Skip to main content

`கொடநாடு பெயரைச் சொல்லி பூச்சாண்டி காட்டுவது இனி செல்லாது!' - ஈரோட்டில் கொதித்த எடப்பாடி பழனிசாமி

ஈரோடு கிழக்குத் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து நேற்றைய தினம் இறுதிகட்ட பிரசாரத்தில் ஈடுபட்ட கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கருங்கல்பாளையத்தில் பேசுகையில், ``அ.தி.மு.க வேட்பாளர் தென்னரசுவை எதிர்த்துப் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் இளங்காேவன் ஏற்கெனவே மத்திய அமைச்சராக இருந்து, இந்த ஈரோடு கிழக்குத் தாெகுதிக்கு என்ன செய்தார். அவர் வெற்றி பெற்றால் அவரை இங்கு காணமுடியாது. தி.மு.க ஆட்சிக்கு வந்து 22 மாதங்களாகியும் இந்தத் தொகுதிக்கு எதையும் செய்யவில்லை. இதைக் கேட்டால் கொடநாடு பிரச்னையை கையில் எடுக்கிறார்கள். கொடநாடுக்கும், ஈரோடுக்கும் என்ன சம்பந்தம். கொடநாட்டில் நடைபெற்ற திருட்டில் சம்பந்தப்பட்டவர்களை நாங்கள் கைதுசெய்தோம். ஆனால் அந்தக் கொலையாளிகளுக்கு ஜாமீன் பெற்றுத் தந்தவர்கள் தி.மு.க-வினர். கேரளாவில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, போதைப்பொருள் கடத்தல் என கடும் குற்றங்கள் புரிந்த அவர்களுக்கு ஆதரவாக வாதாடுபவர் தி.மு.க-வின் எம்.பி என்றால் அதற்கு என்ன காரணம்?

பிரசாரம்

கொடநாடு பெயரைச் சொல்லி சும்மா பூச்சாண்டி காட்டுவது இனி செல்லாது. ஐ.ஜி தலைமையிலான விசாரணை கமிஷன், இந்த வழக்கை 90 சதவிகிதம் விசாரித்து நீதிமன்றத்தில் 750 பக்க அறிக்கையை தாக்கல் செய்திருந்த நிலையில், எதற்காக இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனக் கூறி மாற்றினீர்கள், இதில் ஏதோ உள்நோக்கம் உள்ளது. குற்றவாளிகளுக்கும், தி.மு.க-வுக்கும் ஏதோ தொடர்பு உள்ளது என்று மக்கள் பேசிக் கொள்கிறார்கள். இதற்கு விரைவில் விடை கிடைக்கும் என்ற செய்தியை இந்த நேரத்தில் பதிவுசெய்கிறேன்.

ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு தி.மு.க எதையும் செய்யவில்லை. ஆனால், நாங்கள் தொடர்ந்து பல்வேறு நலத்திட்டங்களை இந்தத் தொகுதிக்காக செய்து தந்திருப்பதால், நெஞ்சை நிமிர்த்தி உங்களிடம் வாக்குகளைக் தைரியமாக கேட்கிறோம். 7.50 லட்சம் முதியோர்களின் உதவித்தொகையை தி.மு.க அரசு நிறுத்திவிட்டது. உழைக்கும் திறனற்ற முதியோர்களின் உதவித்தொகையை நிறுத்தியவர்தான் இந்த சூப்பர் முதலமைச்சர் ஸ்டாலின்" என்றார். நீட் தேர்வை ரத்து செய்வது குறித்து காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி கூறியதைக் கேளுங்கள் எனக் கூறி எல்.இ.டி திரையில் நளினி, `சிதம்பரம் நீட் தேர்வு இனி ரத்து ஆகாது' என்று கூறிய பேட்டி ஒளிபரப்பப்பட்டது. அதேபோல, `ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வை ரத்துசெய்வோம்' என்று முதல்வர் ஸ்டாலினும், உதயநிதி ஸ்டாலினும் பேசிய காட்சிகள் ஒளிபரப்பப்பட்டன. இதைச் சுட்டிக்காட்டி எடப்பாடி பழனிசாமி மேலும் பேசுகையில், ``நீட் தேர்வை ரத்துசெய்வதாகக் கூறியதை கேட்டு 12 மாணவர்களின் உயிர் போனது. அவர்கள் உயிர் போனதற்கு தி.மு.க அரசுதான் பொறுப்பு. இதற்கு யார் காரணம்.

