Skip to main content

நெருப்போடு விளையாடும் மத்திய அரசாங்கம்!

மீண்டும் ஒருமுறை நெருப்போடு விளையாடியிருக்கிறது மத்திய அரசாங்கம். ஆம், சமையல் எரிவாயு சிலிண்டருக்கான விலையை ஒரு தவணையில் ரூ.50 வரை உயர்த்தியதன்மூலம் 14.2 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை ரூ.1,168.50-ஆக உயர்ந்திருக்கிறது. இப்படி விலையேற்றியதன்மூலம் பொருளாதாரத்தின் வறிய நிலையில் இருக்கும் சாதாரண மக்களை மத்திய அரசாங்கம் வாட்டி வதைக்கத் துணிந்திருக்கிறது.

சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை கடந்த ஐந்து ஆண்டுகளில் 100% உயர்ந்திருக்கிறது. 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் ஒரு சிலிண்டரின் விலை ரூ.663-ஆக இருந்தது. இது 2019-ம் ஆண்டில் 717-ஆக உயர்ந்து, 2019-ல் ரூ.825-ஆக அதிகரித்தது. கோவிட் உச்சத்தில் இருந்த 2020, 2021-ம் ஆண்டுகளில்கூட முறையே ரூ.826-ஆகவும், ரூ.835-ஆகவும் இருந்தது. 2022-ல் ரூ.915 என்கிற அளவுக்கு உயர்ந்து, இந்த ஆண்டில் ரூ.1,118-ஆக விற்கப் பட்ட சிலிண்டரின் விலை தற்போது ரூ.1,168 என்கிற அளவுக்கு அதிகரித்துள்ளது.

சமையல் எரிவாயு தயாரிக்க மூலப்பொருளாக இருப்பது கச்சா எண்ணெய். இதன் விலை சர்வதேச சந்தையில் கடந்த ஓராண்டு கணிசமாகக் குறைந்திருக்கிறது. கடந்த ஆண்டு மார்ச்-ல் சர்வதேச சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 123 அமெரிக்க டாலராக இருந்தது, இப்போது 84.50 டாலராகக் குறைந்து உள்ளது. ஆனால், இதே காலத்தில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை மட்டும் ரூ.915-லிருந்து ரூ.1,168-ஆக உயர்ந்திருக்கிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரும்போதெல்லாம் உள்நாட்டில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயுவின் விலையை உயர்த்திவரும் மத்திய அரசாங்கம், கச்சா எண்ணெய் விலை குறையும்போது மட்டும் இவற்றின் விலையைக் குறைக்காமல் இருப்பது ஏன்? அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து வருவதைக் காரணம் காட்டி, அன்றாடம் மக்கள் பயன்படுத்தும் ஒரு பொருளின் விலையை உயர்த்துவது எந்த வகையில் நியாயம்?

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயுவின் விலையை உயர்த்தும்போது, பணவீக்கம் அதிகரிக்கத் தொடங்கிவிடுகிறது. நம் நாட்டில் சில்லறைப் பணவீக்க விகிதம் (CPI) ஏற்கெனவே அதிகளவில் (கடந்த ஜனவரி மாத நிலவரப்படி, 6.5%) உள்ளது. இந்நிலையில், பணவீக்க விகிதம் குறைய வேண்டும் எனில், பெட்ரோல், டீசல், எரிவாயுவின் விலை மக்கள் எளிதில் வாங்கும் அளவில் இருக்க வேண்டும். ஆனால், மத்திய அரசோ இவற்றின் விலையை உயர்த்திக்கொண்டே செல்கிறது!

பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க எத்தனையோ வழிகள் இருக்கின்றன. அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் என்கிற பெயரில் பல ஆயிரம் கோடி ரூபாய் களை சலுகைகளாக அனுபவித்து வருகின்றனர். ஊழல் செய்வதற்கென்றே தேவையற்ற திட்டங்கள் தீட்டப்பட்டு பல ஆயிரம் கோடி ரூபாய் ‘ஸ்வாஹா’ செய்யப்படுகிறது. இவற்றை எல்லாம் களையெடுத்தாலே பொருளாதார சுமை குறையும். ஆனால், நடுத்தர, ஏழை மக்களுக்கான மானியங்களைக் குறைப்பதிலேயே குறியாக இருக்கிறது மத்திய அரசு. இத்தகைய போக்கை மாற்றிக்கொள்ளாவிட்டால், மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள் என்பது மட்டும் நிச்சயம்!

- ஆசிரியர்


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...