Skip to main content

Doctor Vikatan: வெளிநாடுகளில் இருந்து வரும் மருந்து, மாத்திரைகளைப் பயன்படுத்தலாமா?

Doctor Vikatan: என் நண்பர்கள் பலரும் வெளிநாடுகளில் வசிக்கிறார்கள். அவர்கள் இந்தியா வரும்போது காய்ச்சலுக்கு, வலிக்கு என சில மாத்திரைகளைக் கொண்டு வந்து கொடுப்பார்கள். அவை இந்தியாவில் கிடைக்கும் மாத்திரைகளைவிட சக்தி வாய்ந்தவை என்று சொல்கிறார்கள். வெளிநாட்டிலிருந்து வரும் இத்தகைய மருந்துகளை இந்தியாவில் பயன்படுத்தலாமா? பக்கவிளைவுகள் இருக்குமா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த இன்டெர்னல் மெடிசின் மருத்துவர் ஆஃப்ரின் ஷாபிர்

இன்டெர்னல் மெடிசின் மருத்துவர் ஆஃப்ரின் ஷாபிர்

வெளிநாடுகளில் இருந்து வரும் மருந்துகளை நிச்சயம் பயன்படுத்தக்கூடாது. மருத்துவரின் பரிந்துரையில்லாமல் எந்த மருந்தையும் உபயோகிக்கவே கூடாது.

நாமாகவே மருந்துக் கடைகளுக்குச் சென்று மருத்துவரின் பரிந்துரையின்றி மருந்துகள் வாங்கிச் சாப்பிடுவது மிகவும் தவறானது. அப்படி நாமாக வாங்கி வீட்டில் சேகரித்து வைக்கும் மருந்துகளை வீட்டிலுள்ள யாரும் தவறாகப் பயன்படுத்த வாய்ப்புகள் அதிகம்.

உதாரணத்துக்கு சின்னச்சின்ன பிரச்னைகளுக்குக் கூட உடனே பாராசிட்டமால் மாத்திரையை எடுத்துக்கொள்ளும் வழக்கம் பலருக்கும் உண்டு. அப்படித் தேவைக்கதிகமாகவும் அடிக்கடியும் எடுத்துக்கொள்ளும் பாராசிட்டமால், கல்லீரல் பாதிப்பு உள்ளிட்ட பல பாதிப்புகளை ஏற்படுத்தும். எனவே காய்ச்சலுக்கோ, வலி நிவாரணத்துக்கோ, மருத்துவரின் பரிந்துரையின்றி மருந்துக் கடைகளில் நீங்களாக வாங்கிப் பயன்படுத்துவது சரியானதே அல்ல. இப்படி நம் நாட்டில், நமக்குப் பழக்கமான மருந்துக் கடைகளில் மருந்துகள் வாங்கிச் சாப்பிடுவதே ஆபத்தானது என்கிற நிலையில் வெளிநாடுகளிலிருந்து வாங்கி வரும் மருந்துகளைப் பயன்படுத்துவதென்பது இன்னும் ஆபத்தானது.

மாத்திரை

எனவே வெளிநாட்டுப் பொருள்களில் பலருக்கும் உள்ள மோகத்தை மருந்து விஷயத்திலும் காட்ட வேண்டாம். அந்த மருந்துகளைத் தவிர்ப்பதுதான் பாதுகாப்பானது. ஒருவருக்கு காய்ச்சலோ, உடல்வலியோ ஏற்படும்போது அதற்கான காரணம் தெரியாமல் மருந்துகள் வாங்கிப் பயன்படுத்துவது தவறானது. இந்நிலையில் அவற்றுக்கு வெளிநாட்டு மருந்துகளைப் பயன்படுத்துவதென்பது இன்னும் ஆபத்தானது. எனவே இதைத் தவிர்க்கவும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: கொலஸ்ட்ரால் அதிகரித்தால் பக்கவாதம் வருமா?

Doctor Vikatan: கடந்த சில வருடங்களாகவே எங்கே பார்த்தாலும் ஸ்ட்ரோக் எனப்படும் பக்கவாத பாதிப்பு பற்றி அதிகம் கேள்விப்படுகிறோம். இதற்கான காரணம் என்ன.... கொலஸ்ட்ரால் அளவுக்கும் பக்கவாதத்துக்கும் தொடர்புண்டா? கொலஸ்ட்ரால் அதிகரித்தால் ஸ்ட்ரோக் வருமா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த நரம்பியல் மருத்துவர் மீனாட்சி சுந்தரம் நரம்பியல் மருத்துவர் மீனாட்சிசுந்தரம் Doctor Vikatan: அடிக்கடி வரும் நெஞ்சுவலி... அசிடிட்டி காரணமாகுமா? மூளைக்குச் செல்லும் ரத்தக்குழாய்களில் அடைப்போ, ரத்தக் கசிவோ ஏற்படுவதால்தான் பக்கவாதம் வருகிறது. ஓர் எளிய உதாரணம் மூலம் இதை விளக்குகிறேன். மூளை என்பதை உங்கள் வீட்டிலுள்ள மெயின் மின்சார போர்டு என்று கற்பனை செய்துகொள்ளுங்கள். அந்த போர்டு இயங்கவில்லை என்றால், வீட்டில் விளக்குகள் எரியாது, மின்விசிறி சுழலாது. இன்னும் டி.வி, ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் என எந்த மின் சாதனமும் இயங்காது. வீடுகளில் 3 ஃபேஸ் மின் சப்ளை இருக்கும். மின்சாரம் தடைப்படும்போது மூன்றில் ஒரு ஃபேஸில் மட்டும் மின்சாரம் வரும். அதனால் குறிப்பிட்ட சில மின்சாதனங்கள் மட்டும் இயங்கும். மூளையின் செயல்பாடும் கிட்ட...

மதச் சுதந்திர அறிக்கை: இந்தியா குறித்து அமெரிக்க ஆய்வறிக்கை சொல்வதென்ன?!

இந்தியாவின் பிரதமராக மூன்றாவது முறை தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சியில், சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் இந்தியாவில் அதிகரித்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவின் வெளியுறவுத்துறை நேற்று வெளியிட்ட, 2023-ம் ஆண்டுக்கான சர்வதேச மத சுதந்திரம் குறித்த ஆய்வறிக்கையில், ``சிறுபான்மையினர், குறிப்பாக முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மீதான வன்முறை தாக்குதல்கள், கொலைகள், வழிபாட்டு தளங்களை சேதப்படுத்துதல் உள்ளிட்டவை அதிகரித்திருக்கிறது.அமெரிக்கா முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகள், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தல், அடிப்படையில் பாரபட்சமான சட்டம் என ஐ.நா குறிப்பிட்டிருக்கும் குடியுரிமைச் சட்டம் அமல்படுத்தியது, சட்டவிரோத கட்டுமானங்களை அகற்றுவது என்ற பெயரில் இஸ்லாமிய சொத்துக்களை இடிப்பது, ரயிலில் ஒரு பாதுகாப்பு அதிகாரி முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்துக்காக மூன்று முஸ்லிம்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது, பசு பாதுகாப்பு என்ற பெயரில் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்துவது, சில நேரங்களில் அது கொலையில்...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...