Skip to main content

``மருந்துகளும் இல்லை... மருத்துவர்களும் இல்லை..!” - அரசு மருத்துவமனையை சாடும் புதுச்சேரி திமுக

புதுச்சேரியின் எதிர்க்கட்சித் தலைவரும், தி.மு.க மாநில அமைப்பாளருமான எம்.எல்.ஏ சிவா, ``புதுச்சேரியில் உள்ள அரசு பொது மருத்துவமனைக்கு நகரம் மற்றும் கிராமங்களிலிருந்து தினந்தோறும் 4,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெற வந்து செல்கின்றனர். 350-க்கும் மேற்பட்டவர்கள் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால் மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தாளுநர்கள் மற்றும் பணியாளர்கள் பற்றாக்குறையாலும், போதுமான மருந்து, மாத்திரைகள் மற்றும் படுக்கை வசதி இல்லாமல் நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.  குறிப்பாக புதுச்சேரி சுகாதாரத்துறையில் 70 சிறப்பு மருத்துவ வல்லுநர்கள், 105 மருத்துவர்கள், 42 மருந்தாளுநர்கள், 300 துணை மருத்துவ பணியாளர் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் பற்றாக்குறை மிகப்பெரிய அளவில் இருந்தால் நோயாளிகளுக்கு எப்படி உரிய நேரத்தில் தரமான சிகிச்சை அளிக்க முடியும் ?

மருந்துகள் தட்டுப்பாடு

அவசர சிகிச்சைகளுக்காக மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து சிகிச்சை பெற நேரிடுகிறது. அவசர சிகிச்சைக்காக வரும் நோயாளிகளுக்கு, சிகிச்சை அளிக்க தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் அவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பது அரசுக்கு தெரியாதா?

அதேசமயத்தில் அரசு பொதுமருத்துவமனையில் எம்.ஆர்.ஐ ஸ்கேன் இயந்திரம் பழுதாகியுள்ளதால், ஏழை எளிய நோயாளிகள் ரூ.7,000/- வரை கொடுத்து வெளியே ஸ்கேன் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். சி.டி ஸ்கேன் இயந்திரமும் ஒன்று மட்டுமே இருக்கிறது. அதுவும் ஒரு நாளைக்கு 30-க்கும் மேற்பட்டவர்களுக்கு தொடர்ச்சியாக ஸ்கேன் செய்யும்போது பழுதாகி நோயாளிகள் பாதிக்கப்படுகின்றனர். அதேபோல ஆஞ்சியோ செய்யும் வசதியும் நீண்ட நாட்களாக இல்லை. மேலும் அரசு மருத்துவமனைகளில் மருந்து, மாத்திரைகளை கொள்முதல்  செய்வதற்கான, மத்திய கொள்முதல் கமிட்டி (சி.பி.சி)  ஆண்டுதோறும் மார்ச் மாதத்திற்குள் மருந்துகளை கொள்முதல் செய்வதற்கான விதிமுறைகளை முடித்து, மருந்துகளை கொள்முதல் செய்யும்.

ஆனால் நடப்பாண்டிற்கான மருந்துகளை கொள்முதல் செய்வதற்கான பணிகளை மத்திய கொள்முதல் கமிட்டி 7 மாதங்கள் ஆகியும் இறுதி செய்யாததால், பல்வேறு நிறுவனங்கள் மருந்துகள் விநியோகத்தை நிறுத்தியுள்ளதாக தெரிகிறது. இதனால் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் அத்தியாவசிய மருந்து, மாத்திரைகளை வெளி மருந்தகங்களில் வாங்கும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். அரசு மருத்துவமனைகளில் உள்ள பல 108 ஆம்புலன்ஸ்கள் பழுதடைந்த நிலையில் உள்ளன. குறிப்பாக காலாப்பட்டு, தவளக்குப்பம், காட்டேரிக்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள ஆம்புலன்ஸ் வாகனங்கள் எப்ஃ.சி எடுக்காமல் நீண்ட நாட்களாக பயனற்று நிற்க வைக்கப்பட்டுள்ளன. இதனால் கிராமப்புற நோயாளிகள் மிகுந்த பாதிப்படைந்துள்ளனர். அதேபோன்று பயன்பாட்டில் உள்ள  பெரும்பாலான ஆம்புலன்ஸ்களிலும் உதவியாளர்கள் இல்லாத நிலை உள்ளது. இதேபோன்று புதுச்சேரி கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மிக மோசமான நிலையில் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் அதிகாரிகள் குழுவின் தர ஆய்வின்படி  கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மூன்றாம் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

