Skip to main content

ஒன் பை டூ

சு.ரவி, சட்டமன்ற உறுப்பினர், அ.தி.மு.க

``உண்மையை வெளிப்படையாகப் பேசியிருக்கிறார். செந்தில் பாலாஜி அ.தி.மு.க-வில் இருந்த சமயத்தில், இன்றைய முதல்வரே அவர்மீது ஊழல் குற்றச்சாட்டுகளை அடுக்கியிருந்தார். இப்போது அவரே தி.மு.க-வுக்கு வந்ததும் புத்தர் ஆகிவிட்டாரா என்ன... செந்தில் பாலாஜி வெளிப்படையாகவும், நேரடியாகவும் லஞ்ச லாவண்யத்திலும் ஊழலிலும் ஈடுபட்டுவருகிறார். அரசு டாஸ்மாக் காலை 12 மணி முதல் இரவு 10 மணிவரை இயங்கிவருகிறது என்றால், செந்தில் பாலாஜியின் டாஸ்மாக் இரவு 10 மணி முதல் காலை 12 மணி வரை இயங்கி தனியாக கல்லாகட்டிக் கொண்டிருக்கிறது. இது குறித்த குற்றச்சாட்டுகள் வெளியில் வந்தும் செந்தில் பாலாஜியின் மீது எந்த விசாரணையும், நடவடிக்கையும் எடுக்கவில்லை இந்த அரசு. வரம்பை மீறிச் செயல்பட்டுக்கொண்டிருக்கும் அவர், விரைவில் சட்டத்தின் பிடியில் சிக்குவார் என்பதைத்தான் சி.வி.சண்முகம் இப்படிக் குறிப்பிட்டிருக்கிறார். மின் கட்டண உயர்வு, மின் இணைப்புடன் ஆதாரை இணைத்து மானியத்தை வெட்டும் முயற்சி போன்றவற்றால் மக்களின் வெறுப்புக்கு ஆளாகியிருக்கின்றன இந்த அரசும் மின்வாரியமும். இந்தத் திறனற்ற தி.மு.க ஆட்சியைத் தூக்கியெறிய மக்கள் துடித்துக்கொண்டிருக்கிறார்கள்.’’

சு.ரவி, ஏ.எம்.வி.பிரபாகர் ராஜா

ஏ.எம்.வி.பிரபாகர் ராஜா, சட்டமன்ற உறுப்பினர், தி.மு.க

``பொறாமையில் வாய்க்கு வந்ததைப் பேசியிருக்கிறார் சி.வி.சண்முகம். அ.தி.மு.க-விலிருந்து வந்த ஒருவர் தி.மு.க அமைச்சரவையில் சிறப்பாகப் பணியாற்றிக்கொண்டிருப்பதை அவரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. சி.வி.சண்முகம் எப்படிப் பேசுவார், உளறுவார் என்பதெல்லாம் மக்களுக்கே நன்றாகத் தெரியும் என்பதால் அவர் பேசுவதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. தொகுதிக்காக எந்த நேரத்தில், என்ன கோரிக்கை வைத்தாலும் அதை உடனே நிறைவேற்றிக் கொடுப்பவர் அமைச்சர் செந்தில் பாலாஜி. கடந்த ஆட்சியில் செய்த தவறுகளால்தான், இன்று மத்திய அரசுக்கு பயந்து பெட்டிப் பாம்பாக அடங்கிக் கிடக்கிறார்கள் அ.தி.மு.க-வினர். அந்த அ.தி.மு.க-வினர் ஊழலைப் பற்றிப் பேசுவதைப்போல ஒரு காமெடி உலகத்திலேயே இல்லை. முதல்வர் 24 மணி நேரமும் உழைத்துக்கொண்டிருக்கிறார். தி.மு.க ஆட்சி சிறப்பாக நடைபெறுவதாக, செல்லும் இடமெல்லாம் மக்கள் சொல்வதைக் கேட்க முடிகிறது. எனவே, தி.மு.க-வைக் களங்கப்படுத்த எதிர்க்கட்சியினர் என்ன முயற்சி எடுத்தாலும் அது தோல்வியிலேயே முடிகிறது.’’


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...