Skip to main content

புதுச்சேரி: முதல்வருக்கு மரியாதை தராத குற்றச்சாட்டு - பெண் ஐபிஎஸ் அதிகாரி பணியிட மாற்றம்!

புதுச்சேரியில் பட்ஜெட் ஆண்டு இறுதி செய்தவதற்கான கூட்டம் சமீபத்தில் நடந்தது. அதில் கலந்துகொள்வதற்காக வந்த முதல்வர் ரங்கசாமிக்கு சட்டம் ஒழுங்கு எஸ்.எஸ்.பி தீபிகா ஐ.பி.எஸ் மரியாதை செலுத்தவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது. அதையடுத்து ஆளுங்கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், தேனீ ஜெயக்குமார், சந்திர பிரியங்கா, எம்.எல்.ஏ-க்கள் ஆறுமுகம், கே.எஸ்.பி.ரமேஷ், பாஸ்கர் லட்சுமி காந்தன், சுயேச்சை எம்.எல்.ஏ அங்காளன் உள்ளிட்டவர்கள் உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தைச் சந்தித்து புகாரளித்தனர். அத்துடன், ”சீனியர் எஸ்.பி தீபிகா முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்களுக்கு மரியாதை கொடுப்பதில்லை. எம்.எல்.ஏ-க்கள் கூறும் பரிந்துரைகளையும் ஏற்பதில்லை. அதனால் அவரை மாற்றிவிட்டு தமிழ் தெரிந்த ஐ.பி.எஸ் அதிகாரியை நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

உள்துறை அமைச்சரிடம் புகாரளித்த என்.ஆர்.காங்கிரஸ் அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள்

அதனடிப்படையில் தலைமை செயலாளர் ராஜிவ் வர்மா, டி.ஜி.பி மனோஜ்குமார் லால் ஆகியோரை அழைத்து விசாரணை மேற்கொண்டார் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம். அதன் தொடர்ச்சியாக முதல்வரை அவமதித்த சீனியர் எஸ்.பி தீபிகா விரைவில் இடமாற்றம் செய்யப்படுவார் என்று சபாநாயகர் செல்வமும் கூறியிருந்தார். இந்த நிலையில், நேற்று நாடு முழுவதும் இருக்கும் 8 ஐ.ஏஸ்.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்திருக்கிறது மத்திய உள்துறை அமைச்சகம். அதில் சீனியர் எஸ்.பி தீபிகாவை ஜம்மு காஷ்மீருக்கும், காரைக்காலிலிருந்த சட்டம் ஒழுங்கு சீனியர் எஸ்.பி லோகேஷ்வரனை மிசோராமுக்கும் பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்திருக்கிறார் மத்திய அரசின் சார்பு செயலர் ராகேஷ் குமார் சிங். அதேபோல மிசோராமில் தற்போது பணிபுரியும் ஐ.ஏ.எஸ் அதிகாரி குலோத்துங்கன், டெல்லியில் பணிபுரியும் பிரிஜேந்திர குமார் யாதவ் ஆகியோர் புதுச்சேரிக்கு மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றனர்.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...