Skip to main content

`பேருந்து வசதி இல்ல; தினமும் 12 கி.மீ நடக்குறோம்!' - போராட்டம் நடத்தி சாதித்த மாணவர்கள்

கரூர் மாவட்டம், வெள்ளியணை அருகே இருக்கிறது, வடக்கு மேட்டுப்பட்டி கிராமம். மிகவும் பின்தங்கிய கிராமமான இங்கே, தொடக்கப்பள்ளி மட்டுமே உள்ளது. இங்குள்ள மாணவர்கள் 6 - 12 - ம் வகுப்பு வரை படிக்க வெளியணையில் உள்ள வரும் அரசு ஆண்கள்/ பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளுக்கு போய்வர வேண்டிய சூழல் உள்ளது. ஆனால், இங்குள்ள பல மாணவர்களின் குடும்பச் சூழல், பேருந்துப் பயண கட்டணத்துக்கு செலவழிக்கும் அளவுக்கு பொருளாதார வசதிகொண்டதாக இல்லை. அதனால், அந்த மாணவர்கள் தினமும் காலையும், மாலையும் நடந்தே வெள்ளியணைக்கு சென்று வருவதாக கூறுகின்றனர். வெள்ளியணை`இப்படித்தான் குண்டுகளைக் கண்டுபிடிக்கும்!'- காவல்துறை மோப்பநாயோடு அளவளாவிய அரசுப் பள்ளி மாணவர்கள் 60-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இப்படி வெள்ளியணை பள்ளிகளுக்கு சென்று வந்து கொண்டுள்ளனர். இந்த கிராமத்தில் இருந்து வெள்ளியணை அரசு பள்ளிகள் 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளன. தினமும் மாணவர்கள் காலையில் 6 கி.மீ, மதியம் 6 கி.மீ என 12 கி.மீ தூரம் நடக்கவேண்டியுள்ளது. இந்த கிராமத்துக்கு ஒரேயொரு தனியார் பேருந்துதான் வருகிறது. வெள்ளியணையில் இருந்து வீரணம்பட்டி வரை செல்லக்கூடிய அந்த தனியார் பேருந்தும், கூட்டம் குறைவாக உள்ள காரணத்தினால் சமீபத்தில் இரண்டு நாள்களாக வடக்கு மேட்டுப்பட்டி கிராமத்திற்கு வரவில்லை என்று சொல்லப்படுகிறது. அதனால், சமீபத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்திலும் இந்த கிராம மாணவர்கள் பயன்பெறும் வகையில் இங்கே பேருந்து வசதி வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினர். ஆனால், பேருந்து வசதி செய்துதரப்படவில்லை. இந்த நிலையில்தான், பள்ளி செல்ல பேருந்து வசதி இல்லாத காரணத்தினால், பள்ளிகளுக்குச் செல்லாமல் சீருடை அணிந்து ஊர் முன்பு மாணவர்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக அதே கிராமத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் பள்ளிக்குச் செல்லாமல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். எங்களுக்கு அரசு பேருந்து வசதி செய்துதர வேண்டும் என்று முழக்கங்களை எழுப்பினர். மாணவர்கள் இப்படி போராட்டத்தில் குதித்த தகவல் அறிந்து அப்பகுதிக்கு வந்த பள்ளிக்கல்வித்துறை மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள், பேருந்து வசதி ஏற்படுத்தி தருவதாகவும், இன்று விடுமுறை எடுக்காமல் பள்ளிக்கு செல்ல வேண்டும் என்று மாணவர்களிடம் வலியுறுத்தினர். மாணவர்கள் போராட்டம் ஆனால், அதை ஏற்க மறுத்த மாணவ, மாணவிகள், ’எங்களுக்கு தற்காலிக பேருந்து வசதி வேண்டாம், நிரந்தரமாக பேருந்து வசதி ஏற்படுத்தி கொடுத்தால் மட்டுமே பள்ளிக்கு செல்வோம்’ என்று தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள், அரசு பேருந்து ஒன்றை இந்த வழித்தடமாக நிரந்தரமாக வருவதற்கு ஏற்பாடு செய்து தருவதாக உத்தரவாதம் கொடுத்த பிறகே, மாணவ, மாணவிகள் பள்ளிக்கு புறப்பட்டு சென்றனர். மாணவர்கள், அரசின் கவனத்தை தங்களது போராட்டத்தின் வாயிலாக தட்டி, தங்களது கோரிக்கையை செவிசாய்க்க வைத்துள்ளது, பாராட்டை பெற்றிருக்கிறது.
http://dlvr.it/SbxCVP

Comments

Popular posts from this blog

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

Doctor Vikatan: நாள்பட்ட இருமல், கூடவே சிறுநீர்க்கசிவும், காதில் ஒலிக்கும் சத்தமும்... என்ன பிரச்னை?

Doctor Vikatan: என் வயது 50. எனக்கு நாள்பட்ட இருமல் இருக்கிறது. மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து எடுத்துக் கொண்டு இருக்கிறேன். இருமினால் சிறுநீர்க் கசிவு ஏற்படுகிறது. காதில் சில நேரங்களில் அலை அடிப்பது போல் சத்தம் கேட்கிறது. இதற்கெல்லாம் என்ன சிகிச்சை எடுக்க வேண்டும்? - Jayarani, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம். பொது மருத்துவர் அருணாசலம் உங்கள் விஷயத்தில் இருமலைக் கட்டுப்படுத்த முதலில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இரண்டு வாரங்களுக்கு மேல் தொடரும் இருமல், காசநோயின் அறிகுறியாகவும் இருக்கக்கூடும். நிறைய பேர் அது தெரியாமல் இருமல் மருந்தைக் குடித்துக் குடித்து அதைக் கட்டுப்பாட்டில் வைக்க முயல்கிறார்கள். இது தவறு. இருமலுக்கான காரணம் தெரிந்து சிகிச்சை எடுப்பதுதான் சரியானது. இருமலில் வறட்டு இருமல், சளியுடன் கூடிய இருமல், ஆஸ்துமா இருமல் என மூன்று வகை உண்டு. வறட்டு இருமல் என்பது ஒருவித பாக்டீரியாவால் வருவது. ஒவ்வொரு முறை இருமும்போதும் சளியும் சேர்ந்து வருவது, சளி இருமல். மூன்றாவது ஆஸ்துமாவினால், வீஸிங்கால் வருவது. அதாவது காற்றுப்பாதை ச...

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...