Skip to main content

ரத்தம்... ரணம்... யுத்தம்... ஆப்கானியர்களின் அசுர ஆட்டம்!

எந்த வரைமுறைகளும் இல்லாமல், எந்த லாஜிக்கும் இல்லாமல், ரத்தம் தெறிக்கத் தெறிக்க இருபுறமிருந்தும் ஆட்கள் கூட்டம் கூட்டமாக மோதிக்கொள்ள வேண்டும். இப்படியான சண்டைக்காட்சிகளால் நிரம்பிய திரைப்படங்களுக்கே இப்போது அதிக மவுசு இருக்கிறது. ரசிகர்களுமே அவற்றைத்தான் அதிகமாக விரும்பிப் பார்க்கின்றனர். அந்தவகையில், நாம் இப்போது பார்க்கப்போகும் விளையாட்டை மையமாக வைத்து வெகு சீக்கிரமே கோலிவுட் இயக்குநர்கள் ஒரு படத்தை இயக்கினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. மைதானத்தை டாப் ஆங்கிளில் படம் பிடித்தால் வெறும் புழுதிப் படலம் மட்டுமே ஆக்கிரமித்திருக்கக்கூடிய அந்த விளையாட்டின் பெயர் ‘புஷ்காஷி.’ ஆப்கானிஸ்தான் நாட்டின் தேசிய விளையாட்டு இது.

அமெரிக்கப் படைகள் வெளியேறி தாலிபன்களின் கட்டுப்பாட்டில் ஆப்கானிஸ்தான் முழுமையாக வந்திருந்த சமயத்தில் இணையதளங்களில் சில வீடியோக்கள் வைரலாகின. அவற்றில், ஆயுதம் ஏந்திய தாலிபன் படைவீரர்கள் குழந்தைகள் ஆடும் ராட்டினத்திலெல்லாம் ஆடிக் குதூகலித்ததை பெரும்பாலும் அனைவரும் ரசித்துப் பார்த்திருப்போம். ‘குழந்தைப் பசங்க சார்...’ என உலகமே தாலிபன்களை நோக்கி சர்க்காஸ்ட்டிக் கமெண்ட்டுகளை வீசியது. ஆனால், இவ்வாண்டு தொடக்கத்தில் தாலிபன்கள் தடையை நீக்கி விளையாட அனுமதித்திருக்கும் ‘புஷ்காஷி’ ஆட்டம் குழந்தை மனம் படைத்தவர் களுக்கானதல்ல. வேட்டைத்தனத்தின் தாண்டவமும், ஆதிமனித மனத்தில் நிரம்பியிருந்த குரூரமும் முழுமையாக வியாபித்திருக்கும் போட்டி அது.

தமிழ்நாட்டின் ‘ஜல்லிக்கட்டு’, கர்நாடகாவின் ‘கம்பாலா’ போன்று நமக்குப் பரிச்சயமான விலங்குகளைப் பயன்படுத்தி ஆடும் ஆட்டத்தைப் போன்றதுதான் புஷ்காஷியும். ஆனால், இதன் வீரியம் நாம் இதற்கு முன் கண்டிராதது. செத்துப்போன ஆடுகள் அல்லது கன்றுகளின் தலைகளை மட்டும் அகற்றிவிட்டு அவற்றின் சிதையை மையமாக வைத்தே இந்த ஆட்டம் ஆடப்படுகிறது. சிதைகளைத் தண்ணீரில் 24 மணி நேரம் ஊற வைத்து, சில சமயங்களில் அவற்றினுள் மணலை அடைத்தும்கூடப் பயன்படுத்தப்படுகிறது. கரடுமுரடான மைதானத்தில் குதிரை மேல் அமர்ந்திருக்கும் வீரர்கள் இரு அணிகளாகப் பிரிந்து கொள்வார்கள். ஆடு அல்லது கன்றினுடைய பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்ட அந்தச் சிதையைப் பறித்துக்கொண்டுசென்று தூரத்தில் இருக்கும் ‘நீதியின் வட்டம்’ என அழைக்கப்படும் அந்த வட்டத்தினுள் போடவேண்டும். நீதியின் வட்டத்தை நெருங்கவிடாமல் எதிரணியினர் தடுப்பார்கள். அவர்களைத் தாண்டி அந்த வட்டத்தை அடைய வேண்டும். கால்பந்தில் கோல் அடிப்பதைப் போன்றதுதான் இதுவும். ஆனால், கால்பந்துக்கென்று நிறைய வரைமுறைகள் இருக்கின்றன. எக்கச்சக்கமான விதிமுறைகள் இருக்கின்றன. இங்கே அதெல்லாம் பெரிதாகக் கிடையாது. மேலே குறிப்பிட்டதைப் போல புழுதி பறக்க ஒரு ஆக்‌ஷன் காட்சியைப் பார்ப்பதைப் போன்ற உணர்வுதான் இதைப் பார்க்கையில் ஏற்படும்.

