Skip to main content

`பசும்பொன்னுக்கு எடப்பாடி பழனிசாமி வராததன் காரணம் என்ன?’ - விளக்கும் ஆர்.பி.உதயகுமார்

மருது பாண்டியரின் 221-வது குருபூஜையை முன்னிட்டு மதுரை மாவட்டம் சிவரக்கோட்டையிலுள்ள சிலைக்கு மாலை அணிவித்து அன்னதானத்தை தொடங்கி வைத்து பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், "மாமன்னர் மருது பாண்டியர்களுக்கு முதன் முதலில் அரசின் சார்பில் விழா நடத்தியவர் புரட்சித்தலைவி. அதனைத் தொடர்ந்து திருப்பத்தூரில் மணி மண்டபம் அமைத்தார். அதுபோல் சிவரக்கோட்டை மக்களின் கோரிக்கையை ஏற்று இங்கே மருதுபாண்டியர் சிலை அமைக்க அரசாணை தந்தவர் எடப்பாடியார்.

ஓ.பி.எஸ்., எடப்பாடி பழனிசாமி

பதின்மூன்றரை கிலோ எடை கொண்ட தங்க கவசத்தை பசும்பொன்னாருக்கு அம்மா வழங்கினார், ஒவ்வொரு குரு பூஜைக்கும் அந்த தங்க கவசத்தை வங்கியிலிருந்து பெற்று அ.தி.மு.க சார்பில் அனுப்பி வைப்பது கடந்த 2014 முதல் நடந்து வருகிறது. 

 ஆனால், இந்த ஆண்டு துரோகத்தின் விளைவாக தங்க கவசத்தை சாத்த தடை ஏற்படுமோ என்று மக்கள் அஞ்சினார்கள். இதற்கு தடை ஏற்படுத்திடவும், அந்தப் பழியை நம்மீது சுமத்தவும் துரோகிகள் சூழ்ச்சி செய்கிறார்கள், வங்கி கணக்கை முடக்க பார்கிறார்கள் என்று தெரிந்த பின்புதான் நீதிமன்றத்துக்கு சென்று, தங்க கவசத்தை பெற்று தெய்வீக திருமகனாருக்கு அணிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்தோம். மாவட்ட வருவாய் அலுவலர் மூலம் தங்க கவசத்தைக் கொண்டு போய் சேர்க்க நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

அதன் மூலம் தேவர் திருமகனாருக்கு தங்க கவசம் சாத்தியிருக்கின்ற காட்சி தென் மாவட்ட மக்களின் மனதை குளிர செய்துள்ளது. இதை தடுக்க நினைத்தவர்கள், குழப்பத்தை விளைவிக்க நினைத்தவர்களுக்கு மரண அடி கொடுக்கும் வகையில் எடப்பாடியார் எடுத்த முயற்சி காரணமாகியுள்ளது.

மருது பாண்டியர் விழாவில் ஆர்.பி.உதயகுமார்

அம்மாவின் சொத்தான தங்க கவசத்தை கழக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசனிடம் வழங்க வங்கி தயாராக இருந்தபோது அங்கே தடை ஏற்படுத்தினார்கள், பிறகு நீதிமன்றத்திலும் தடை ஏற்படுத்தினார்கள், தேவர் நினைவாலய காப்பாளர்களிடம் முறையிட்டபோது, அங்கேயும் வந்து தடை ஏற்படுத்தினார்கள்.

நீங்கள் எத்தனை தடை ஏற்படுத்தினாலும் தேவரின் ஆசி இல்லாத காரணத்தினால் உங்களால் தங்க கவசத்தை எடுக்க முடியவில்லை. எடப்பாடியாருக்கு தேவரின் ஆசி இருப்பதினால் தேவர் திருமேனியிலே இன்று தங்க கவசம் சாத்தப்பட்டுள்ளது.

டி.ஆர்.ஓ மூலம் கொண்டு சொல்லப்பட்ட தங்க கவசம்

அருளாசி இருந்ததால்தான் தமிழக முதலமைச்சராக நான்கரை ஆண்டு காலம் எடப்பாடியார் இருந்தார். உங்களுக்கு பதவி இல்லை என்ற காரணத்தினால் நீங்கள் செய்கின்ற சூதுகளையும், சூழ்ச்சிகளையும் எதிர்கொண்டு போராடி வருகிறோம். அவர்களின் சூழ்ச்சிகளும், சூதுகளும் அப்பாவி மக்களுக்கு தெரியாது... எங்களுக்குத்தான் தெரியும்,

