Skip to main content

INDvSA: அற்புதம் நிகழ்த்திய அர்ஷ்தீப்; திணறிப்போன தென்னாப்பிரிக்கா; முதல் போட்டியை வென்றது இந்தியா!

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கிடையேயான டி20 தொடரின் முதல் போட்டி நடந்து முடிந்திருக்கிறது. இந்திய அணி இந்தப் போட்டியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. சிறப்பாக பந்துவீசி ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய அர்ஷ்தீப் சிங் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

திருவனந்தபுரத்தின் க்ரீன்ஃபீல்ட் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றிருந்தது. பெயருக்கேற்றவாறே பிட்ச்சிலும் வழக்கத்தைவிட அதிக புற்கள் நிரம்பியே காணப்பட்டது. பிட்ச் ரிப்போர்ட்டைக் கொடுத்த அஜித் அகர்கரும் எம்பாங்வாவும் நியூ பாலில் பௌலர்களுக்கு உதவக்கூடிய பிட்ச்சாக இருக்கும் என உத்தரவாதம் கொடுத்தனர். அதேபோன்றுதான் நடக்கவும் செய்தது.

டாஸை வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பந்துவீச்சைத் தேர்வு செய்தார். டாஸின் போது ரவிசாஸ்திரி ரோஹித் சர்மாவிடம்

Rohit |INDvSA
'ரசிகர்களின் ஆராவாரத்தை பார்த்தீர்களா? இந்த சத்தத்தில் அவுட் ஃபீல்டில் நிற்கும் வீரர்களிடம் எப்படி தகவல்களை பரிமாறிக்கொள்ளப் போகிறீர்கள்?' ரவிசாஸ்திரி நகைச்சுவையாகத்தான் இந்த கேள்வியை கேட்டார். ஆனால், ரோஹித் & கோ இதை படு சீரியசாக எடுத்துக் கொண்டார்கள் போல!

அவுட் ஃபீல்டர்கள் நிற்கிற வரையெல்லாம் காத்திருக்க வேண்டும். பவர்ப்ளேக்குள்ளேயே மொத்தமாக முடித்துவிடலாம் என்ற மனநிலையில் தென்னாப்பிரிக்காவை பந்தாடி விட்டார்கள். முதல் மூன்று ஓவர்களுக்காகவே தென்னாப்பிரிக்க அணியின் டாப் 5 விக்கெட்டுகளை தீபக் சஹாரும் அர்ஷ்தீப் சிங்கும் வீழ்த்திவிட்டனர்.

புற்கள் நிரம்பிய அந்த பிட்சில் பந்து நன்றாகவே ஸ்விங் ஆனது. அதற்கேற்றவாறு ரோஹித்தும் தொடக்கத்திலிருந்து இரண்டு ஸ்லிப்களை வைத்து அட்டாக் செய்தார். தீபக் சஹார் வீசிய முதல் ஓவரிலேயே தென்னாப்பிரிக்க கேப்டனான பவுமா வீழ்ந்தார். இரண்டு அவுட் ஸ்விங்கர்களுக்குப் பிறகு தீபக் சஹார் வீசிய ஒரு இன்ஸ்விங்கரில் பவுமா ஸ்டம்புகளைப் பறிகொடுத்து வெளியேறினார்.

Arshdeep
அர்ஷ்தீப் சிங் வீசிய அடுத்த ஓவர் இன்னும் பயங்கரமாக இருந்தது. இந்த ஓவரில் மட்டும் 3 விக்கெட்டுகளை அர்ஷ்தீப் வீழ்த்தியிருந்தார். ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வீசிய ஒரு பந்துக்கு பேட்டை விட்டு இன்சைட் எட்ஜ் ஆகி டீகாக் ஸ்டம்புகளைப் பறிகொடுத்தார். அடுத்ததாக ஒரு அவுட் ஸ்விங்கில் ரோசோவ் எட்ஜ் ஆகி பண்ட்டிடம் கேட்ச் ஆக, அதற்கடுத்த பந்தே ஒரு இன்ஸ்விங்கில் மில்லர் போல்டானார்.

சர்வதேச டி20 போட்டிகளில் மில்லரின் முதல் டக் அவுட் இதுதானாம்!

அற்புதமான ஓவரை வீசி விட்டு அர்ஷ்தீப் செல்ல, அடுத்த ஓவரில் சஹார் ஸ்டப்ஸின் விக்கெட்டை வீழ்த்தினார். இப்படி தொடர்ச்சியாக விக்கெட் விழுந்து கொண்டிருந்த சமயத்தில் கமென்ட்ரி பாக்ஸில்