மேலே குறிப்பிட்டது ‘புஷ்காஷி’ ஆட்டத்தின் ஒரு வகை. இதேபோன்று அணிகளின்றிக் கூட்டமாகவும் வேறுவிதங்களிலும் இந்த ஆட்டம் ஆடப்படுகிறது. இந்த விளையாட்டின் பின்னணி என்னவெனத் தேடும்போது, துருக்கி-மங்கோலிய நாடோடிகளின் இடப்பெயர்வின் போது 10 மற்றும் 15-ம் நூற்றாண்டுகளுக்கு இடையில் இந்த விளையாட்டு தோன்றியதாக ஒரு செய்தி இருக்கிறது. இதுமட்டுமல்லாமல், ஆப்கானிஸ்தான் பழங்குடிகள் எதிர்த்தரப்பினரின் கால்நடைகளை வேட்டையாடித் தங்கள் முகாமுக்குக் கடத்தி வரும் வழக்கமே மருவி ‘புஷ்காஷி’ ஆக மாறியிருப்பதாகவும் கூறப்படுகிறது. இப்போது ஆப்கானிஸ்தானில் மட்டு மல்லாமல் கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான் போன்ற நாடுகளிலும் இந்த விளையாட்டு கிளை பரப்பியிருக்கிறது.

ஜல்லிக்கட்டில் மாடுகளைப் பிடிப்பது ஒரு கலையாகவும் வீரத்தின் அடையாள மாகவும் பார்க்கப்படுகிறது. ஜல்லிக்கட்டுக் காளைகளை வளர்ப்பதும் ஒரு தனி கௌரவமாக பாவிக்கப்படுகிறது. நம் மண்ணுக்கு ஒத்த இதே தன்மைகளை இந்த ‘புஷ்காஷி’ ஆட்டம் தன்னகத்தே கொண்டிருக்கிறது. இந்த விளையாட்டுகளில் பங்கேற்கும் வீரர்கள் அனைவராலும் சொந்தமாகக் குதிரைகளை வாங்கி அவற்றை முறையாகப் பராமரிக்க முடியாது. அந்த அளவுக்குப் பொருளாதார வசதி அவர்க ளிடம் இருக்காது. இதனால் ஊரிலேயே பெரிய செல்வந்தர்கள் குதிரைகளை வாங்கி இந்த ஆட்டத்திற்கென்றே பிரத்யேகமாகத் தயார் செய்து வைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையையும் போட்டி நடைபெறுவதற்கு முன்பாக நல்ல அனுபவமுள்ள வெல்லும் திறனுடைய சப்பந்தாஸ்களைக் கண்டறிந்து, அவர்களுக்குத் தங்களின் குதிரைகளைப் போட்டியில் ஆடுவதற்காகக் கொடுக்கிறார்கள். இந்தப் போட்டியில் ஆடி நிபுணத்துவம் பெற்றவர்களே ‘சப்பந்தாஸ்’ என அழைக்கப்படுகிறார்கள். அவர்கள் போட்டியில் குதிரையோடு ஆடிக் கிடைக்கும் பரிசுப்பொருள்களையும் பணத்தையும் குதிரைக்காரர்களோடு பங்கிட்டுக்கொள்கிறார்கள். பரிசைத் தாண்டி, பெருமிதத்தின் அடையாளமாகக் கருதும் தங்களின் குதிரை வெல்ல வேண்டும் என்பதே செல்வந்தர்களின் முதன்மை நோக்கமாக இருக்கிறது.

