Skip to main content

கஞ்சா கடத்தல் வழக்கு: ஐ.நா வேண்டுகோளை நிராகரித்த அரசு... சிங்கப்பூரில் தமிழர் தூக்கிலிடப்பட்டார்!

உலகளவில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் குற்றங்களுக்கு எதிராக கடுமையான சட்டங்களைப் பின்பற்றும் சிங்கப்பூர் அரசு, ஒரு கிலோ கஞ்சா கடத்தல் வழக்கில் தமிழர் ஒருவருக்கு, சர்வதேச மனித உரிமை அமைப்புகளின் கோரிக்கைகளை மீறி மரண தண்டனையை நிறைவேற்றியிருக்கிறது.

முன்னதாக, கடந்த 2018-ல் ஒரு கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட தங்கராஜ் சுப்பையா என்பவரைச் சிங்கப்பூர் நீதிமன்றம் குற்றவாளி எனது தீர்ப்பளித்தது.

கஞ்சா

அதோடு, கஞ்சா கடத்தல் வழக்கில் மரண தண்டனை விதிப்பதற்கான குறைந்தபட்ச அளவை விடவும் தங்கராஜ் இரண்டு மடங்கு அதிகமாக வைத்திருந்ததாக அவர் மீதான மரண தண்டனையை நீதிமன்றம் உறுதிசெய்தது. நீதிமன்றத்தின் இத்தகைய தீர்ப்புக்கு மனித உரிமை அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தரப்புகளிலிருந்து கடும் எதிர்ப்புகளும், மரண தண்டனையை நீக்குமாறு கோரிக்கைகளும் வந்தன.

தங்கராஜூவின் குடும்பத்தினர், தங்கராஜ் எந்தத் தவறும் செய்யவில்லை என்றும், இதில் நியாயமான விசாரணை நடக்கவில்லை என்றும் குற்றம் சாட்டியிருந்தனர். அதோடு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை அலுவலகம், தங்கராஜூக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை அவசரமாக மறு பரிசீலனை செய்யுமாறு சிங்கப்பூர் அரசைக் கேட்டுக்கொண்டது.

சிங்கப்பூர் - தங்கராஜ் சுப்பையா

கூடவே, ஜெனீவாவை தளமாகக் கொண்ட மருந்துக் கொள்கைக்கான உலகளாவிய ஆணையத்தின் உறுப்பினர் ரிச்சர்ட் பிரான்சன், ``தங்கராஜூ கைது செய்யப்பட்ட நேரத்தில் உண்மையில் போதைப்பொருள் அருகில் எங்கும் இல்லை. ஒரு அப்பாவியை சிங்கப்பூர் கொல்லப்போகிறது. சிங்கப்பூரின் சில கொள்கைகள் காலனித்துவத்திற்குத் திரும்புவதைப் பார்ப்பது மிகவும் வருத்தமாக இருக்கிறது" எனக் கூறி மரண தண்டனையை நிறுத்துமாறு கடந்த திங்களன்று அழைப்பு விடுத்தார்.

தூக்கு தண்டனை

இதற்குப் பதிலளித்த சிங்கப்பூர் உள்துறை அமைச்சகம், தங்கராஜூவின் குற்றம் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டிருப்பதாக நேற்று தெரிவித்தது. இந்த நிலையில், தங்கராஜூவின் மரண தண்டனையை சிங்கப்பூர் அரசு இன்று நிறைவேற்றியது. இதன் மூலம் கடந்த ஆறு மாதங்களில் நிறைவேற்றப்பட்ட முதல் மரண தண்டனையாக இது அமைந்தது. மேலும் கடந்த ஆண்டு மார்ச் முதல் நிறைவேற்றப்பட்ட 12-வது மரண தண்டனை இதுவாகும்.


Comments

Popular posts from this blog

மரபணு சிகிச்சையில் செவித்திறன் பெற்ற சிறுமி - அனைத்து பரம்பரை நோய்களுக்கும் தீர்வு கிடைக்குமா?