என கவாஸ்கர் பேசியிருந்தார். கவாஸ்கரைப் போலவே நமக்கும் கொஞ்ச நேரத்திலேயே இது டி20 போட்டிதான் என்பது மறந்தேவிட்டது. பேட்டர் லீவ் செய்தால் 'Well Left' என கைத்தட்டாதது ஒன்றுதான் குறை. தென்னாப்பிரிக்க அணி பவர்ப்ளேயில் 30 ரன்களை எடுத்து 5 விக்கெட்டுகளை இழந்திருந்தது. டி20 போட்டிகளில் பவர்ப்ளேயில் அந்த அணியின் குறைந்தபட்ச ஸ்கோர் இதுதான். சீக்கிரமே ஆல் அவுட் ஆகிவிடுவார்கள் என நினைக்கையில் தென்னாப்பிரிக்க அணி கொஞ்சம் தாக்குப்பிடித்தது. மார்க்ரம், பர்னல், மகாராஜா ஆகியோர் ஓரளவுக்கு சிறப்பாக ஆடி அணியின் ஸ்கோரை 100 க்கு மேல் கொண்டு வந்துவிட்டனர். பவர்ப்ளேயில் சிறப்பாக வீசிய அர்ஷ்தீப் சிங் 19 வது ஓவரில் 17 ரன்களை கொடுத்திருந்தார். 19 வது ஓவர் என்றாலே இந்தியாவிற்கு அலர்ஜிதான்!

Rahul & SKY

107 ரன்கள் டார்கெட்டை எட்டிப்பிடிக்க இந்திய அணி களமிறங்கியது. ரபாடா வீசிய முதல் ஓவரை முழுமையாக டாட் ஆடி மெய்டனாக்கிவிட்டார் ராகுல். பந்து மூவ் ஆவதால் தென்னாப்பிரிக்கவைப் போன்ற ஒரு அதிர்ச்சிமிக்க தொடக்கத்தை சந்தித்து விடக்கூடாது என்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே இது தெரிந்தது. இருந்தும் ரோஹித்தும் கோலியும் சீக்கிரமே விக்கெட்டை விட்டு ஏமாற்றம் அளித்தனர்.

பவர்ப்ளேயில் இந்திய அணி 17 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. டி20 போட்டிகளில் இந்திய அணியின் குறைந்தபட்ச பவர்ப்ளே ஸ்கோர் இதுதான்.

பவர்ப்ளே முடிந்த சமயத்தில் சூர்யகுமார் யாதவ் வந்தார். வந்த வேகத்திலேயே நோர்கியாவின் பந்தில் 2 சிக்சர்களை பறக்கவிட்டார். இதன்பிறகுதான் இந்திய அணியின் ஸ்கோர் வேகம்பிடித்தது. ராகுல் ஒரு முனையில் தஞ்சமடைந்து விக்கெட்டை காக்க அதன்பிறகு இந்திய அணிக்கு விக்கெட் சேதாரம் இல்லை. 17 வது ஓவரில் இந்திய அணி இலக்கை எட்டிப்பிடித்தது. ராகுல், சூர்யகுமார் இருவருமே அரைசதத்தை கடந்திருந்தனர். 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது.

சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்திரேலிய தொடரில் இந்திய அணியின் பந்துவீச்சு ரொம்பவே சுமாராக இருந்தது. பவர்ப்ளே, டெத் ஓவர் என எங்கேயும் சொதப்பல்தான்.

TEAM INDIA
தென்னாப்பிரிக்கவிற்கு எதிரான இந்த முதல் போட்டியில் வென்றதோடு மட்டுமல்லாமல் சிறப்பாக பந்தும் வீசியிருக்கின்றனர். ஒரு பௌலர் ஆட்டநாயகன் விருதை வென்றிருக்கிறார். இதுவே ஒரு சிறப்பான முன்னேற்றம்தான். இது தொடர வேண்டும்!

Comments

Popular posts from this blog

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

Doctor Vikatan: நாள்பட்ட இருமல், கூடவே சிறுநீர்க்கசிவும், காதில் ஒலிக்கும் சத்தமும்... என்ன பிரச்னை?

Doctor Vikatan: என் வயது 50. எனக்கு நாள்பட்ட இருமல் இருக்கிறது. மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து எடுத்துக் கொண்டு இருக்கிறேன். இருமினால் சிறுநீர்க் கசிவு ஏற்படுகிறது. காதில் சில நேரங்களில் அலை அடிப்பது போல் சத்தம் கேட்கிறது. இதற்கெல்லாம் என்ன சிகிச்சை எடுக்க வேண்டும்? - Jayarani, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம். பொது மருத்துவர் அருணாசலம் உங்கள் விஷயத்தில் இருமலைக் கட்டுப்படுத்த முதலில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இரண்டு வாரங்களுக்கு மேல் தொடரும் இருமல், காசநோயின் அறிகுறியாகவும் இருக்கக்கூடும். நிறைய பேர் அது தெரியாமல் இருமல் மருந்தைக் குடித்துக் குடித்து அதைக் கட்டுப்பாட்டில் வைக்க முயல்கிறார்கள். இது தவறு. இருமலுக்கான காரணம் தெரிந்து சிகிச்சை எடுப்பதுதான் சரியானது. இருமலில் வறட்டு இருமல், சளியுடன் கூடிய இருமல், ஆஸ்துமா இருமல் என மூன்று வகை உண்டு. வறட்டு இருமல் என்பது ஒருவித பாக்டீரியாவால் வருவது. ஒவ்வொரு முறை இருமும்போதும் சளியும் சேர்ந்து வருவது, சளி இருமல். மூன்றாவது ஆஸ்துமாவினால், வீஸிங்கால் வருவது. அதாவது காற்றுப்பாதை ச...