கடந்த நூற்றாண்டில் அமெரிக்கா, சோவியத் ரஷ்யா, உள்ளூர் அமைப்புகள் என ஆப்கானிஸ்தானை ஆள நடந்த யுத்தத்தின் போதுமே எல்லாத் தரப்பும் இந்த ஆட்டத்தை ஊக்குவித்திருக்கிறது. 90-களின் இறுதியில் தாலிபன்கள் ஆட்சியிலேயே இந்த ‘புஷ்காஷி’ ஆட்டத்திற்கு முழுமையாகத் தடைவிதிக்கப்பட்டது. மக்களின் பிரதான பொழுதுபோக்காக இந்த ஆட்டம் இருப்பது அறமற்ற செயல் என்பதால் தாலிபன்கள் தடைவிதித்திருக்கிறார்கள். இடையில் அமெரிக்கப் பிடியில் ஆப்கானிஸ்தான் சென்றபோது இந்த ஆட்டம் வழக்கம்போல ஆடப்பட்டது. இப்போது தாலிபன்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள். மக்களின் பொழுதுபோக்குகளுக்கு மூடுவிழா நடத்தும் வகையில் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கத் தொடங்கினர். ஆயினும், இந்த முறை ‘புஷ்காஷி’ தப்பித்துவிட்டது. தாலிபன்களும் இந்த விளையாட்டிற்கு அனுமதி கொடுத்து விட்டனர். கடந்த பிப்ரவரி-மார்ச்சில் தேசிய சாம்பியன்ஷிப் தொடரும் நடந்து முடிந்திருக்கிறது. நாடே குலைந்துபோய் மீள முடியாமல் அன்றாடமே சங்கடமாகிப் போயிருந்த சூழலிலும் அந்தத் தொடருக்கு வீரர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. இதன்மூலம் அந்த மக்களின் பாரம்பரியத்தில் இந்த ஆட்டம் எவ்வளவு ஊறியிருக்கிறது என்பதை உணர முடியும். என்னதான் இருந்தாலும் வயலன்ஸ் கொஞ்சம் ஜாஸ்திதான் பாஸ்!


Comments

Popular posts from this blog

மதச் சுதந்திர அறிக்கை: இந்தியா குறித்து அமெரிக்க ஆய்வறிக்கை சொல்வதென்ன?!

இந்தியாவின் பிரதமராக மூன்றாவது முறை தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சியில், சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் இந்தியாவில் அதிகரித்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவின் வெளியுறவுத்துறை நேற்று வெளியிட்ட, 2023-ம் ஆண்டுக்கான சர்வதேச மத சுதந்திரம் குறித்த ஆய்வறிக்கையில், ``சிறுபான்மையினர், குறிப்பாக முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மீதான வன்முறை தாக்குதல்கள், கொலைகள், வழிபாட்டு தளங்களை சேதப்படுத்துதல் உள்ளிட்டவை அதிகரித்திருக்கிறது.அமெரிக்கா முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகள், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தல், அடிப்படையில் பாரபட்சமான சட்டம் என ஐ.நா குறிப்பிட்டிருக்கும் குடியுரிமைச் சட்டம் அமல்படுத்தியது, சட்டவிரோத கட்டுமானங்களை அகற்றுவது என்ற பெயரில் இஸ்லாமிய சொத்துக்களை இடிப்பது, ரயிலில் ஒரு பாதுகாப்பு அதிகாரி முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்துக்காக மூன்று முஸ்லிம்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது, பசு பாதுகாப்பு என்ற பெயரில் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்துவது, சில நேரங்களில் அது கொலையில்...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

Doctor Vikatan: நாள்பட்ட இருமல், கூடவே சிறுநீர்க்கசிவும், காதில் ஒலிக்கும் சத்தமும்... என்ன பிரச்னை?

Doctor Vikatan: என் வயது 50. எனக்கு நாள்பட்ட இருமல் இருக்கிறது. மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து எடுத்துக் கொண்டு இருக்கிறேன். இருமினால் சிறுநீர்க் கசிவு ஏற்படுகிறது. காதில் சில நேரங்களில் அலை அடிப்பது போல் சத்தம் கேட்கிறது. இதற்கெல்லாம் என்ன சிகிச்சை எடுக்க வேண்டும்? - Jayarani, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம். பொது மருத்துவர் அருணாசலம் உங்கள் விஷயத்தில் இருமலைக் கட்டுப்படுத்த முதலில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இரண்டு வாரங்களுக்கு மேல் தொடரும் இருமல், காசநோயின் அறிகுறியாகவும் இருக்கக்கூடும். நிறைய பேர் அது தெரியாமல் இருமல் மருந்தைக் குடித்துக் குடித்து அதைக் கட்டுப்பாட்டில் வைக்க முயல்கிறார்கள். இது தவறு. இருமலுக்கான காரணம் தெரிந்து சிகிச்சை எடுப்பதுதான் சரியானது. இருமலில் வறட்டு இருமல், சளியுடன் கூடிய இருமல், ஆஸ்துமா இருமல் என மூன்று வகை உண்டு. வறட்டு இருமல் என்பது ஒருவித பாக்டீரியாவால் வருவது. ஒவ்வொரு முறை இருமும்போதும் சளியும் சேர்ந்து வருவது, சளி இருமல். மூன்றாவது ஆஸ்துமாவினால், வீஸிங்கால் வருவது. அதாவது காற்றுப்பாதை ச...