் சூழலில் நிர்வாகத்தினரை ஆலை வளாகத்தில் அனுமதிப்பதை நாங்கள் எதிர்க்கிறோம் என்கிறார்கள் ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்தினர்.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...