பசும்பொன்னுக்கு எடப்பாடியார் ஏன் வரவில்லை என்று விவாதம் செய்கிறார்கள். நிச்சயமாக எடப்பாடியார் பசும்பொன்னுக்கு வருவார், காளையார்கோயிலுக்கும் உசிலம்பட்டிக்கும் நிச்சயம் வருவார். அந்த நாள் தென் தமிழ்நாட்டில் பொன்னாளாக அமையும். வருகின்ற 30 ஆம் தேதி சென்னை நந்தனத்தில் புரட்சித்தலைவியால் அமைக்கப்பட்ட தெய்வத் திருமகனாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார் எடப்பாடியார்" என்று பேசினார்.


Comments

Popular posts from this blog

``முதலிரவு முடிஞ்சதும் சில ஆண்கள் இப்படி யோசிக்கிறாங்க'' - காமத்துக்கு மரியாதை | சீஸன் 4 -122

நம்ப முடியாத பல பிரச்னைகள் செக்ஸில் இருக்கின்றன. அவற்றில் ஒரு பிரச்னை பற்றிதான் இந்தக் கட்டுரையில் செக்ஸாலஜிஸ்ட் காமராஜ் பேசவிருக்கிறார். ''அந்த இளைஞருக்கு முந்தைய நாள்தான் திருமணம் நடந்திருக்கிறது. மறுநாளே என்னைச் சந்திக்க வந்திருந்தார். ரொம்பவும் பதற்றமாக இருந்தார். ஆசுவாசப்படுத்தி விசாரித்தேன். 'டாக்டர், நேத்து எனக்கு ஃபர்ஸ்ட் நைட் நடந்துச்சு. கம்ப்ளீட் செக்ஸ் வெச்சுக்கிட்டோம். என் மனைவியோட பிறப்புறுப்புல இருந்து ரத்தமே வரலை. இந்தக் காலத்து கேர்ள்ஸ் வண்டி ஓட்டறாங்க... நிறைய விளையாட்டுகள்ல ஈடுபடறாங்க. அதனால கன்னித்திரை கல்யாணத்துக்கு முன்னாடியே கிழிஞ்சிருக்கும்ங்கிறது எனக்கும் தெரியும். ஸோ, ரத்தம் வராதது எனக்கு பிரச்னையே இல்ல. ஆனா, அவளோட பிறப்புறுப்பு ரொம்ப லூசா இருந்துச்சு. அவ ஏற்கெனவே செக்ஸ் பண்ணியிருக்கா டாக்டர். இல்லைன்னா ஒரு கன்னிப்பொண்ணுக்கு எப்படி பிறப்புறுப்பு லூசாகும்.... அவ ஏற்கெனவே செக்ஸ் பண்ணியிருக்கிறதை கண்டுபிடிக்க ஏதாவது டெஸ்ட் இருக்கா டாக்டர்' என்றார். Sexologist Kamaraj அதையெல்லாம் பெட்ரூமுக்கு வெளியே வைங்க! I காமத்துக்கு மரியாதை | சீஸன் 4 - 117 ...

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

மதச் சுதந்திர அறிக்கை: இந்தியா குறித்து அமெரிக்க ஆய்வறிக்கை சொல்வதென்ன?!

இந்தியாவின் பிரதமராக மூன்றாவது முறை தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சியில், சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் இந்தியாவில் அதிகரித்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவின் வெளியுறவுத்துறை நேற்று வெளியிட்ட, 2023-ம் ஆண்டுக்கான சர்வதேச மத சுதந்திரம் குறித்த ஆய்வறிக்கையில், ``சிறுபான்மையினர், குறிப்பாக முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மீதான வன்முறை தாக்குதல்கள், கொலைகள், வழிபாட்டு தளங்களை சேதப்படுத்துதல் உள்ளிட்டவை அதிகரித்திருக்கிறது.அமெரிக்கா முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகள், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தல், அடிப்படையில் பாரபட்சமான சட்டம் என ஐ.நா குறிப்பிட்டிருக்கும் குடியுரிமைச் சட்டம் அமல்படுத்தியது, சட்டவிரோத கட்டுமானங்களை அகற்றுவது என்ற பெயரில் இஸ்லாமிய சொத்துக்களை இடிப்பது, ரயிலில் ஒரு பாதுகாப்பு அதிகாரி முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்துக்காக மூன்று முஸ்லிம்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது, பசு பாதுகாப்பு என்ற பெயரில் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்துவது, சில நேரங்களில் அது கொலையில்...