Skip to main content

ஒன் பை டூ

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், செய்தித் தொடர்புச் செயலாளர், தி.மு.க

``அரைவேக்காட்டுத்தனமாகப் பேசியிருக்கிறார். `முற்றுகைப் போராட்டம்’ என்று சொல்லிவிட்டு, காவலர்கள் கைதுசெய்ய முற்படும்போது நம்பி வந்த தொண்டர்களை நட்டாற்றில் விட்டுவிட்டு ஆட்டோவில் தப்பித்துச் செல்வதும், `20,000 புத்தகங்கள் படித்திருக்கிறேன்’ என்று கூறுவதும், `ஐ.பி.எஸ் அதிகாரியாக இருந்தபோது இரண்டு லட்சம் கேஸ் போட்டிருக்கிறேன்’ என்று உளறுவதும் புத்திசாலித்தனம் என்றால் நாங்கள் செய்வது முட்டாள்தனம்தான். உதயநிதியின் கையில் ஏந்திய செங்கல் எதிர்த் தரப்பினருக்கு மரண பயத்தை ஏற்படுத்துகிறது. காரணம், கடந்த சட்டமன்றத் தேர்தலில் அந்த ஒற்றைச் செங்கல் என்ன செய்தது என்பதை அவர்கள் நன்கு உணர்ந்திருக்கிறார்கள். மதுரையில் எய்ம்ஸ் அறிவித்த சமயத்தில், நாடு முழுவதும் மொத்தம் ஆறு எய்ம்ஸ் மருத்துவமனைகள் அறிவிக்கப்பட்டன. அவற்றில் மூன்று பயன்பாட்டுக்கு வந்துவிட்டன. அவை அனைத்தும் வடமாநிலங்களில்தான் இருக்கின்றன. ஆனால், தமிழ்நாட்டில் இன்னும் சுற்றுச்சுவர்கூட எழுப்பவில்லை. மத்திய பா.ஜ.க அரசு தமிழ்நாட்டையும் தமிழர்களையும் திட்டமிட்டுப் புறக்கணிக்கிறது. இந்த அரசு இருக்கும்வரை தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமையவிட மாட்டார்கள். அண்ணாமலை எனும் அரசியல் கோமாளிக்கு அதைக் கேள்வி கேட்கத் துப்பில்லை. தன்னுடைய இருப்பைக் காட்டிக்கொள்ள உதயநிதியைப் பற்றிப் பேசிவருகிறார்.’’

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்,கரு.நாகராஜன்

கரு.நாகராஜன், மாநில துணைத் தலைவர், பா.ஜ.க

``உண்மையைத்தான் சொல்லியிருக்கிறார். தி.மு.க பொறுப்புக்கு வந்து 22 மாதங்கள் ஆகின்றன. உண்மையில் இந்த அரசு மக்களுக்கு உருப்படியாக ஏதாவது ஒரு திட்டம் கொண்டுவந்திருந்தால் அது குறித்து மக்களிடம் பேசி வாக்குச் சேகரிக்க முடியும். ஆனால், இதுவரை தி.மு.க ஆட்சியில் அப்படி எதுவுமே நடக்கவில்லை. எங்கு பார்த்தாலும் ரௌடிகளின் அராஜகம், கொலை, கொள்ளை என மாநிலம் முழுவதும் சட்டம்-ஒழுங்கு கெட்டுக்கிடக்கிறது. தன் மகனை அமைச்சராக்க வேண்டும், தன் தந்தைக்குப் பேனா சிலை வைக்க வேண்டும் என்பனவற்றில் காட்டும் அக்கறையை, சிறிதளவாவது மக்கள் நலனில் காட்டுகிறாரா... தன் தந்தையின் ஆட்சியின் பெருமைகளைச் சொல்லி வாக்கு கேட்க வக்கில்லாத உதயநிதி, வீதி வீதியாகச் செங்கல்லைத் தூக்கிக்கொண்டு அலைகிறார். தமிழகத்தின் 20 ஆண்டுக்கால கோரிக்கையான எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமையும் என்று அறிவித்தவர் பாரதப் பிரதமர் மோடி. சமீபத்தில்கூட நாடாளுமன்றத்தில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, `எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 1,900 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது’ என்று வெளிப்படையாகத் தெரிவித்திருக்கிறார். இதையெல்லாம் மறைத்துவிட்டு, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தில் உதயநிதி முட்டாள்தனமாக அரசியல் செய்துகொண்டிருக்கிறார் என்பதையே அண்ணாமலை பேசியிருக்கிறார்.’’


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...