Skip to main content

ஒன் பை டூ

வி.பி.துரைசாமி, பா.ஜ.க மாநிலத் துணைத் தலைவர்.

“வைகோ சொல்வது ஏற்புடையதல்ல. காரணம், `இந்தியைத் தமிழகத்தில் திணிக்கக் கூடாது’ என்று தலைவர் அண்ணாமலை பல காலகட்டங்களில் சொல்லிவருகிறார். அதுமட்டுமல்லாமல், பிரதமர் நரேந்திர மோடியும் தமிழ் மொழியின் பெருமையை, அதன் மகத்துவத்தைப் பல இடங்களில் பேசிவருகிறார். குறிப்பாக ஐ.நா சபையிலும், தொடர்ச்சியாக வாக்குகள் சேகரிக்கும் வடபுலத்திலும்கூட தைரியமாக சம்ஸ்கிருதத்தைவிட மூத்த மொழி தமிழ் என்றும், திருக்குறளையும், கம்பராமாயணத்தையும், மகாகவி பாரதியார் பாடல்களையும் மேற்கோள் காட்டுகிறார். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டிருப்பதை மறைக்க திடீரென்று சட்டசபையில் இந்த விஷயத்தைப் பெரிதுபடுத்திய இவர்களது மெகா சீரியல் திரைக்கதை ஓடவில்லை. அதேவேளையில் 60 ஆண்டுக்காலம் எதிர்க்கட்சியாக இருந்த பா.ஜ.க-வுக்கு நாடகம் நடத்தித்தான் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்கிற அவசியமும் இல்லை. இது வைகோவுக்கும் நன்றாகவே தெரியும். ஏதோ கூட்டணியில் இருக்கிறோம் என்பதற்காக, வைகோ அவருடைய நிறத்தை மாற்றிக்கொண்டது வருத்தமாக இருக்கிறது.”

வி.பி.துரைசாமி
ஆ.வந்தியத்தேவன்,

ஆ.வந்தியத்தேவன், கொள்கை விளக்க அணிச் செயலாளர், ம.தி.மு.க.

“தலைவர் வைகோ கூறியது சரிதான். பா.ஜ.க அரசு சம்ஸ்கிருத மொழி வளர்ச்சிக்குக் கடந்த மூன்று ஆண்டுகளில் ரூ.643 கோடி செலவிட்டிருக்கிறது. ஆனால், தமிழ் மொழியின் மேம்பாட்டுக்கு வெறும் 23 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கியிருக்கிறது. உயர் நீதிமன்றத்தில் தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும் என்ற நீண்டநாள் கோரிக்கையை எட்டு ஆண்டுகளாக மோடி அரசு நிறைவேற்றவில்லை. அதற்கு ஒரு சின்ன முயற்சியாவது எடுத்திருக்கிறதா... ஒன்றிய அரசின் போட்டித் தேர்வுகளில் தமிழுக்கு இடம் உண்டா... ஒன்றிய அரசின் கேந்திர வித்யாலயா பள்ளிகள், சிபிஎஸ்சி பள்ளிகளில் தமிழ் இருக்கிறதா... டெல்லி ஜே.என்.யு-வில் தமிழ்ப் பேராசிரியர்களுக்கான காலி இடங்கள் எட்டு ஆண்டுகளாக நிரப்பப்படவில்லை. அதற்கு என்ன நடவடிக்கை எடுத்தார்கள்... திருக்குறளை மேற்கோள் காட்டிப் பேசும் பிரதமர், உலகப் பொதுமறையான திருக்குறளை இந்தியாவின் தேசிய நூலாக அறிவிப்பாரா... தங்களின் மதவாத அரசியலை மறைக்க, தமிழ்ப் போர்வையைப் போத்திக்கொண்டு வாக்குவங்கி அரசியல் நடத்த நினைக்கும் பா.ஜ.க-வின் நாடகம், தமிழ்நாட்டில் எடுபடாது!”


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...