Skip to main content

Doctor Vikatan: வெளிநாடுகளில் இருந்து வரும் மருந்து, மாத்திரைகளைப் பயன்படுத்தலாமா?

Doctor Vikatan: என் நண்பர்கள் பலரும் வெளிநாடுகளில் வசிக்கிறார்கள். அவர்கள் இந்தியா வரும்போது காய்ச்சலுக்கு, வலிக்கு என சில மாத்திரைகளைக் கொண்டு வந்து கொடுப்பார்கள். அவை இந்தியாவில் கிடைக்கும் மாத்திரைகளைவிட சக்தி வாய்ந்தவை என்று சொல்கிறார்கள். வெளிநாட்டிலிருந்து வரும் இத்தகைய மருந்துகளை இந்தியாவில் பயன்படுத்தலாமா? பக்கவிளைவுகள் இருக்குமா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த இன்டெர்னல் மெடிசின் மருத்துவர் ஆஃப்ரின் ஷாபிர்

இன்டெர்னல் மெடிசின் மருத்துவர் ஆஃப்ரின் ஷாபிர்

வெளிநாடுகளில் இருந்து வரும் மருந்துகளை நிச்சயம் பயன்படுத்தக்கூடாது. மருத்துவரின் பரிந்துரையில்லாமல் எந்த மருந்தையும் உபயோகிக்கவே கூடாது.

நாமாகவே மருந்துக் கடைகளுக்குச் சென்று மருத்துவரின் பரிந்துரையின்றி மருந்துகள் வாங்கிச் சாப்பிடுவது மிகவும் தவறானது. அப்படி நாமாக வாங்கி வீட்டில் சேகரித்து வைக்கும் மருந்துகளை வீட்டிலுள்ள யாரும் தவறாகப் பயன்படுத்த வாய்ப்புகள் அதிகம்.

உதாரணத்துக்கு சின்னச்சின்ன பிரச்னைகளுக்குக் கூட உடனே பாராசிட்டமால் மாத்திரையை எடுத்துக்கொள்ளும் வழக்கம் பலருக்கும் உண்டு. அப்படித் தேவைக்கதிகமாகவும் அடிக்கடியும் எடுத்துக்கொள்ளும் பாராசிட்டமால், கல்லீரல் பாதிப்பு உள்ளிட்ட பல பாதிப்புகளை ஏற்படுத்தும். எனவே காய்ச்சலுக்கோ, வலி நிவாரணத்துக்கோ, மருத்துவரின் பரிந்துரையின்றி மருந்துக் கடைகளில் நீங்களாக வாங்கிப் பயன்படுத்துவது சரியானதே அல்ல. இப்படி நம் நாட்டில், நமக்குப் பழக்கமான மருந்துக் கடைகளில் மருந்துகள் வாங்கிச் சாப்பிடுவதே ஆபத்தானது என்கிற நிலையில் வெளிநாடுகளிலிருந்து வாங்கி வரும் மருந்துகளைப் பயன்படுத்துவதென்பது இன்னும் ஆபத்தானது.

மாத்திரை

எனவே வெளிநாட்டுப் பொருள்களில் பலருக்கும் உள்ள மோகத்தை மருந்து விஷயத்திலும் காட்ட வேண்டாம். அந்த மருந்துகளைத் தவிர்ப்பதுதான் பாதுகாப்பானது. ஒருவருக்கு காய்ச்சலோ, உடல்வலியோ ஏற்படும்போது அதற்கான காரணம் தெரியாமல் மருந்துகள் வாங்கிப் பயன்படுத்துவது தவறானது. இந்நிலையில் அவற்றுக்கு வெளிநாட்டு மருந்துகளைப் பயன்படுத்துவதென்பது இன்னும் ஆபத்தானது. எனவே இதைத் தவிர்க்கவும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

``முதலிரவு முடிஞ்சதும் சில ஆண்கள் இப்படி யோசிக்கிறாங்க'' - காமத்துக்கு மரியாதை | சீஸன் 4 -122

நம்ப முடியாத பல பிரச்னைகள் செக்ஸில் இருக்கின்றன. அவற்றில் ஒரு பிரச்னை பற்றிதான் இந்தக் கட்டுரையில் செக்ஸாலஜிஸ்ட் காமராஜ் பேசவிருக்கிறார். ''அந்த இளைஞருக்கு முந்தைய நாள்தான் திருமணம் நடந்திருக்கிறது. மறுநாளே என்னைச் சந்திக்க வந்திருந்தார். ரொம்பவும் பதற்றமாக இருந்தார். ஆசுவாசப்படுத்தி விசாரித்தேன். 'டாக்டர், நேத்து எனக்கு ஃபர்ஸ்ட் நைட் நடந்துச்சு. கம்ப்ளீட் செக்ஸ் வெச்சுக்கிட்டோம். என் மனைவியோட பிறப்புறுப்புல இருந்து ரத்தமே வரலை. இந்தக் காலத்து கேர்ள்ஸ் வண்டி ஓட்டறாங்க... நிறைய விளையாட்டுகள்ல ஈடுபடறாங்க. அதனால கன்னித்திரை கல்யாணத்துக்கு முன்னாடியே கிழிஞ்சிருக்கும்ங்கிறது எனக்கும் தெரியும். ஸோ, ரத்தம் வராதது எனக்கு பிரச்னையே இல்ல. ஆனா, அவளோட பிறப்புறுப்பு ரொம்ப லூசா இருந்துச்சு. அவ ஏற்கெனவே செக்ஸ் பண்ணியிருக்கா டாக்டர். இல்லைன்னா ஒரு கன்னிப்பொண்ணுக்கு எப்படி பிறப்புறுப்பு லூசாகும்.... அவ ஏற்கெனவே செக்ஸ் பண்ணியிருக்கிறதை கண்டுபிடிக்க ஏதாவது டெஸ்ட் இருக்கா டாக்டர்' என்றார். Sexologist Kamaraj அதையெல்லாம் பெட்ரூமுக்கு வெளியே வைங்க! I காமத்துக்கு மரியாதை | சீஸன் 4 - 117 ...

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

மதச் சுதந்திர அறிக்கை: இந்தியா குறித்து அமெரிக்க ஆய்வறிக்கை சொல்வதென்ன?!

இந்தியாவின் பிரதமராக மூன்றாவது முறை தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சியில், சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் இந்தியாவில் அதிகரித்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவின் வெளியுறவுத்துறை நேற்று வெளியிட்ட, 2023-ம் ஆண்டுக்கான சர்வதேச மத சுதந்திரம் குறித்த ஆய்வறிக்கையில், ``சிறுபான்மையினர், குறிப்பாக முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மீதான வன்முறை தாக்குதல்கள், கொலைகள், வழிபாட்டு தளங்களை சேதப்படுத்துதல் உள்ளிட்டவை அதிகரித்திருக்கிறது.அமெரிக்கா முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகள், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தல், அடிப்படையில் பாரபட்சமான சட்டம் என ஐ.நா குறிப்பிட்டிருக்கும் குடியுரிமைச் சட்டம் அமல்படுத்தியது, சட்டவிரோத கட்டுமானங்களை அகற்றுவது என்ற பெயரில் இஸ்லாமிய சொத்துக்களை இடிப்பது, ரயிலில் ஒரு பாதுகாப்பு அதிகாரி முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்துக்காக மூன்று முஸ்லிம்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது, பசு பாதுகாப்பு என்ற பெயரில் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்துவது, சில நேரங்களில் அது கொலையில்...