Skip to main content

Doctor Vikatan: கூந்தலை வளரச் செய்யுமா காஸ்ட்லியான எண்ணெய்கள்?

Doctor Vikatan: முடி வளர்ச்சிக்கும் நாம் உபயோகிக்கும் எண்ணெய்க்கும் தொடர்புண்டா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த அரோமாதெரபிஸ்ட் கீதா அஷோக்...

கீதா அஷோக்

கூந்தல் வளர்ச்சியைத் தீர்மானிப்பதில் இரண்டு விஷயங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. உங்கள் ரத்தத்தில் கலந்திருக்கும் ஆக்ஸிஜனும், உங்கள் ரத்தத்தில் உள்ள ஊட்டச்சத்துகளும்தான் அதைத் தீர்மானிப்பவை.

நாம் அன்றாடம் சாப்பிடும் அனைத்து உணவுகளிலும் ஊட்டச்சத்துகள் உள்ளன. அது நீங்கள் சாப்பிடும் காய்கறி, கீரை, தயிர்சாதம் என எதுவாகவும் இருக்கலாம். முடி வளர்ச்சிக்கு காஸ்ட்லியான உணவுகள்தான் உதவும் என்றும் நினைக்க வேண்டாம். பழைய சோற்றில்கூட வைட்டமின் பி 12 சத்து அபரிமிதமாக உள்ளது. அது முடி வளர்ச்சிக்குப் பெரிதும் உதவக்கூடியது.

நீங்கள் தலைக்குத் தடவும் எண்ணெயானது மண்டைப் பகுதியை வறண்டு போகாமல் வைக்கக்கூடியது. முடியை இழுத்துப் பார்த்தால் அதன் நுனியில் வெள்ளைநிறத்தில் பல்ப் போன்ற ஒரு பகுதியைப் பார்க்கலாம். அதை `ஹேர் ஃபாலிக்கிள்' என்று சொல்கிறோம். அதாவது கூந்தலின் வேர்ப்பகுதியையும் மண்டைக்கு வெளியே தெரிகிற முடியையும் இணைக்கிற இடம் இது. இந்தப் பகுதி சில நேரம் வறண்டு போகலாம். அதன் காரணமாக பாக்கெட் போன்ற ஃபாலிக்கிள் பகுதி திறந்துகொண்டு, முடி உதிரத் தொடங்கும். எனவே இதற்கும் ஊட்டச்சத்துள்ள உணவுகள் மிக முக்கியம்.

கூந்தல் வளர்ச்சி

ஊட்டச்சத்துள்ள உணவுகளை உட்கொண்ட போதும் சிலருக்கு முடி உதிர்வு அதிகமாக இருக்கும். அவர்களுக்குத் தலையில் பொடுகு, அழுக்கு அதிகமிருக்கலாம். இன்ஃபெக்ஷன் இருக்கலாம். அதன் காரணமாகவும் ரத்த ஓட்டம் தடைப்பட்டு முடி உதிர்வு இருக்கும். எனவே கூந்தலை அடிக்கடி அலசி தலையில் பொடுகு, அழுக்கு சேராமல் சுத்தமாக வைத்திருப்பதுதான் கூந்தல் ஆரோக்கியத்துக்கு அடிப்படை. அதற்கடுத்து ஊட்டச்சத்துள்ள உணவுகளைச் சாப்பிடுவது. மற்றபடி எண்ணெய்க்கும் முடி வளர்ச்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...