Skip to main content

நோய் அறிகுறிகளை உணர்த்தும் வாய்...| வாய் சுகாதாரம் - 8

வாய் சுகாதாரம் குறித்து அறிவியல்ரீதியான தெளிவை ஏற்படுத்தி, பொதுவாக நமக்குள் எழும் கேள்விகளுக்கு விடை காண்பதே இத்தொடரின் நோக்கம். பல் மருத்துவத்துறையில் 20 ஆண்டுகள் அனுபவம் பெற்ற, தனியார் பல் மருத்துவக்கல்லூரி இணைப் பேராசிரியர் பா.நிவேதிதா, விகடன் வாசகர்களுக்காக இத்தொடரை எழுதி வருகிறார்.

கடந்த வாரம், பற்களின் அமைப்பு, அதில் உள்ள குறைபாடுகளை சரி செய்யும் முறைகள் குறித்து பார்த்தோம். இந்த வாரம், உடலில் நோய் இருப்பின், அதன் அறிகுறிகளை வாய் எப்படி வெளிப்படுத்துகிறது என்பதைப் பார்க்கலாம்.

பல் மருத்துவக்கல்லூரி இணைப் பேராசிரியர் பா.நிவேதிதா

வாய் சுகாதாரம் தொடரின் முதலாவது வாரத்தில் கூறியதை, நான் மீண்டும் இங்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். வாய் என்பது பற்களோடு சேர்ந்து நாக்கு, உதடு, கன்னத்தின் உள் சதைப்பகுதி, அணணம் மற்றும் ஈறு போன்ற பகுதிகளை உள்ளடக்கியது.

அது போலவே நம் உடலில் உள்ள மற்ற உறுப்புகள், அமைப்புகளில் ஏதேனும் நோயோ அல்லது செயலிழக்கும் தன்மையோ ஏற்படும்போது, அது கட்டாயம் வாயில் பிரதிபலிக்கும். அதனால்தான் மிக நுட்பமாக `வாய் நம் உடலின் நிலையைக் காட்டும் கண்ணாடி' என்று கூறுகிறோம்.

என்ன நோய்... எத்தகைய அறிகுறி?

உதாரணத்திற்கு, நீரிழிவு நோய் உள்ளவர்கள் பற்களைச் சுற்றி உள்ள ஈறுகளின் நலனில் அக்கறை செலுத்த வேண்டும். ஏனென்றால் கட்டுப்பாடற்ற சர்க்கரைநோய் உள்ளவர்களுக்கு வாய் சுகாதாரம் (Oral hygiene) நன்றாக இல்லையென்றால் ஈறுகள் பலவீனமடைந்து பற்கள் ஆட்டம் காணும் ஆபத்து உண்டு.

ஆகையால் ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக்கொண்டு அதோடு பற்களின், ஈறுகளின் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்தினால் பற்கள் ஆடி, விழுவதைத் தவிர்க்கலாம்.

நீரிழிவு நோயினால் ஏற்படும் பாதிப்பு | வாய் சுகாதாரம்

அதுபோல், வைட்டமின் சத்து மற்றும் இரும்புச்சத்து குறைபாடு, ரத்தச்சோகை ( Anemia) உள்ளவர்களுக்கு வாயில் சில பாதிப்புகள் ஏற்படும். அதை வைத்தே அவர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு இருக்கும் என்று ஊகித்துவிடலாம். உதடுகளின் ஓரங்களில் காய்ந்து வெடிப்புகள் போல காட்சியளிக்கும். அதோடு நாக்கின் மேல் பகுதி வழவழப்பாக இருக்கும்.

வைட்டமின் பி12 குறைபாட்டால் நாக்கில் ஒருவித எரிச்சல் தன்மை இருக்கும். வாய் முழுவதுமே நமநமப்பு போல உணர்வு இருக்கும். வைட்டமின் சி குறைபாடு இருப்பவர்களுக்கு ஈறுகளில் ரத்தக்கசிவும் பல் ஆட்டமும் இருக்கும். சத்துக் குறைபாட்டை சரி செய்தாலே இதுபோன்ற பிரச்னைகளில் இருந்து தப்பிக்கலாம்.

