Skip to main content

`பசும்பொன்னுக்கு எடப்பாடி பழனிசாமி வராததன் காரணம் என்ன?’ - விளக்கும் ஆர்.பி.உதயகுமார்

மருது பாண்டியரின் 221-வது குருபூஜையை முன்னிட்டு மதுரை மாவட்டம் சிவரக்கோட்டையிலுள்ள சிலைக்கு மாலை அணிவித்து அன்னதானத்தை தொடங்கி வைத்து பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், "மாமன்னர் மருது பாண்டியர்களுக்கு முதன் முதலில் அரசின் சார்பில் விழா நடத்தியவர் புரட்சித்தலைவி. அதனைத் தொடர்ந்து திருப்பத்தூரில் மணி மண்டபம் அமைத்தார். அதுபோல் சிவரக்கோட்டை மக்களின் கோரிக்கையை ஏற்று இங்கே மருதுபாண்டியர் சிலை அமைக்க அரசாணை தந்தவர் எடப்பாடியார்.

ஓ.பி.எஸ்., எடப்பாடி பழனிசாமி

பதின்மூன்றரை கிலோ எடை கொண்ட தங்க கவசத்தை பசும்பொன்னாருக்கு அம்மா வழங்கினார், ஒவ்வொரு குரு பூஜைக்கும் அந்த தங்க கவசத்தை வங்கியிலிருந்து பெற்று அ.தி.மு.க சார்பில் அனுப்பி வைப்பது கடந்த 2014 முதல் நடந்து வருகிறது. 

 ஆனால், இந்த ஆண்டு துரோகத்தின் விளைவாக தங்க கவசத்தை சாத்த தடை ஏற்படுமோ என்று மக்கள் அஞ்சினார்கள். இதற்கு தடை ஏற்படுத்திடவும், அந்தப் பழியை நம்மீது சுமத்தவும் துரோகிகள் சூழ்ச்சி செய்கிறார்கள், வங்கி கணக்கை முடக்க பார்கிறார்கள் என்று தெரிந்த பின்புதான் நீதிமன்றத்துக்கு சென்று, தங்க கவசத்தை பெற்று தெய்வீக திருமகனாருக்கு அணிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்தோம். மாவட்ட வருவாய் அலுவலர் மூலம் தங்க கவசத்தைக் கொண்டு போய் சேர்க்க நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

அதன் மூலம் தேவர் திருமகனாருக்கு தங்க கவசம் சாத்தியிருக்கின்ற காட்சி தென் மாவட்ட மக்களின் மனதை குளிர செய்துள்ளது. இதை தடுக்க நினைத்தவர்கள், குழப்பத்தை விளைவிக்க நினைத்தவர்களுக்கு மரண அடி கொடுக்கும் வகையில் எடப்பாடியார் எடுத்த முயற்சி காரணமாகியுள்ளது.

மருது பாண்டியர் விழாவில் ஆர்.பி.உதயகுமார்

அம்மாவின் சொத்தான தங்க கவசத்தை கழக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசனிடம் வழங்க வங்கி தயாராக இருந்தபோது அங்கே தடை ஏற்படுத்தினார்கள், பிறகு நீதிமன்றத்திலும் தடை ஏற்படுத்தினார்கள், தேவர் நினைவாலய காப்பாளர்களிடம் முறையிட்டபோது, அங்கேயும் வந்து தடை ஏற்படுத்தினார்கள்.

நீங்கள் எத்தனை தடை ஏற்படுத்தினாலும் தேவரின் ஆசி இல்லாத காரணத்தினால் உங்களால் தங்க கவசத்தை எடுக்க முடியவில்லை. எடப்பாடியாருக்கு தேவரின் ஆசி இருப்பதினால் தேவர் திருமேனியிலே இன்று தங்க கவசம் சாத்தப்பட்டுள்ளது.

டி.ஆர்.ஓ மூலம் கொண்டு சொல்லப்பட்ட தங்க கவசம்

அருளாசி இருந்ததால்தான் தமிழக முதலமைச்சராக நான்கரை ஆண்டு காலம் எடப்பாடியார் இருந்தார். உங்களுக்கு பதவி இல்லை என்ற காரணத்தினால் நீங்கள் செய்கின்ற சூதுகளையும், சூழ்ச்சிகளையும் எதிர்கொண்டு போராடி வருகிறோம். அவர்களின் சூழ்ச்சிகளும், சூதுகளும் அப்பாவி மக்களுக்கு தெரியாது... எங்களுக்குத்தான் தெரியும்,

பசும்பொன்னுக்கு எடப்பாடியார் ஏன் வரவில்லை என்று விவாதம் செய்கிறார்கள். நிச்சயமாக எடப்பாடியார் பசும்பொன்னுக்கு வருவார், காளையார்கோயிலுக்கும் உசிலம்பட்டிக்கும் நிச்சயம் வருவார். அந்த நாள் தென் தமிழ்நாட்டில் பொன்னாளாக அமையும். வருகின்ற 30 ஆம் தேதி சென்னை நந்தனத்தில் புரட்சித்தலைவியால் அமைக்கப்பட்ட தெய்வத் திருமகனாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார் எடப்பாடியார்" என்று பேசினார்.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...