Skip to main content

`பேருந்து வசதி இல்ல; தினமும் 12 கி.மீ நடக்குறோம்!' - போராட்டம் நடத்தி சாதித்த மாணவர்கள்

கரூர் மாவட்டம், வெள்ளியணை அருகே இருக்கிறது, வடக்கு மேட்டுப்பட்டி கிராமம். மிகவும் பின்தங்கிய கிராமமான இங்கே, தொடக்கப்பள்ளி மட்டுமே உள்ளது. இங்குள்ள மாணவர்கள் 6 - 12 - ம் வகுப்பு வரை படிக்க வெளியணையில் உள்ள வரும் அரசு ஆண்கள்/ பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளுக்கு போய்வர வேண்டிய சூழல் உள்ளது. ஆனால், இங்குள்ள பல மாணவர்களின் குடும்பச் சூழல், பேருந்துப் பயண கட்டணத்துக்கு செலவழிக்கும் அளவுக்கு பொருளாதார வசதிகொண்டதாக இல்லை. அதனால், அந்த மாணவர்கள் தினமும் காலையும், மாலையும் நடந்தே வெள்ளியணைக்கு சென்று வருவதாக கூறுகின்றனர். வெள்ளியணை`இப்படித்தான் குண்டுகளைக் கண்டுபிடிக்கும்!'- காவல்துறை மோப்பநாயோடு அளவளாவிய அரசுப் பள்ளி மாணவர்கள் 60-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இப்படி வெள்ளியணை பள்ளிகளுக்கு சென்று வந்து கொண்டுள்ளனர். இந்த கிராமத்தில் இருந்து வெள்ளியணை அரசு பள்ளிகள் 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளன. தினமும் மாணவர்கள் காலையில் 6 கி.மீ, மதியம் 6 கி.மீ என 12 கி.மீ தூரம் நடக்கவேண்டியுள்ளது. இந்த கிராமத்துக்கு ஒரேயொரு தனியார் பேருந்துதான் வருகிறது. வெள்ளியணையில் இருந்து வீரணம்பட்டி வரை செல்லக்கூடிய அந்த தனியார் பேருந்தும், கூட்டம் குறைவாக உள்ள காரணத்தினால் சமீபத்தில் இரண்டு நாள்களாக வடக்கு மேட்டுப்பட்டி கிராமத்திற்கு வரவில்லை என்று சொல்லப்படுகிறது. அதனால், சமீபத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்திலும் இந்த கிராம மாணவர்கள் பயன்பெறும் வகையில் இங்கே பேருந்து வசதி வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினர். ஆனால், பேருந்து வசதி செய்துதரப்படவில்லை. இந்த நிலையில்தான், பள்ளி செல்ல பேருந்து வசதி இல்லாத காரணத்தினால், பள்ளிகளுக்குச் செல்லாமல் சீருடை அணிந்து ஊர் முன்பு மாணவர்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக அதே கிராமத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் பள்ளிக்குச் செல்லாமல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். எங்களுக்கு அரசு பேருந்து வசதி செய்துதர வேண்டும் என்று முழக்கங்களை எழுப்பினர். மாணவர்கள் இப்படி போராட்டத்தில் குதித்த தகவல் அறிந்து அப்பகுதிக்கு வந்த பள்ளிக்கல்வித்துறை மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள், பேருந்து வசதி ஏற்படுத்தி தருவதாகவும், இன்று விடுமுறை எடுக்காமல் பள்ளிக்கு செல்ல வேண்டும் என்று மாணவர்களிடம் வலியுறுத்தினர். மாணவர்கள் போராட்டம் ஆனால், அதை ஏற்க மறுத்த மாணவ, மாணவிகள், ’எங்களுக்கு தற்காலிக பேருந்து வசதி வேண்டாம், நிரந்தரமாக பேருந்து வசதி ஏற்படுத்தி கொடுத்தால் மட்டுமே பள்ளிக்கு செல்வோம்’ என்று தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள், அரசு பேருந்து ஒன்றை இந்த வழித்தடமாக நிரந்தரமாக வருவதற்கு ஏற்பாடு செய்து தருவதாக உத்தரவாதம் கொடுத்த பிறகே, மாணவ, மாணவிகள் பள்ளிக்கு புறப்பட்டு சென்றனர். மாணவர்கள், அரசின் கவனத்தை தங்களது போராட்டத்தின் வாயிலாக தட்டி, தங்களது கோரிக்கையை செவிசாய்க்க வைத்துள்ளது, பாராட்டை பெற்றிருக்கிறது.
http://dlvr.it/SbxCVP

Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...