ரத்தப்புற்றும் ஈறுகளில் ரத்தப்போக்கும்

அடுத்ததாக, வயிற்றில் புண் மற்றும் அல்சர் பிரச்னைகள் இருந்தால், கன்னத்தின் உள்சதை பகுதியில் ஓரளவுக்கு பெரியதாகப் பார்க்க முடியும். அது போல ஆஸ்துமா போன்ற சுவாசப் பிரச்னைகள் மற்றும் வயிற்றில் அல்சர் இருந்தால் வாய் துர்நாற்றம் ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது.

சில நோயாளிகள் வருடக்கணக்கில் வலிப்பு நோய்க்கான மாத்திரைகளை உட்கொள்வர். அதன் பக்கவிளைவுகளாக ஈறுகள் பாதிக்கப்படும். மருத்துவரிடம் காண்பித்து வேறு மாத்திரைகளை உட்கொள்ளலாம். அதற்காக வலிப்புநோய் மாத்திரையை நிறுத்திவிடக்கூடாது.

ரத்தப் புற்று நோயின் வெளிப்பாடு | வாய் சுகாதாரம்

ரத்தப் புற்றுநோய் இருக்கும் நோயாளிகளுக்கு ஈறுகளில் இருந்து அசாதாரணமாக ரத்தப்போக்கு இருக்கும். இப்பகுதி மிகுந்த வீக்கத்தோடு காணப்படும். கர்ப்ப காலத்திலும் வாய் சுகாதாரத்தில் கவனம் செலுத்தாவிட்டால், ஈறுகளில் இருந்து ரத்தம் வடிவதைக் காணலாம். வீக்கமும் இருக்கும்.

வாயைச் சுத்தமாக வைத்திருந்தால் இந்தப் பிரச்னை வராது. மஞ்சள் காமாலை நோய் அறிகுறி இருப்பின் நாக்கு, நகக்கண்கள் மற்றும் கண்களின் வெள்ளைப்பகுதி ஆகியவை மஞ்சளாகக் காணப்படும். இதுவும் வாயில் இருக்கும் நோயின் வெளிப்பாடுதான்.

சரும நோய்கள் பாதிக்கும்போது, வாய்ப் பகுதியிலும் பாதிப்பு ஏற்படும். எடுத்துக்காட்டாக Lichen planus என்னும் சரும நோய், சரும பாதிப்பை ஏற்படுத்துவதோடு வாயிலும் அதன் விளைவுகளைக் காட்டும்.

வாயில் எரிச்சல், சிவந்து போதல் மற்றும் மெல்லிய கோடுகள் போன்ற வெளிப்பாடுகள் தெரியலாம். மன அழுத்தத்தினால் பல நோய்கள் வாயில் ஏற்படலாம். இதுபற்றிய விழிப்புணர்வு மக்களிடம் மிகக்குறைவாகவே இருக்கிறது.

வாயில் தோன்றும் சரும நோயின் வெளிப்பாடு

வாய் சுகாதாரம் மிக முக்கியம்!

நிறைவாக, ஹெச்ஐவி மற்றும் எய்ட்ஸ் நோயாளிகளுக்கு Candidiasis என்ற பூஞ்சை நோய் பெரும்பாலும் வாயில் நாக்கு மற்றும் அண்ணம் இவ்விரண்டு பகுதிகளிலும் பாதிப்பினை ஏற்படுத்தும். சில நேரங்களில் உடலில் வேறு எந்தப் பகுதியிலும் இல்லாமல் வாயில் மட்டுமே அந்த நோயின் அறிகுறி தெரியலாம். அந்த நேரத்தில் பல் மருத்துவரின் அறிவுரையின் பேரில் பொது மருத்துவரைச் சந்திப்பது மிக அவசியமானது.

நான் நிறைவாகக் குறிப்பிட விரும்புவது, வாயின் ஆரோக்கியமும் உடலின் நலனும் ஒன்றோடொன்று அறிவியல்பூர்வமாகவே இணைந்தவை. சீரிய இடைவெளியில் பல் மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுவதன் மூலம் பல் நோயிலிருந்து மட்டும் இல்லாமல் உடலின் மற்ற முக்கியமான பிரச்னைகள் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

வயிற்றுப்புண்ணினால் ஏற்படும் பாதிப்பு

தொடக்க நிலையிலேயே மற்ற ஆபத்தான நோய்களைக் கண்டறிந்து, அவற்றுக்கான சிகிச்சையை மேற்கொள்ள உதவும்.

பலமுறை நீங்கள் கேட்டு அலுத்துப் போயிருந்தாலும் திரும்பத் திரும்ப சொல்லிக் கொள்ளுங்கள்... `நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்று!


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...