நம் உடல், பல கோடான கோடி செல்களால் ஆனது. இந்தச் செல்களில் சுமார் 22 ஆயிரம் மரபணுக்கள் உள்ளன. பெரும்பாலான செல்களில் உட்கரு உண்டு. இங்குதான் DNA மூலக்கூறுகள் உள்ளன. இந்த DNA மூலக்கூறுகள்தான் இந்த மரபணுத் தகவல்களைச் சுமந்து கொண்டு உள்ளன. இந்த மரபணுக்களின் இயக்கம்தான், நம் இயக்கம். உதாரணமாக, நம் உமிழ் நீரில் அமைலேஸ் என்ற ஒரு நொதி உள்ளது. இந்த நொதிதான் நம் உணவில் உள்ள மாவுப் பொருளைச் சிதைத்து குளுக்கோஸை உற்பத்தி செய்கிறது. இந்த நொதியை உற்பத்தி செய்யத் தேவையான தகவல், AMY1 என்ற மரபணுவில் உள்ளது. இந்த மரபணுவில் உள்ள தகவலின் படிதான் அமைலேஸ் என்ற ஒரு நொதி தயாரிக்கப்படுகிறது. அதாவது, AMY1 என்ற மரபணுவில் ஏதாவது தவறு இருந்தால், அமைலேஸ் என்ற ஒரு நொதி செயலிழக்கும். இந்த நிலையில் உள்ள மரபணு நோயாளி, உணவு சாப்பிட்டால் அவருக்குச் செரிமானமாகாது. மரபணு அதிகரிக்கும் உணவுத் தேவை: தொழில்நுட்பத்தில் தயாராகும் செயற்கை மீன், இறைச்சி... உடலுக்கு நல்லதா..? மரபணுவில் உள்ள தகவலில் தவறு இருந்தால், மரபணு நோய் ஏற்படும். இதனைப் பரம்பரை நோய் எனலாம். காரணம், இந்த நோய் பெற்றோர்கள்/மூதாதையர்களிடமிருந்து பிள்ளைகளுக்கு ...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

Doctor Vikatan: நாள்பட்ட இருமல், கூடவே சிறுநீர்க்கசிவும், காதில் ஒலிக்கும் சத்தமும்... என்ன பிரச்னை?

Doctor Vikatan: என் வயது 50. எனக்கு நாள்பட்ட இருமல் இருக்கிறது. மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து எடுத்துக் கொண்டு இருக்கிறேன். இருமினால் சிறுநீர்க் கசிவு ஏற்படுகிறது. காதில் சில நேரங்களில் அலை அடிப்பது போல் சத்தம் கேட்கிறது. இதற்கெல்லாம் என்ன சிகிச்சை எடுக்க வேண்டும்? - Jayarani, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம். பொது மருத்துவர் அருணாசலம் உங்கள் விஷயத்தில் இருமலைக் கட்டுப்படுத்த முதலில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இரண்டு வாரங்களுக்கு மேல் தொடரும் இருமல், காசநோயின் அறிகுறியாகவும் இருக்கக்கூடும். நிறைய பேர் அது தெரியாமல் இருமல் மருந்தைக் குடித்துக் குடித்து அதைக் கட்டுப்பாட்டில் வைக்க முயல்கிறார்கள். இது தவறு. இருமலுக்கான காரணம் தெரிந்து சிகிச்சை எடுப்பதுதான் சரியானது. இருமலில் வறட்டு இருமல், சளியுடன் கூடிய இருமல், ஆஸ்துமா இருமல் என மூன்று வகை உண்டு. வறட்டு இருமல் என்பது ஒருவித பாக்டீரியாவால் வருவது. ஒவ்வொரு முறை இருமும்போதும் சளியும் சேர்ந்து வருவது, சளி இருமல். மூன்றாவது ஆஸ்துமாவினால், வீஸிங்கால் வருவது. அதாவது காற்றுப்பாதை ச...