Skip to main content

Doctor Vikatan: 40 வயதைக் கடந்த எல்லோருக்கும் இசிஜியும் டிரெட்மில் டெஸ்ட்டும் அவசியமா?

Doctor Vikatan: 40 வயது தாண்டியவர்கள் எத்தனை மாதங்களுக்கு ஒருமுறை ECG செய்வது நல்லது? டிரெட்மில் டெஸ்ட் யாருக்குச் செய்ய வேண்டும்? இந்த இரண்டிலும் இதயம் ஆரோக்கியமாக இருக்கிறதா என்பதை எப்படிக் கண்டுபிடிப்பார்கள்?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம்...

மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம்

இதயத்தின் எலக்ட்ரிகல் ஆக்டிவிட்டியை பார்க்கப் பயன்படுத்துவதே இசிஜி. ஹார்ட் அட்டாக் ஏற்படும்போது இந்த இசிஜியில் மாற்றங்கள் இருக்கும். ஏற்கெனவே ஹார்ட் அட்டாக் வந்திருக்கிறதா, வேறு ஏதேனும் பிரச்னைகள் உள்ளனவா என்பதையெல்லாம்கூட இசிஜியில் கண்டுபிடிக்க முடியும்.

மேற்கத்திய மருத்துவ கைடுலைன்படி. முறையாக டிரெட்மில் செய்யச் சொல்லி அறிவுறுத்தப்படுவதில்லை. ஆனால் இந்தியர்களிடையே மாரடைப்பு விகிதம் அதிகம் என்பதால் குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு, மருத்துவரிடம் பேசி, இசிஜி மற்றும் டிரெட்மில் டெஸ்ட் செய்து பார்ப்பதில் தவறு ஏதும் இல்லை.

30-35 வயதிலேயே இன்று பலரும் உடலியக்கங்களைக் குறைத்துக் கொள்கிறார்கள். 50 வயதில் அடியெடுத்து வைக்கும்போதே தனக்கு வயதாகிவிட்டது, இனிமேல் உடல்ரீதியாக ஆக்டிவ்வாக இருப்பது சாத்தியமில்லை என நினைக்கிறார்கள். சிலருக்கு இதயத்தின் ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு, மெள்ள மெள்ள அதன் தீவிரம் அதிகரிக்கிறது. அந்நிலையில் அவர்களால் உடல்ரீதியாக ஆக்டிவ்வாக இருக்க முடிவதில்லை. அதனாலும் உடலியக்கங்களைக் குறைத்துக் கொள்கிறார்கள். ரத்தக் குழாய் அடைப்பின் காரணமாக இதயத்துக்கு போதுமான ஆக்ஸிஜன் செல்வதில்லை.

டிரெட்மில் டெஸ்ட் செய்யும்போது ஒருவரால் எவ்வளவு தூரம் நடக்க முடிகிறது, வேகமாக நடக்கும்போது ஏதேனும் அசாதாரண அறிகுறிகள் தெரிகின்றனவா என்று தெரியும்.

ECG

இசிஜி டெஸ்ட் எடுக்கிறார்கள்.... நார்மல் என்று ரிசல்ட் வருகிறது. அதனால் இனி எதிர்காலத்தில் அவர்களுக்கு ஹார்ட் அட்டாக்கே வராது என்று சொல்ல முடியாது. ஏனெனில் இசிஜி என்பது ஏற்கெனவே மாரடைப்பு வந்ததையும், தற்சமயம் அதற்கான ஆபத்து இருக்கிறதா என்பதையும் மட்டும்தான் காட்டும். அதுவே இதயத்தில் 30 சதவிகித அடைப்பு இருந்தால் அது இசிஜியிலோ, டிரெட்மில் டெஸ்ட்டிலோ தெரியாது. நார்மல் என்றே காட்டும்.

எனவே சிலருக்கு கார்டியாக் CT மற்றும் ஆஞ்சியோகிராம் என இரண்டு பிரத்யேக டெஸ்ட்டுகள் மூலம்தான் ரத்தக்குழாய் அடைப்பைத் துல்லியமாகக் கண்டுபிடிக்க முடியும். அதற்காக எல்லோரும் போய் இந்த இரண்டு டெஸ்ட்டுகளையும் செய்து கொள்ளுங்கள் என்று சொல்வதாக அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டாம்.

இதயம்

இதயம் தொடர்பான பிரச்னைகள் வரலாம் என்ற ரிஸ்க் பிரிவில் உள்ளவர்கள் மருத்துவரிடம் பேசி, முன்னெச்சரிக்கையாக இந்த டெஸ்ட்டை செய்து கொள்ளலாம். மற்றபடி 40 வயதுக்கு மேலானவர்கள் இசிஜி மற்றும் டிரெட்மில் டெஸ்ட் செய்து பார்ப்பதில் தவறு கிடையாது.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...