Skip to main content

புதுச்சேரி: முதல்வருக்கு மரியாதை தராத குற்றச்சாட்டு - பெண் ஐபிஎஸ் அதிகாரி பணியிட மாற்றம்!

புதுச்சேரியில் பட்ஜெட் ஆண்டு இறுதி செய்தவதற்கான கூட்டம் சமீபத்தில் நடந்தது. அதில் கலந்துகொள்வதற்காக வந்த முதல்வர் ரங்கசாமிக்கு சட்டம் ஒழுங்கு எஸ்.எஸ்.பி தீபிகா ஐ.பி.எஸ் மரியாதை செலுத்தவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது. அதையடுத்து ஆளுங்கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், தேனீ ஜெயக்குமார், சந்திர பிரியங்கா, எம்.எல்.ஏ-க்கள் ஆறுமுகம், கே.எஸ்.பி.ரமேஷ், பாஸ்கர் லட்சுமி காந்தன், சுயேச்சை எம்.எல்.ஏ அங்காளன் உள்ளிட்டவர்கள் உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தைச் சந்தித்து புகாரளித்தனர். அத்துடன், ”சீனியர் எஸ்.பி தீபிகா முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்களுக்கு மரியாதை கொடுப்பதில்லை. எம்.எல்.ஏ-க்கள் கூறும் பரிந்துரைகளையும் ஏற்பதில்லை. அதனால் அவரை மாற்றிவிட்டு தமிழ் தெரிந்த ஐ.பி.எஸ் அதிகாரியை நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

உள்துறை அமைச்சரிடம் புகாரளித்த என்.ஆர்.காங்கிரஸ் அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள்

அதனடிப்படையில் தலைமை செயலாளர் ராஜிவ் வர்மா, டி.ஜி.பி மனோஜ்குமார் லால் ஆகியோரை அழைத்து விசாரணை மேற்கொண்டார் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம். அதன் தொடர்ச்சியாக முதல்வரை அவமதித்த சீனியர் எஸ்.பி தீபிகா விரைவில் இடமாற்றம் செய்யப்படுவார் என்று சபாநாயகர் செல்வமும் கூறியிருந்தார். இந்த நிலையில், நேற்று நாடு முழுவதும் இருக்கும் 8 ஐ.ஏஸ்.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்திருக்கிறது மத்திய உள்துறை அமைச்சகம். அதில் சீனியர் எஸ்.பி தீபிகாவை ஜம்மு காஷ்மீருக்கும், காரைக்காலிலிருந்த சட்டம் ஒழுங்கு சீனியர் எஸ்.பி லோகேஷ்வரனை மிசோராமுக்கும் பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்திருக்கிறார் மத்திய அரசின் சார்பு செயலர் ராகேஷ் குமார் சிங். அதேபோல மிசோராமில் தற்போது பணிபுரியும் ஐ.ஏ.எஸ் அதிகாரி குலோத்துங்கன், டெல்லியில் பணிபுரியும் பிரிஜேந்திர குமார் யாதவ் ஆகியோர் புதுச்சேரிக்கு மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றனர்.


Comments

Popular posts from this blog

``முதலிரவு முடிஞ்சதும் சில ஆண்கள் இப்படி யோசிக்கிறாங்க'' - காமத்துக்கு மரியாதை | சீஸன் 4 -122

நம்ப முடியாத பல பிரச்னைகள் செக்ஸில் இருக்கின்றன. அவற்றில் ஒரு பிரச்னை பற்றிதான் இந்தக் கட்டுரையில் செக்ஸாலஜிஸ்ட் காமராஜ் பேசவிருக்கிறார். ''அந்த இளைஞருக்கு முந்தைய நாள்தான் திருமணம் நடந்திருக்கிறது. மறுநாளே என்னைச் சந்திக்க வந்திருந்தார். ரொம்பவும் பதற்றமாக இருந்தார். ஆசுவாசப்படுத்தி விசாரித்தேன். 'டாக்டர், நேத்து எனக்கு ஃபர்ஸ்ட் நைட் நடந்துச்சு. கம்ப்ளீட் செக்ஸ் வெச்சுக்கிட்டோம். என் மனைவியோட பிறப்புறுப்புல இருந்து ரத்தமே வரலை. இந்தக் காலத்து கேர்ள்ஸ் வண்டி ஓட்டறாங்க... நிறைய விளையாட்டுகள்ல ஈடுபடறாங்க. அதனால கன்னித்திரை கல்யாணத்துக்கு முன்னாடியே கிழிஞ்சிருக்கும்ங்கிறது எனக்கும் தெரியும். ஸோ, ரத்தம் வராதது எனக்கு பிரச்னையே இல்ல. ஆனா, அவளோட பிறப்புறுப்பு ரொம்ப லூசா இருந்துச்சு. அவ ஏற்கெனவே செக்ஸ் பண்ணியிருக்கா டாக்டர். இல்லைன்னா ஒரு கன்னிப்பொண்ணுக்கு எப்படி பிறப்புறுப்பு லூசாகும்.... அவ ஏற்கெனவே செக்ஸ் பண்ணியிருக்கிறதை கண்டுபிடிக்க ஏதாவது டெஸ்ட் இருக்கா டாக்டர்' என்றார். Sexologist Kamaraj அதையெல்லாம் பெட்ரூமுக்கு வெளியே வைங்க! I காமத்துக்கு மரியாதை | சீஸன் 4 - 117 ...

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

மதச் சுதந்திர அறிக்கை: இந்தியா குறித்து அமெரிக்க ஆய்வறிக்கை சொல்வதென்ன?!

இந்தியாவின் பிரதமராக மூன்றாவது முறை தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சியில், சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் இந்தியாவில் அதிகரித்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவின் வெளியுறவுத்துறை நேற்று வெளியிட்ட, 2023-ம் ஆண்டுக்கான சர்வதேச மத சுதந்திரம் குறித்த ஆய்வறிக்கையில், ``சிறுபான்மையினர், குறிப்பாக முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மீதான வன்முறை தாக்குதல்கள், கொலைகள், வழிபாட்டு தளங்களை சேதப்படுத்துதல் உள்ளிட்டவை அதிகரித்திருக்கிறது.அமெரிக்கா முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகள், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தல், அடிப்படையில் பாரபட்சமான சட்டம் என ஐ.நா குறிப்பிட்டிருக்கும் குடியுரிமைச் சட்டம் அமல்படுத்தியது, சட்டவிரோத கட்டுமானங்களை அகற்றுவது என்ற பெயரில் இஸ்லாமிய சொத்துக்களை இடிப்பது, ரயிலில் ஒரு பாதுகாப்பு அதிகாரி முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்துக்காக மூன்று முஸ்லிம்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது, பசு பாதுகாப்பு என்ற பெயரில் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்துவது, சில நேரங்களில் அது கொலையில்...