Skip to main content

ஒன் பை டூ

வி.பி.துரைசாமி, பா.ஜ.க மாநிலத் துணைத் தலைவர்.

“வைகோ சொல்வது ஏற்புடையதல்ல. காரணம், `இந்தியைத் தமிழகத்தில் திணிக்கக் கூடாது’ என்று தலைவர் அண்ணாமலை பல காலகட்டங்களில் சொல்லிவருகிறார். அதுமட்டுமல்லாமல், பிரதமர் நரேந்திர மோடியும் தமிழ் மொழியின் பெருமையை, அதன் மகத்துவத்தைப் பல இடங்களில் பேசிவருகிறார். குறிப்பாக ஐ.நா சபையிலும், தொடர்ச்சியாக வாக்குகள் சேகரிக்கும் வடபுலத்திலும்கூட தைரியமாக சம்ஸ்கிருதத்தைவிட மூத்த மொழி தமிழ் என்றும், திருக்குறளையும், கம்பராமாயணத்தையும், மகாகவி பாரதியார் பாடல்களையும் மேற்கோள் காட்டுகிறார். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டிருப்பதை மறைக்க திடீரென்று சட்டசபையில் இந்த விஷயத்தைப் பெரிதுபடுத்திய இவர்களது மெகா சீரியல் திரைக்கதை ஓடவில்லை. அதேவேளையில் 60 ஆண்டுக்காலம் எதிர்க்கட்சியாக இருந்த பா.ஜ.க-வுக்கு நாடகம் நடத்தித்தான் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்கிற அவசியமும் இல்லை. இது வைகோவுக்கும் நன்றாகவே தெரியும். ஏதோ கூட்டணியில் இருக்கிறோம் என்பதற்காக, வைகோ அவருடைய நிறத்தை மாற்றிக்கொண்டது வருத்தமாக இருக்கிறது.”

வி.பி.துரைசாமி
ஆ.வந்தியத்தேவன்,

ஆ.வந்தியத்தேவன், கொள்கை விளக்க அணிச் செயலாளர், ம.தி.மு.க.

“தலைவர் வைகோ கூறியது சரிதான். பா.ஜ.க அரசு சம்ஸ்கிருத மொழி வளர்ச்சிக்குக் கடந்த மூன்று ஆண்டுகளில் ரூ.643 கோடி செலவிட்டிருக்கிறது. ஆனால், தமிழ் மொழியின் மேம்பாட்டுக்கு வெறும் 23 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கியிருக்கிறது. உயர் நீதிமன்றத்தில் தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும் என்ற நீண்டநாள் கோரிக்கையை எட்டு ஆண்டுகளாக மோடி அரசு நிறைவேற்றவில்லை. அதற்கு ஒரு சின்ன முயற்சியாவது எடுத்திருக்கிறதா... ஒன்றிய அரசின் போட்டித் தேர்வுகளில் தமிழுக்கு இடம் உண்டா... ஒன்றிய அரசின் கேந்திர வித்யாலயா பள்ளிகள், சிபிஎஸ்சி பள்ளிகளில் தமிழ் இருக்கிறதா... டெல்லி ஜே.என்.யு-வில் தமிழ்ப் பேராசிரியர்களுக்கான காலி இடங்கள் எட்டு ஆண்டுகளாக நிரப்பப்படவில்லை. அதற்கு என்ன நடவடிக்கை எடுத்தார்கள்... திருக்குறளை மேற்கோள் காட்டிப் பேசும் பிரதமர், உலகப் பொதுமறையான திருக்குறளை இந்தியாவின் தேசிய நூலாக அறிவிப்பாரா... தங்களின் மதவாத அரசியலை மறைக்க, தமிழ்ப் போர்வையைப் போத்திக்கொண்டு வாக்குவங்கி அரசியல் நடத்த நினைக்கும் பா.ஜ.க-வின் நாடகம், தமிழ்நாட்டில் எடுபடாது!”


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...