Skip to main content

Doctor Vikatan: வெளிநாடுகளில் இருந்து வரும் மருந்து, மாத்திரைகளைப் பயன்படுத்தலாமா?

Doctor Vikatan: என் நண்பர்கள் பலரும் வெளிநாடுகளில் வசிக்கிறார்கள். அவர்கள் இந்தியா வரும்போது காய்ச்சலுக்கு, வலிக்கு என சில மாத்திரைகளைக் கொண்டு வந்து கொடுப்பார்கள். அவை இந்தியாவில் கிடைக்கும் மாத்திரைகளைவிட சக்தி வாய்ந்தவை என்று சொல்கிறார்கள். வெளிநாட்டிலிருந்து வரும் இத்தகைய மருந்துகளை இந்தியாவில் பயன்படுத்தலாமா? பக்கவிளைவுகள் இருக்குமா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த இன்டெர்னல் மெடிசின் மருத்துவர் ஆஃப்ரின் ஷாபிர்

இன்டெர்னல் மெடிசின் மருத்துவர் ஆஃப்ரின் ஷாபிர்

வெளிநாடுகளில் இருந்து வரும் மருந்துகளை நிச்சயம் பயன்படுத்தக்கூடாது. மருத்துவரின் பரிந்துரையில்லாமல் எந்த மருந்தையும் உபயோகிக்கவே கூடாது.

நாமாகவே மருந்துக் கடைகளுக்குச் சென்று மருத்துவரின் பரிந்துரையின்றி மருந்துகள் வாங்கிச் சாப்பிடுவது மிகவும் தவறானது. அப்படி நாமாக வாங்கி வீட்டில் சேகரித்து வைக்கும் மருந்துகளை வீட்டிலுள்ள யாரும் தவறாகப் பயன்படுத்த வாய்ப்புகள் அதிகம்.

உதாரணத்துக்கு சின்னச்சின்ன பிரச்னைகளுக்குக் கூட உடனே பாராசிட்டமால் மாத்திரையை எடுத்துக்கொள்ளும் வழக்கம் பலருக்கும் உண்டு. அப்படித் தேவைக்கதிகமாகவும் அடிக்கடியும் எடுத்துக்கொள்ளும் பாராசிட்டமால், கல்லீரல் பாதிப்பு உள்ளிட்ட பல பாதிப்புகளை ஏற்படுத்தும். எனவே காய்ச்சலுக்கோ, வலி நிவாரணத்துக்கோ, மருத்துவரின் பரிந்துரையின்றி மருந்துக் கடைகளில் நீங்களாக வாங்கிப் பயன்படுத்துவது சரியானதே அல்ல. இப்படி நம் நாட்டில், நமக்குப் பழக்கமான மருந்துக் கடைகளில் மருந்துகள் வாங்கிச் சாப்பிடுவதே ஆபத்தானது என்கிற நிலையில் வெளிநாடுகளிலிருந்து வாங்கி வரும் மருந்துகளைப் பயன்படுத்துவதென்பது இன்னும் ஆபத்தானது.

மாத்திரை

எனவே வெளிநாட்டுப் பொருள்களில் பலருக்கும் உள்ள மோகத்தை மருந்து விஷயத்திலும் காட்ட வேண்டாம். அந்த மருந்துகளைத் தவிர்ப்பதுதான் பாதுகாப்பானது. ஒருவருக்கு காய்ச்சலோ, உடல்வலியோ ஏற்படும்போது அதற்கான காரணம் தெரியாமல் மருந்துகள் வாங்கிப் பயன்படுத்துவது தவறானது. இந்நிலையில் அவற்றுக்கு வெளிநாட்டு மருந்துகளைப் பயன்படுத்துவதென்பது இன்னும் ஆபத்தானது. எனவே இதைத் தவிர்க்கவும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...