Skip to main content

இலவச வேட்டி சேலை திட்டம்: "நெசவாளர்களிடமும் 10% கமிஷன் கேட்பவர்தான் அமைச்சர் காந்தி" - அண்ணாமலை

இலவச வேட்டி சேலை திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட ரூ.487.92 கோடியை வெளிமாநிலத்தின் தனியார் நிறுவனங்களுக்கு தாரை வார்க்க திட்டமிட்டிருந்தால், அதை பார்த்துக்கொண்டு தமிழக பா.ஜ.க சும்மா இருக்காது என அண்ணாமலை தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக தமிழக பா.ஜ.க தலைவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் நாளில் ஏழை, எளிய மக்கள் புத்தாடைகள் அணிய வேண்டும் என்பதற்காகவும், கைத்தறி நெசவாளர்களுக்கு ஆண்டு முழுவதும் தொடர்ந்து வேலை வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்துக்காகவும் மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் 1983-ம் ஆண்டு கொண்டுவந்தத் திட்டம் தான் விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டம்.

எம்.ஜி.ஆர்

தமிழகத்தில் ஆட்சிகள் மாறினாலும், இந்த திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஆட்சிக்கு வந்ததிலிருந்து முந்தைய ஆட்சி காலங்களில் கொண்டுவரப்பட்ட மக்கள் நலத்திட்டங்கள் ஒவ்வொன்றையும் கிடப்பில் போடும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது தி.மு.க அரசு.

வரும் பொங்கலுக்கு கரும்பு கொள்முதல் செய்யாமல் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முடக்க நினைத்த தி.மு.க தற்போது இலவச வேட்டி, சேலை திட்டத்தை முடக்கி நெசவாளர்களையும் வஞ்சிக்க நினைக்கிறது. தமிழகத்தில் பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் நெசவாளர் பெருமக்கள் வசிக்கிறார்கள். ஆயிரத்துக்கும் அதிகமான கைத்தறி நெசவாளர் குடும்பங்கள், இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற்று வருகிறார்கள்.

ஆனால் கடந்த 2021-ம் ஆண்டிலேயே, அதிகமான அளவில் தனியாரிடம் கொள்முதல் செய்து நெசவாளப் பெருமக்கள் வயிற்றில் அடித்த இந்த தி.மு.க அரசு, அடுத்த ஆண்டு இவ்வாறு நடக்காது என்று கூறியிருந்த நிலையில், இந்த ஆண்டும் பெருமளவில் தனியாரிடம் கொள்முதல் செய்வதற்கு திட்டமிட்டிருப்பது தெரிய வந்திருக்கிறது. ஆண்டுதோறும் ஜூன் மாதம் விலையில்லா வேட்டி சேலை உற்பத்திக்கான அரசாணை வெளியிடப்பட்டு பணிகள் தொடங்குவது வழக்கம்.

முதல்வர் ஸ்டாலின்

ஆனால், இந்த ஆண்டு மூன்று மாதங்கள் தாமதமாக, அக்டோபர் மாதம் தான் அரசாணை வெளியானது. அத்துடன் அரசு வழங்கிய நூல் தரம் குறைவாக இருந்ததால் உற்பத்தியும் பாதிக்கப்பட்டதாக வேதனை தெரிவிக்கின்றனர் நெசவாளப் பெருமக்கள்.

வழக்கமாக டிசம்பர் மாத இறுதியில் 80 சதவிகித அளவுக்கு விலையில்லா வேட்டி, சேலை உற்பத்தி பணிகள் முடிந்திருக்கும். ஆனால், தற்போது சேலை உற்பத்தி 42 சதவிகிதமும், வேட்டி உற்பத்தி 29 சதவிகிதம் மட்டுமே முடிவடைந்திருப்பதாக கவலை தெரிவித்திருக்கின்றனர். மூன்று மாதங்கள் கால தாமதமாக விலை இல்லா வேட்டி, சேலை உற்பத்திக்கான உத்தரவு வழங்கப்பட்டதாலும், தரமற்ற நூல் வழங்கி உற்பத்தியில் மேலும் தாமதப்படுத்தியதாலும், பொங்கலுக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், மொத்த உற்பத்தியையும் நிறைவேற்ற முடியாது என்று அச்சப்படுகின்றனர் நெசவாளர்கள்.

மொத்த உற்பத்திக்கான தரமான நூலை, வெறும் 1 மாதம் முன்பாக கடந்த நவம்பர் மாதம் தான் வழங்கி இருக்கிறது தி.மு.க அரசு. ஏழை எளிய மக்களும், நெசவாளர் பெருமக்களும் பலன் பெறும் வகையில் கொண்டுவரப்பட்ட இந்த விலை இல்லா வேட்டி சேலை வழங்கும் திட்டம். தி.மு.க-வுக்கு ஆதரவான தனியார் நிறுவனங்கள் மட்டுமே பயனடையும் படி மடைமாற்றம் செய்யப்படுகிறது என்று எண்ணும்படி நடந்து கொள்கிறது.

கைத்தறிதுறை அமைச்சர் காந்தி

ஒரு சேலை 200 ரூபாயும், ஒரு வேட்டிக்கு 75 ரூபாயும் பெற்றுக் கொண்டு நெசவு செய்யும் தொழிலாளர்களிடமும் 10% கமிஷன் கேட்பவர்தான் தி.மு.க-வின் கைத்தறி அமைச்சர் காந்தி. வேண்டுமென்றே நூல் கொள்முதல் உத்தரவை தாமதப்படுத்தி, தரமற்ற நூல் வழங்கி, அதன் மூலம் உற்பத்தியையும் தாமதப்படுத்தி இறுதியில் இந்த திட்டத்துக்காக ஒதுக்கப்பட்டதாக அறிவித்த ரூ. 487.92 கோடியை வெளிமாநிலத்தின் தனியார் நிறுவனங்களுக்கு தாரை வார்க்க திட்டமிட்டிருந்தால், அதை பார்த்துக்கொண்டு தமிழக பா.ஜ.க சும்மா இருக்காது என்பதை மிகப் பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்" எனக் குறிப்பிட்டிருக்கிறது.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...