Skip to main content

INDvSA: அற்புதம் நிகழ்த்திய அர்ஷ்தீப்; திணறிப்போன தென்னாப்பிரிக்கா; முதல் போட்டியை வென்றது இந்தியா!

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கிடையேயான டி20 தொடரின் முதல் போட்டி நடந்து முடிந்திருக்கிறது. இந்திய அணி இந்தப் போட்டியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. சிறப்பாக பந்துவீசி ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய அர்ஷ்தீப் சிங் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

திருவனந்தபுரத்தின் க்ரீன்ஃபீல்ட் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றிருந்தது. பெயருக்கேற்றவாறே பிட்ச்சிலும் வழக்கத்தைவிட அதிக புற்கள் நிரம்பியே காணப்பட்டது. பிட்ச் ரிப்போர்ட்டைக் கொடுத்த அஜித் அகர்கரும் எம்பாங்வாவும் நியூ பாலில் பௌலர்களுக்கு உதவக்கூடிய பிட்ச்சாக இருக்கும் என உத்தரவாதம் கொடுத்தனர். அதேபோன்றுதான் நடக்கவும் செய்தது.

டாஸை வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பந்துவீச்சைத் தேர்வு செய்தார். டாஸின் போது ரவிசாஸ்திரி ரோஹித் சர்மாவிடம்

Rohit |INDvSA
'ரசிகர்களின் ஆராவாரத்தை பார்த்தீர்களா? இந்த சத்தத்தில் அவுட் ஃபீல்டில் நிற்கும் வீரர்களிடம் எப்படி தகவல்களை பரிமாறிக்கொள்ளப் போகிறீர்கள்?' ரவிசாஸ்திரி நகைச்சுவையாகத்தான் இந்த கேள்வியை கேட்டார். ஆனால், ரோஹித் & கோ இதை படு சீரியசாக எடுத்துக் கொண்டார்கள் போல!

அவுட் ஃபீல்டர்கள் நிற்கிற வரையெல்லாம் காத்திருக்க வேண்டும். பவர்ப்ளேக்குள்ளேயே மொத்தமாக முடித்துவிடலாம் என்ற மனநிலையில் தென்னாப்பிரிக்காவை பந்தாடி விட்டார்கள். முதல் மூன்று ஓவர்களுக்காகவே தென்னாப்பிரிக்க அணியின் டாப் 5 விக்கெட்டுகளை தீபக் சஹாரும் அர்ஷ்தீப் சிங்கும் வீழ்த்திவிட்டனர்.

புற்கள் நிரம்பிய அந்த பிட்சில் பந்து நன்றாகவே ஸ்விங் ஆனது. அதற்கேற்றவாறு ரோஹித்தும் தொடக்கத்திலிருந்து இரண்டு ஸ்லிப்களை வைத்து அட்டாக் செய்தார். தீபக் சஹார் வீசிய முதல் ஓவரிலேயே தென்னாப்பிரிக்க கேப்டனான பவுமா வீழ்ந்தார். இரண்டு அவுட் ஸ்விங்கர்களுக்குப் பிறகு தீபக் சஹார் வீசிய ஒரு இன்ஸ்விங்கரில் பவுமா ஸ்டம்புகளைப் பறிகொடுத்து வெளியேறினார்.

Arshdeep
அர்ஷ்தீப் சிங் வீசிய அடுத்த ஓவர் இன்னும் பயங்கரமாக இருந்தது. இந்த ஓவரில் மட்டும் 3 விக்கெட்டுகளை அர்ஷ்தீப் வீழ்த்தியிருந்தார். ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வீசிய ஒரு பந்துக்கு பேட்டை விட்டு இன்சைட் எட்ஜ் ஆகி டீகாக் ஸ்டம்புகளைப் பறிகொடுத்தார். அடுத்ததாக ஒரு அவுட் ஸ்விங்கில் ரோசோவ் எட்ஜ் ஆகி பண்ட்டிடம் கேட்ச் ஆக, அதற்கடுத்த பந்தே ஒரு இன்ஸ்விங்கில் மில்லர் போல்டானார்.

சர்வதேச டி20 போட்டிகளில் மில்லரின் முதல் டக் அவுட் இதுதானாம்!

