Skip to main content

ஒன் பை டூ

வி.பி.துரைசாமி, பா.ஜ.க மாநிலத் துணைத் தலைவர்.

“வைகோ சொல்வது ஏற்புடையதல்ல. காரணம், `இந்தியைத் தமிழகத்தில் திணிக்கக் கூடாது’ என்று தலைவர் அண்ணாமலை பல காலகட்டங்களில் சொல்லிவருகிறார். அதுமட்டுமல்லாமல், பிரதமர் நரேந்திர மோடியும் தமிழ் மொழியின் பெருமையை, அதன் மகத்துவத்தைப் பல இடங்களில் பேசிவருகிறார். குறிப்பாக ஐ.நா சபையிலும், தொடர்ச்சியாக வாக்குகள் சேகரிக்கும் வடபுலத்திலும்கூட தைரியமாக சம்ஸ்கிருதத்தைவிட மூத்த மொழி தமிழ் என்றும், திருக்குறளையும், கம்பராமாயணத்தையும், மகாகவி பாரதியார் பாடல்களையும் மேற்கோள் காட்டுகிறார். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டிருப்பதை மறைக்க திடீரென்று சட்டசபையில் இந்த விஷயத்தைப் பெரிதுபடுத்திய இவர்களது மெகா சீரியல் திரைக்கதை ஓடவில்லை. அதேவேளையில் 60 ஆண்டுக்காலம் எதிர்க்கட்சியாக இருந்த பா.ஜ.க-வுக்கு நாடகம் நடத்தித்தான் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்கிற அவசியமும் இல்லை. இது வைகோவுக்கும் நன்றாகவே தெரியும். ஏதோ கூட்டணியில் இருக்கிறோம் என்பதற்காக, வைகோ அவருடைய நிறத்தை மாற்றிக்கொண்டது வருத்தமாக இருக்கிறது.”

வி.பி.துரைசாமி
ஆ.வந்தியத்தேவன்,

ஆ.வந்தியத்தேவன், கொள்கை விளக்க அணிச் செயலாளர், ம.தி.மு.க.

“தலைவர் வைகோ கூறியது சரிதான். பா.ஜ.க அரசு சம்ஸ்கிருத மொழி வளர்ச்சிக்குக் கடந்த மூன்று ஆண்டுகளில் ரூ.643 கோடி செலவிட்டிருக்கிறது. ஆனால், தமிழ் மொழியின் மேம்பாட்டுக்கு வெறும் 23 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கியிருக்கிறது. உயர் நீதிமன்றத்தில் தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும் என்ற நீண்டநாள் கோரிக்கையை எட்டு ஆண்டுகளாக மோடி அரசு நிறைவேற்றவில்லை. அதற்கு ஒரு சின்ன முயற்சியாவது எடுத்திருக்கிறதா... ஒன்றிய அரசின் போட்டித் தேர்வுகளில் தமிழுக்கு இடம் உண்டா... ஒன்றிய அரசின் கேந்திர வித்யாலயா பள்ளிகள், சிபிஎஸ்சி பள்ளிகளில் தமிழ் இருக்கிறதா... டெல்லி ஜே.என்.யு-வில் தமிழ்ப் பேராசிரியர்களுக்கான காலி இடங்கள் எட்டு ஆண்டுகளாக நிரப்பப்படவில்லை. அதற்கு என்ன நடவடிக்கை எடுத்தார்கள்... திருக்குறளை மேற்கோள் காட்டிப் பேசும் பிரதமர், உலகப் பொதுமறையான திருக்குறளை இந்தியாவின் தேசிய நூலாக அறிவிப்பாரா... தங்களின் மதவாத அரசியலை மறைக்க, தமிழ்ப் போர்வையைப் போத்திக்கொண்டு வாக்குவங்கி அரசியல் நடத்த நினைக்கும் பா.ஜ.க-வின் நாடகம், தமிழ்நாட்டில் எடுபடாது!”


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

Doctor Vikatan: நாள்பட்ட இருமல், கூடவே சிறுநீர்க்கசிவும், காதில் ஒலிக்கும் சத்தமும்... என்ன பிரச்னை?

Doctor Vikatan: என் வயது 50. எனக்கு நாள்பட்ட இருமல் இருக்கிறது. மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து எடுத்துக் கொண்டு இருக்கிறேன். இருமினால் சிறுநீர்க் கசிவு ஏற்படுகிறது. காதில் சில நேரங்களில் அலை அடிப்பது போல் சத்தம் கேட்கிறது. இதற்கெல்லாம் என்ன சிகிச்சை எடுக்க வேண்டும்? - Jayarani, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம். பொது மருத்துவர் அருணாசலம் உங்கள் விஷயத்தில் இருமலைக் கட்டுப்படுத்த முதலில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இரண்டு வாரங்களுக்கு மேல் தொடரும் இருமல், காசநோயின் அறிகுறியாகவும் இருக்கக்கூடும். நிறைய பேர் அது தெரியாமல் இருமல் மருந்தைக் குடித்துக் குடித்து அதைக் கட்டுப்பாட்டில் வைக்க முயல்கிறார்கள். இது தவறு. இருமலுக்கான காரணம் தெரிந்து சிகிச்சை எடுப்பதுதான் சரியானது. இருமலில் வறட்டு இருமல், சளியுடன் கூடிய இருமல், ஆஸ்துமா இருமல் என மூன்று வகை உண்டு. வறட்டு இருமல் என்பது ஒருவித பாக்டீரியாவால் வருவது. ஒவ்வொரு முறை இருமும்போதும் சளியும் சேர்ந்து வருவது, சளி இருமல். மூன்றாவது ஆஸ்துமாவினால், வீஸிங்கால் வருவது. அதாவது காற்றுப்பாதை ச...

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...