மக்களை ஏமாற்றியவர்களுக்கு தோல்வியைப் பரிசாக அளிக்க வேண்டும். தாங்கள் ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு ரூ.1,000 உரிமைத்தொகை அளிப்பதாகக் கூறியவர்கள், இதுவரை தரவில்லை. இரண்டு நாளுக்கு முன்பு இங்குப் பேசிய உதயநிதி ஸ்டாலின், `இப்போதுதான் கணக்கெடுத்துக் கொண்டிருக்கிறோம். இன்னும் 6 மாதங்களில் வழங்கி விடுவோம்' என்றார். ஆனால், ஈரோட்டில் பேசிய முதல்வர் ஸ்டாலின், `மார்ச் மாத பட்ஜெட்டில் அறிவித்து விடுவோம்' என்கிறார். அப்பாவும், மகனும் கூறுவது அனைத்தும் பொய். 22 மாதங்களாக தராதவர்கள் இப்போது தந்துவிடவா போகிறார்கள்,
மின்கட்டணம் 12 முதல் 54 சதவிகிதம் வரை உயர்த்தியிருக்கிறார்கள். சட்டம், ஒழுங்கு மிகவும் மோசமாக இருக்கிறது. 13-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை 25 கொலைகள் நடந்திருக்கின்றன. 13-ம் தேதி ஒரே நாளில் 9 கொலைகள் நடந்திருக்கின்றன. தி.மு.க ஆட்சியில் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. காவல்துறை மானியக் கோரிக்கையில்  2,136 பேர் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் விற்பவர்கள் என்று கணக்கெடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்திருந்தனர். இவர்களில் 148 பேர் மட்டுமே கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள்.

எடப்பாடி பழனிசாமி பிரசாரம்

மற்றவர்கள் எல்லாம் தி.மு.க-காரர்கள். இதை நான் சொல்லவில்லை. அவர்கள் கொடுத்த மானியக் கோரிக்கை தொடர்பான புத்தகத்தில்தான் இவ்வாறு குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஈரோட்டில் பேசிய ஸ்டாலின் பேச்சுவாக்கில், அ.தி.மு.க ஆட்சியில் நிறைவேற்றப்பட்டது என்று பேசிவிட்டார். உண்மையில் அ.தி.மு.க ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களைத்தான் ஸ்டாலின் இப்போது திறந்து வைத்துக் கொண்டிருக்கிறார். எனவே, அ.தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்பட்டது என்பதை ஸ்டாலினே ஒப்புக்கொள்கிறார் என்று எடுத்துக் கொள்ளலாம்.

ஏற்கெனவே ரூ.55 கோடியில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு நினைவு மண்டபம் கட்டினீர்கள். அதை தவறு என்று கூறவில்லை. ஆனால் ரூ. 81 கோடி செலவில் எழுதாத பேனாவை கடலில் வைப்பதால் யாருக்கு என்ன பயன், இது மக்களின் வரிப்பணம். மண்டபம் முன்பு ரூ. 2 கோடியில் பேனாவை வைத்துவிட்டு, மீதமுள்ள பணத்தை மாணவர்களுக்கு எழுதும் பேனாவை வாங்கிக் காெடுங்கள். 10 ஆண்டுக்கால அ.தி.மு.க ஆட்சியில் எதையும் செய்யவில்லை என்று ஸ்டாலின் கூறுகிறார். ஒரே ஆண்டில் 11 அரசு மருத்துவக் கல்லூரிகள் 7 சட்டக் கல்லூரிகள், 76 கலை அறிவியல் கல்லூரிகள், 3 கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், தலைவாசலில் ரூ.1,000 கோடி செலவில் பிரமாண்டமான கால்நடை மருத்துவப் பூங்கா கொண்டு வந்தோம். ஏராளமான பொறியியல், பாலிடெக்னிக் கல்லூரிகள் கட்டித் தந்தோம். இதன் காரணமாக இந்திய அளவில் உயர்கல்வித் திட்டத்தில் தமிழகம் முதலிடத்தை பெறச் செய்தோம்.

