Skip to main content

ஒன் பை டூ

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், செய்தித் தொடர்புச் செயலாளர், தி.மு.க

``அரைவேக்காட்டுத்தனமாகப் பேசியிருக்கிறார். `முற்றுகைப் போராட்டம்’ என்று சொல்லிவிட்டு, காவலர்கள் கைதுசெய்ய முற்படும்போது நம்பி வந்த தொண்டர்களை நட்டாற்றில் விட்டுவிட்டு ஆட்டோவில் தப்பித்துச் செல்வதும், `20,000 புத்தகங்கள் படித்திருக்கிறேன்’ என்று கூறுவதும், `ஐ.பி.எஸ் அதிகாரியாக இருந்தபோது இரண்டு லட்சம் கேஸ் போட்டிருக்கிறேன்’ என்று உளறுவதும் புத்திசாலித்தனம் என்றால் நாங்கள் செய்வது முட்டாள்தனம்தான். உதயநிதியின் கையில் ஏந்திய செங்கல் எதிர்த் தரப்பினருக்கு மரண பயத்தை ஏற்படுத்துகிறது. காரணம், கடந்த சட்டமன்றத் தேர்தலில் அந்த ஒற்றைச் செங்கல் என்ன செய்தது என்பதை அவர்கள் நன்கு உணர்ந்திருக்கிறார்கள். மதுரையில் எய்ம்ஸ் அறிவித்த சமயத்தில், நாடு முழுவதும் மொத்தம் ஆறு எய்ம்ஸ் மருத்துவமனைகள் அறிவிக்கப்பட்டன. அவற்றில் மூன்று பயன்பாட்டுக்கு வந்துவிட்டன. அவை அனைத்தும் வடமாநிலங்களில்தான் இருக்கின்றன. ஆனால், தமிழ்நாட்டில் இன்னும் சுற்றுச்சுவர்கூட எழுப்பவில்லை. மத்திய பா.ஜ.க அரசு தமிழ்நாட்டையும் தமிழர்களையும் திட்டமிட்டுப் புறக்கணிக்கிறது. இந்த அரசு இருக்கும்வரை தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமையவிட மாட்டார்கள். அண்ணாமலை எனும் அரசியல் கோமாளிக்கு அதைக் கேள்வி கேட்கத் துப்பில்லை. தன்னுடைய இருப்பைக் காட்டிக்கொள்ள உதயநிதியைப் பற்றிப் பேசிவருகிறார்.’’

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்,கரு.நாகராஜன்

கரு.நாகராஜன், மாநில துணைத் தலைவர், பா.ஜ.க

``உண்மையைத்தான் சொல்லியிருக்கிறார். தி.மு.க பொறுப்புக்கு வந்து 22 மாதங்கள் ஆகின்றன. உண்மையில் இந்த அரசு மக்களுக்கு உருப்படியாக ஏதாவது ஒரு திட்டம் கொண்டுவந்திருந்தால் அது குறித்து மக்களிடம் பேசி வாக்குச் சேகரிக்க முடியும். ஆனால், இதுவரை தி.மு.க ஆட்சியில் அப்படி எதுவுமே நடக்கவில்லை. எங்கு பார்த்தாலும் ரௌடிகளின் அராஜகம், கொலை, கொள்ளை என மாநிலம் முழுவதும் சட்டம்-ஒழுங்கு கெட்டுக்கிடக்கிறது. தன் மகனை அமைச்சராக்க வேண்டும், தன் தந்தைக்குப் பேனா சிலை வைக்க வேண்டும் என்பனவற்றில் காட்டும் அக்கறையை, சிறிதளவாவது மக்கள் நலனில் காட்டுகிறாரா... தன் தந்தையின் ஆட்சியின் பெருமைகளைச் சொல்லி வாக்கு கேட்க வக்கில்லாத உதயநிதி, வீதி வீதியாகச் செங்கல்லைத் தூக்கிக்கொண்டு அலைகிறார். தமிழகத்தின் 20 ஆண்டுக்கால கோரிக்கையான எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமையும் என்று அறிவித்தவர் பாரதப் பிரதமர் மோடி. சமீபத்தில்கூட நாடாளுமன்றத்தில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, `எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 1,900 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது’ என்று வெளிப்படையாகத் தெரிவித்திருக்கிறார். இதையெல்லாம் மறைத்துவிட்டு, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தில் உதயநிதி முட்டாள்தனமாக அரசியல் செய்துகொண்டிருக்கிறார் என்பதையே அண்ணாமலை பேசியிருக்கிறார்.’’


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

Doctor Vikatan: நாள்பட்ட இருமல், கூடவே சிறுநீர்க்கசிவும், காதில் ஒலிக்கும் சத்தமும்... என்ன பிரச்னை?

Doctor Vikatan: என் வயது 50. எனக்கு நாள்பட்ட இருமல் இருக்கிறது. மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து எடுத்துக் கொண்டு இருக்கிறேன். இருமினால் சிறுநீர்க் கசிவு ஏற்படுகிறது. காதில் சில நேரங்களில் அலை அடிப்பது போல் சத்தம் கேட்கிறது. இதற்கெல்லாம் என்ன சிகிச்சை எடுக்க வேண்டும்? - Jayarani, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம். பொது மருத்துவர் அருணாசலம் உங்கள் விஷயத்தில் இருமலைக் கட்டுப்படுத்த முதலில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இரண்டு வாரங்களுக்கு மேல் தொடரும் இருமல், காசநோயின் அறிகுறியாகவும் இருக்கக்கூடும். நிறைய பேர் அது தெரியாமல் இருமல் மருந்தைக் குடித்துக் குடித்து அதைக் கட்டுப்பாட்டில் வைக்க முயல்கிறார்கள். இது தவறு. இருமலுக்கான காரணம் தெரிந்து சிகிச்சை எடுப்பதுதான் சரியானது. இருமலில் வறட்டு இருமல், சளியுடன் கூடிய இருமல், ஆஸ்துமா இருமல் என மூன்று வகை உண்டு. வறட்டு இருமல் என்பது ஒருவித பாக்டீரியாவால் வருவது. ஒவ்வொரு முறை இருமும்போதும் சளியும் சேர்ந்து வருவது, சளி இருமல். மூன்றாவது ஆஸ்துமாவினால், வீஸிங்கால் வருவது. அதாவது காற்றுப்பாதை ச...

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...