அற்புதமான ஓவரை வீசி விட்டு அர்ஷ்தீப் செல்ல, அடுத்த ஓவரில் சஹார் ஸ்டப்ஸின் விக்கெட்டை வீழ்த்தினார். இப்படி தொடர்ச்சியாக விக்கெட் விழுந்து கொண்டிருந்த சமயத்தில் கமென்ட்ரி பாக்ஸில்

என கவாஸ்கர் பேசியிருந்தார். கவாஸ்கரைப் போலவே நமக்கும் கொஞ்ச நேரத்திலேயே இது டி20 போட்டிதான் என்பது மறந்தேவிட்டது. பேட்டர் லீவ் செய்தால் 'Well Left' என கைத்தட்டாதது ஒன்றுதான் குறை. தென்னாப்பிரிக்க அணி பவர்ப்ளேயில் 30 ரன்களை எடுத்து 5 விக்கெட்டுகளை இழந்திருந்தது. டி20 போட்டிகளில் பவர்ப்ளேயில் அந்த அணியின் குறைந்தபட்ச ஸ்கோர் இதுதான். சீக்கிரமே ஆல் அவுட் ஆகிவிடுவார்கள் என நினைக்கையில் தென்னாப்பிரிக்க அணி கொஞ்சம் தாக்குப்பிடித்தது. மார்க்ரம், பர்னல், மகாராஜா ஆகியோர் ஓரளவுக்கு சிறப்பாக ஆடி அணியின் ஸ்கோரை 100 க்கு மேல் கொண்டு வந்துவிட்டனர். பவர்ப்ளேயில் சிறப்பாக வீசிய அர்ஷ்தீப் சிங் 19 வது ஓவரில் 17 ரன்களை கொடுத்திருந்தார். 19 வது ஓவர் என்றாலே இந்தியாவிற்கு அலர்ஜிதான்!

Rahul & SKY

107 ரன்கள் டார்கெட்டை எட்டிப்பிடிக்க இந்திய அணி களமிறங்கியது. ரபாடா வீசிய முதல் ஓவரை முழுமையாக டாட் ஆடி மெய்டனாக்கிவிட்டார் ராகுல். பந்து மூவ் ஆவதால் தென்னாப்பிரிக்கவைப் போன்ற ஒரு அதிர்ச்சிமிக்க தொடக்கத்தை சந்தித்து விடக்கூடாது என்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே இது தெரிந்தது. இருந்தும் ரோஹித்தும் கோலியும் சீக்கிரமே விக்கெட்டை விட்டு ஏமாற்றம் அளித்தனர்.

பவர்ப்ளேயில் இந்திய அணி 17 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. டி20 போட்டிகளில் இந்திய அணியின் குறைந்தபட்ச பவர்ப்ளே ஸ்கோர் இதுதான்.

பவர்ப்ளே முடிந்த சமயத்தில் சூர்யகுமார் யாதவ் வந்தார். வந்த வேகத்திலேயே நோர்கியாவின் பந்தில் 2 சிக்சர்களை பறக்கவிட்டார். இதன்பிறகுதான் இந்திய அணியின் ஸ்கோர் வேகம்பிடித்தது. ராகுல் ஒரு முனையில் தஞ்சமடைந்து விக்கெட்டை காக்க அதன்பிறகு இந்திய அணிக்கு விக்கெட் சேதாரம் இல்லை. 17 வது ஓவரில் இந்திய அணி இலக்கை எட்டிப்பிடித்தது. ராகுல், சூர்யகுமார் இருவருமே அரைசதத்தை கடந்திருந்தனர். 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது.

சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்திரேலிய தொடரில் இந்திய அணியின் பந்துவீச்சு ரொம்பவே சுமாராக இருந்தது. பவர்ப்ளே, டெத் ஓவர் என எங்கேயும் சொதப்பல்தான்.

TEAM INDIA
தென்னாப்பிரிக்கவிற்கு எதிரான இந்த முதல் போட்டியில் வென்றதோடு மட்டுமல்லாமல் சிறப்பாக பந்தும் வீசியிருக்கின்றனர். ஒரு பௌலர் ஆட்டநாயகன் விருதை வென்றிருக்கிறார். இதுவே ஒரு சிறப்பான முன்னேற்றம்தான். இது தொடர வேண்டும்!

Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...