Skip to main content

‘‘உன்னாலதான் சாகிறேன்; சந்தோஷமா இருங்க மாமா!’’ - காதலனுக்கு வீடியோ அனுப்பிவிட்டு மாணவி தற்கொலை

திருப்பத்தூர் மாவட்டம், நாட்டறம்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் மனோன்மணி. கணவனை இழந்த இவருக்கு 2 மகள்கள் இருந்தனர். மூத்த மகள் திருமணமாகி, கணவருடன் வசித்துவருகிறார். 23 வயதாகும் இளைய மகள் சரண்யா, தனியார் கல்லூரி ஒன்றில் எம்.ஏ முதலாம் ஆண்டு படித்துவந்தார். இதனிடையே, சரண்யாவிற்கும் அதே பகுதியைச் சேர்ந்த அருண் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்துவந்திருக்கிறார்கள். தற்கொலை அருண், ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். தற்சமயம், பணி நிமித்தமாக அருண் குஜராத்தில் உள்ளார். வெகுதூரத்தில் இருந்தாலும் போன் மூலம் இருவரும் பேசிவந்தனர். இந்த நிலையில், சமீப நாள்களாக சரண்யாவிடம் திடீரென கோபம் காட்டத் தொடங்கியிருக்கிறார் அருண். இதனால், மன உளைச்சலுக்கு ஆளான சரண்யா குளிர்பானத்தில் எலி பேஸ்ட் கலந்து, அதனை குடித்து தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். தற்கொலைக்கு முன்பு எலி பேஸ்ட் கலந்த குளிர்பானத்தை குடித்தபடியே செல்போனில் வீடியோ எடுத்து, தனது காதலன் அருணுக்கு பகிர்ந்திருக்கிறார். அந்த வீடியோவில், ‘‘சாரி மாமா. நான் உன்னை ரொம்பவும் கஷ்டப்படுத்திட்டேன். நான் உன் லைஃப்ல கண்டிப்பாக திரும்ப வரமாட்டேன். அவ்வளவுதான். போய் சேர்ந்துடுவேன். இனிமேல் நீ சந்தோஷமாகவும் நிம்மதியாகவும் இருக்கலாம். என் அம்மாவை மட்டும் பார்த்துக்கொள். சரண்யா உன்னை எவ்வளவு லவ் பண்ணேன் என்பதை புரிஞ்சிக்காமல் உன்பாட்டுக்கு பேசிக்கிட்டு இருக்கிற. நான் சாகிறேன். பாவம் என் அக்கா. எனக்காக எவ்வளவோ பண்ணா. ஆனால், இன்றைக்கு உன்னாலதான் சாகிறேன். லவ் யூ மாமா, பாய்..’’ என்று முடிகிறது அந்தக் காணொளி. இதுபற்றி நாட்டறம்பள்ளி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, சரண்யாவின் தற்கொலைக்குக் காரணமான அவரது காதலனிடம் விசாரிக்க முடிவு செய்திருக்கிறார்கள்.
http://dlvr.it/SdTMQX

Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...