Skip to main content

ஒன் பை டூ

சு.ரவி, சட்டமன்ற உறுப்பினர், அ.தி.மு.க

``உண்மையை வெளிப்படையாகப் பேசியிருக்கிறார். செந்தில் பாலாஜி அ.தி.மு.க-வில் இருந்த சமயத்தில், இன்றைய முதல்வரே அவர்மீது ஊழல் குற்றச்சாட்டுகளை அடுக்கியிருந்தார். இப்போது அவரே தி.மு.க-வுக்கு வந்ததும் புத்தர் ஆகிவிட்டாரா என்ன... செந்தில் பாலாஜி வெளிப்படையாகவும், நேரடியாகவும் லஞ்ச லாவண்யத்திலும் ஊழலிலும் ஈடுபட்டுவருகிறார். அரசு டாஸ்மாக் காலை 12 மணி முதல் இரவு 10 மணிவரை இயங்கிவருகிறது என்றால், செந்தில் பாலாஜியின் டாஸ்மாக் இரவு 10 மணி முதல் காலை 12 மணி வரை இயங்கி தனியாக கல்லாகட்டிக் கொண்டிருக்கிறது. இது குறித்த குற்றச்சாட்டுகள் வெளியில் வந்தும் செந்தில் பாலாஜியின் மீது எந்த விசாரணையும், நடவடிக்கையும் எடுக்கவில்லை இந்த அரசு. வரம்பை மீறிச் செயல்பட்டுக்கொண்டிருக்கும் அவர், விரைவில் சட்டத்தின் பிடியில் சிக்குவார் என்பதைத்தான் சி.வி.சண்முகம் இப்படிக் குறிப்பிட்டிருக்கிறார். மின் கட்டண உயர்வு, மின் இணைப்புடன் ஆதாரை இணைத்து மானியத்தை வெட்டும் முயற்சி போன்றவற்றால் மக்களின் வெறுப்புக்கு ஆளாகியிருக்கின்றன இந்த அரசும் மின்வாரியமும். இந்தத் திறனற்ற தி.மு.க ஆட்சியைத் தூக்கியெறிய மக்கள் துடித்துக்கொண்டிருக்கிறார்கள்.’’

சு.ரவி, ஏ.எம்.வி.பிரபாகர் ராஜா

ஏ.எம்.வி.பிரபாகர் ராஜா, சட்டமன்ற உறுப்பினர், தி.மு.க

``பொறாமையில் வாய்க்கு வந்ததைப் பேசியிருக்கிறார் சி.வி.சண்முகம். அ.தி.மு.க-விலிருந்து வந்த ஒருவர் தி.மு.க அமைச்சரவையில் சிறப்பாகப் பணியாற்றிக்கொண்டிருப்பதை அவரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. சி.வி.சண்முகம் எப்படிப் பேசுவார், உளறுவார் என்பதெல்லாம் மக்களுக்கே நன்றாகத் தெரியும் என்பதால் அவர் பேசுவதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. தொகுதிக்காக எந்த நேரத்தில், என்ன கோரிக்கை வைத்தாலும் அதை உடனே நிறைவேற்றிக் கொடுப்பவர் அமைச்சர் செந்தில் பாலாஜி. கடந்த ஆட்சியில் செய்த தவறுகளால்தான், இன்று மத்திய அரசுக்கு பயந்து பெட்டிப் பாம்பாக அடங்கிக் கிடக்கிறார்கள் அ.தி.மு.க-வினர். அந்த அ.தி.மு.க-வினர் ஊழலைப் பற்றிப் பேசுவதைப்போல ஒரு காமெடி உலகத்திலேயே இல்லை. முதல்வர் 24 மணி நேரமும் உழைத்துக்கொண்டிருக்கிறார். தி.மு.க ஆட்சி சிறப்பாக நடைபெறுவதாக, செல்லும் இடமெல்லாம் மக்கள் சொல்வதைக் கேட்க முடிகிறது. எனவே, தி.மு.க-வைக் களங்கப்படுத்த எதிர்க்கட்சியினர் என்ன முயற்சி எடுத்தாலும் அது தோல்வியிலேயே முடிகிறது.’’


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...