குறிப்பாக அங்கு அவசர சிகிச்சை பிரிவு சரிவர செயல்படவில்லை, அறுவை சிகிச்சை செய்யக்கூடிய மருத்துவர்களுக்கு மூன்று மாதம் சம்பளம் தராததால், அவர்கள் பணி செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் அவசர சிகிச்சை பிரிவுக்கு அரை நாள் விடுமுறை அளிக்கப்படுகிறது. இது எந்த மருத்துவமனையிலும் நடைபெறாத ஒன்று. இந்த அளவுக்கு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் தரம் மோசமாகியுள்ளது. இதுபோன்ற நிலையில் உள்ள மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயிலும் மாணவர்களின் நிலை என்னவாக இருக்கும்?  அங்கும் போதிய மருந்து, மாத்திரைகள் இல்லை. பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளது. முக்கியமான துறைக்கு பேராசிரியர்கள் இல்லை. எனவே இனியும் பொதுமக்களின் உயிர் விஷயத்தில் விளையாடாமல், புதுச்சேரி அரசும், துறை அமைச்சரான முதல்வர் ரங்கசாமியும் அலட்சியம் காட்டாமல் போர்க்கால அடிப்படையில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

``முதலிரவு முடிஞ்சதும் சில ஆண்கள் இப்படி யோசிக்கிறாங்க'' - காமத்துக்கு மரியாதை | சீஸன் 4 -122

நம்ப முடியாத பல பிரச்னைகள் செக்ஸில் இருக்கின்றன. அவற்றில் ஒரு பிரச்னை பற்றிதான் இந்தக் கட்டுரையில் செக்ஸாலஜிஸ்ட் காமராஜ் பேசவிருக்கிறார். ''அந்த இளைஞருக்கு முந்தைய நாள்தான் திருமணம் நடந்திருக்கிறது. மறுநாளே என்னைச் சந்திக்க வந்திருந்தார். ரொம்பவும் பதற்றமாக இருந்தார். ஆசுவாசப்படுத்தி விசாரித்தேன். 'டாக்டர், நேத்து எனக்கு ஃபர்ஸ்ட் நைட் நடந்துச்சு. கம்ப்ளீட் செக்ஸ் வெச்சுக்கிட்டோம். என் மனைவியோட பிறப்புறுப்புல இருந்து ரத்தமே வரலை. இந்தக் காலத்து கேர்ள்ஸ் வண்டி ஓட்டறாங்க... நிறைய விளையாட்டுகள்ல ஈடுபடறாங்க. அதனால கன்னித்திரை கல்யாணத்துக்கு முன்னாடியே கிழிஞ்சிருக்கும்ங்கிறது எனக்கும் தெரியும். ஸோ, ரத்தம் வராதது எனக்கு பிரச்னையே இல்ல. ஆனா, அவளோட பிறப்புறுப்பு ரொம்ப லூசா இருந்துச்சு. அவ ஏற்கெனவே செக்ஸ் பண்ணியிருக்கா டாக்டர். இல்லைன்னா ஒரு கன்னிப்பொண்ணுக்கு எப்படி பிறப்புறுப்பு லூசாகும்.... அவ ஏற்கெனவே செக்ஸ் பண்ணியிருக்கிறதை கண்டுபிடிக்க ஏதாவது டெஸ்ட் இருக்கா டாக்டர்' என்றார். Sexologist Kamaraj அதையெல்லாம் பெட்ரூமுக்கு வெளியே வைங்க! I காமத்துக்கு மரியாதை | சீஸன் 4 - 117 ...

மதச் சுதந்திர அறிக்கை: இந்தியா குறித்து அமெரிக்க ஆய்வறிக்கை சொல்வதென்ன?!

இந்தியாவின் பிரதமராக மூன்றாவது முறை தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சியில், சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் இந்தியாவில் அதிகரித்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவின் வெளியுறவுத்துறை நேற்று வெளியிட்ட, 2023-ம் ஆண்டுக்கான சர்வதேச மத சுதந்திரம் குறித்த ஆய்வறிக்கையில், ``சிறுபான்மையினர், குறிப்பாக முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மீதான வன்முறை தாக்குதல்கள், கொலைகள், வழிபாட்டு தளங்களை சேதப்படுத்துதல் உள்ளிட்டவை அதிகரித்திருக்கிறது.அமெரிக்கா முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகள், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தல், அடிப்படையில் பாரபட்சமான சட்டம் என ஐ.நா குறிப்பிட்டிருக்கும் குடியுரிமைச் சட்டம் அமல்படுத்தியது, சட்டவிரோத கட்டுமானங்களை அகற்றுவது என்ற பெயரில் இஸ்லாமிய சொத்துக்களை இடிப்பது, ரயிலில் ஒரு பாதுகாப்பு அதிகாரி முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்துக்காக மூன்று முஸ்லிம்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது, பசு பாதுகாப்பு என்ற பெயரில் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்துவது, சில நேரங்களில் அது கொலையில்...