2011-ம் ஆண்டில் தி.மு.க ஆட்சி முடியும்போது, 100-க்கு 32 பேர் மட்டுமே உயர்கல்வி படித்துக் கொண்டிருந்தனர். இப்போது 100-க்கு 54 பேர் படிக்கிறார்கள். இதைப்பற்றி படித்தால்தான் இதெல்லாம் தெரியும். தனது குடும்பத்தை பற்றி மட்டுமே கவலைப்படுபவர்தான் ஸ்டாலின். எதிர்க்கட்சித் தலைவர் என்றும் பாராமல், `கண் தெரியாத கபோதி' என்று என்னைப் பற்றி ஸ்டாலின் கூறியிருக்கிறார். அவர்கள் கொடுத்த வாக்குறுதிகள் என்னிடம் இருக்கின்றன. இதெல்லாம் நீங்கள் கொடுத்த கோரிக்கைகள். இதை நிறைவேற்றவில்லை என்று கூறியதற்காக என்னை கண் தெரியாத கபோதி என்கிறார். உங்கள் கோரிக்கையை சொன்னதற்காகதான், அவர் அப்படி கூறியிருக்கிறார். எனவே அவர் என்னைச் சொல்லவில்லை. மக்களாகிய உங்களைத்தான் அவ்வாறு சொல்லியிருக்கிறார்.

அ.தி.மு.க. தொண்டர்

ஏழைகளுக்கு நிறைவேற்றப்பட்ட திட்டங்களை நிறுத்தியதுதான் ஸ்டாலினின் சாதனை. வரி மேல் வரி போட்டதுதான் மக்களுக்காக இவர்கள் செய்தது. ஈரோட்டில் மஞ்சள் ஆராய்ச்சி நிலையம் அமைப்பதாகக் கூறி அதை செய்யவில்லை. கைத்தறிகளுக்கு இலவச மின்சாரம் தருவதாகக் கூறி அதையும் தரவில்லை. இரு மாதங்களுக்கு ஒரு முறை மின்சாரக் கணக்கெடுப்பு என்று சொன்னதை செய்தீர்களா. பெண்களுக்கு தாலிக்குத் தங்கம், தூய்மைப் பணியாளர்களின் பணி நிரந்தரம் என்று கூறிவிட்டு இந்தத் தொகுதியைச் சேர்ந்த 2,000 தூய்மைத் தாெழிலாளர்களை பணியிலிருந்தே நீக்கிவிட்டார்கள். அரசு ஊழியருக்கு பென்சன் வழங்கும் திட்டத்தை நிறைவேற்றுவதாகக் கூறி அவர்களையும் ஏமாற்றி விட்டார். படித்தவர்களையும், படிக்காதவர்களையும் ஏமாற்றி பட்டை நாமம் அடித்தவர் ஸ்டாலின். 3 கூட்டத்தொடர்களில் 6 முறை சட்டப்பேரவையில் நான் பேசினேன். 2 மணி நேரம், இரண்டரை மணி நேரம் வரை புள்ளிவிவரத்தோடு பேசினேன். அத்தனையும் ஒளிபரப்பு செய்திருந்தால் நீங்கள் டெபாசிட்கூட வாங்க மாட்டீர்கள். ஆனால், மக்களுக்காக நான் பேசியதை ஒளிபரப்பாமல் தடுத்துவிட்டனர்.

இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஜெயலலிதா பற்றி அறிக்கை விடுத்திருக்கிறார். ஒரு முதல்வர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக இருந்தவர் ஜெயலலிதா. இப்படியொரு பெண்ணைப் பார்க்க முடியாது. தனிப்பெண்மணியாக பிளவுபட்ட கட்சியை ஒன்றாக்கி ஆட்சியை திறம்பட செய்தார் என்று புகழாரம் சூட்டியிருக்கிறார் ரஜினிகாந்த். ஜெயலலிதாவின் ஆட்சியை ரஜினிகாந்த்கூட புகழ்ந்திருக்கிறார். ஆனால் ஸ்டாலின் மட்டும் அ.தி.மு.க ஆட்சியில் எதையும் செய்யவில்லை என்று கூறுகிறார். அ.தி.மு.க ஆட்சியே பொற்கால ஆட்சி. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை, உணவு உற்பத்தியில் தொடர்ந்து 5 ஆண்டுகளாக தேசிய விருதுகளைப் பெற்றிருக்கிறோம். படித்தவர்கள் முதல் பாமரர்கள் வரை அனைவரையும் ஏமாற்றிய தி.மு.க ஆட்சியை நீங்கள் புறக்கணியுங்கள்" என்றார்.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...