Skip to main content

``பதவி வரும், போகும்; பி.டி.ஆர் மகன் என்பதே எனக்கு அடையாளம்... பெருமை" - பழனிவேல் தியாகராஜன்

மதுரை 14 -வது வட்ட திமுக சார்பாக புதூர் பேருந்து நிலையம் அருகே பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள், கிறிஸ்துமஸ் என முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது. இதில் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசிய அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், "கடந்த அண்டு எப்படி சாதனையை படைத்தோமோ, அதேபோல வரும் ஆண்டிலும் நிதித்துறையில் ஒரு முன்னேற்றத்தை காண்போம்.

முப்பெரும் விழா

படித்தவர்கள் சிந்தனையுள்ளவர்கள் சரியான இடத்தில் இருந்தால்தான், உரியவர்கள் அவர்களுக்கு ஊக்கம் கொடுத்தால் சிறப்பான இடத்தை அடையலாம்.

பேராசிரியர் அன்பழகன் எனக்கு தந்தை போன்றவர், என்னை தனியாக அழைத்து நீண்டநேரம் அறிவுரை கூறுவார். இருக்கும் தொழிலை சிறப்பாக செய்து தனி அடையாளத்தை நிரூபித்துவிட்டு அரசியலுக்கு வாருங்கள் என கூறினார். அந்த வார்த்தையின்படி நான் பல வங்கிகளில் பணியாற்றி பொருளாதார முன்னேற்றம் அடைந்த பிறகுதான் அரசியலுக்கு வந்தேன்.

வந்திருந்த மக்கள்

உதயநிதியை கட்சியின் அசையும் சொத்து என ஏன் கூறினேன் தெரியுமா? திமுக-வின் உறுப்பினர்களின் சராசரி வயது, மக்களின் சராசரி வயதை விட அதிகமாக உள்ளது.

திமுக மூத்த அமைச்சர்கள் 70 முதல் 75 வயது உடையவர்களாக உள்ளனர். இதனால் வயது வித்தியாசத்தை குறைக்கும் வகையில் இளைஞர் ஒருவர் பொறுப்புக்கு வருவது கட்சியின் எதிர்காலத்திற்கு நல்லது என்கிற வகையில் உதயநிதி அமைச்சராகியுள்ளார். இதனால்தான் கட்சியின் அசையும் சொத்து என கூறினேன்.

என்னோடு பாசத்தோடு பரஸ்பர உரிமையோடு நெருங்கி பழகுபவர் உதயநிதி, அண்ணன் என்ற முறையில் அவருக்கு எந்த வகையில் உதவ முடியுமோ அந்த வகையில் உதவி செய்வேன்.

உண்மையாக மதத்தை பின்பற்றும் எல்லா மதத்தினரோடும் பாசத்தோடும் அன்போடும் இருக்க வேண்டும். மதத்தை பின்பற்றுபவர் நல்ல மனிதராக இருக்க வேண்டும், அடுத்தவரை நேசிக்க வேண்டும்.

பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்

பதவி, பொறுப்பு வரும் போகும். நாளை 10 சீட்டுகள் கூட கிடைக்காத கட்சியாக மாறலாம். ஆனால், மனிதனின் அன்பு பாசத்திற்கு மரியாதை கொடுக்க வேண்டும். உலகில் எனக்கு எத்தனை பதவி வந்தாலும் நான் பி.டி.ஆரின் மகன் என்பதே பெருமை என் அடையாளம், அதற்கு மேல் யாராலும் எனக்கு எந்த பதவியும் கொடுக்கவும் முடியாது, எடுக்கவும் முடியாது" என்றார்.


Comments

Popular posts from this blog

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

Doctor Vikatan: நாள்பட்ட இருமல், கூடவே சிறுநீர்க்கசிவும், காதில் ஒலிக்கும் சத்தமும்... என்ன பிரச்னை?

Doctor Vikatan: என் வயது 50. எனக்கு நாள்பட்ட இருமல் இருக்கிறது. மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து எடுத்துக் கொண்டு இருக்கிறேன். இருமினால் சிறுநீர்க் கசிவு ஏற்படுகிறது. காதில் சில நேரங்களில் அலை அடிப்பது போல் சத்தம் கேட்கிறது. இதற்கெல்லாம் என்ன சிகிச்சை எடுக்க வேண்டும்? - Jayarani, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம். பொது மருத்துவர் அருணாசலம் உங்கள் விஷயத்தில் இருமலைக் கட்டுப்படுத்த முதலில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இரண்டு வாரங்களுக்கு மேல் தொடரும் இருமல், காசநோயின் அறிகுறியாகவும் இருக்கக்கூடும். நிறைய பேர் அது தெரியாமல் இருமல் மருந்தைக் குடித்துக் குடித்து அதைக் கட்டுப்பாட்டில் வைக்க முயல்கிறார்கள். இது தவறு. இருமலுக்கான காரணம் தெரிந்து சிகிச்சை எடுப்பதுதான் சரியானது. இருமலில் வறட்டு இருமல், சளியுடன் கூடிய இருமல், ஆஸ்துமா இருமல் என மூன்று வகை உண்டு. வறட்டு இருமல் என்பது ஒருவித பாக்டீரியாவால் வருவது. ஒவ்வொரு முறை இருமும்போதும் சளியும் சேர்ந்து வருவது, சளி இருமல். மூன்றாவது ஆஸ்துமாவினால், வீஸிங்கால் வருவது. அதாவது காற்றுப்பாதை ச...