Skip to main content

Doctor Vikatan: 40 வயதைக் கடந்த எல்லோருக்கும் இசிஜியும் டிரெட்மில் டெஸ்ட்டும் அவசியமா?

Doctor Vikatan: 40 வயது தாண்டியவர்கள் எத்தனை மாதங்களுக்கு ஒருமுறை ECG செய்வது நல்லது? டிரெட்மில் டெஸ்ட் யாருக்குச் செய்ய வேண்டும்? இந்த இரண்டிலும் இதயம் ஆரோக்கியமாக இருக்கிறதா என்பதை எப்படிக் கண்டுபிடிப்பார்கள்?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம்...

மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம்

இதயத்தின் எலக்ட்ரிகல் ஆக்டிவிட்டியை பார்க்கப் பயன்படுத்துவதே இசிஜி. ஹார்ட் அட்டாக் ஏற்படும்போது இந்த இசிஜியில் மாற்றங்கள் இருக்கும். ஏற்கெனவே ஹார்ட் அட்டாக் வந்திருக்கிறதா, வேறு ஏதேனும் பிரச்னைகள் உள்ளனவா என்பதையெல்லாம்கூட இசிஜியில் கண்டுபிடிக்க முடியும்.

மேற்கத்திய மருத்துவ கைடுலைன்படி. முறையாக டிரெட்மில் செய்யச் சொல்லி அறிவுறுத்தப்படுவதில்லை. ஆனால் இந்தியர்களிடையே மாரடைப்பு விகிதம் அதிகம் என்பதால் குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு, மருத்துவரிடம் பேசி, இசிஜி மற்றும் டிரெட்மில் டெஸ்ட் செய்து பார்ப்பதில் தவறு ஏதும் இல்லை.

30-35 வயதிலேயே இன்று பலரும் உடலியக்கங்களைக் குறைத்துக் கொள்கிறார்கள். 50 வயதில் அடியெடுத்து வைக்கும்போதே தனக்கு வயதாகிவிட்டது, இனிமேல் உடல்ரீதியாக ஆக்டிவ்வாக இருப்பது சாத்தியமில்லை என நினைக்கிறார்கள். சிலருக்கு இதயத்தின் ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு, மெள்ள மெள்ள அதன் தீவிரம் அதிகரிக்கிறது. அந்நிலையில் அவர்களால் உடல்ரீதியாக ஆக்டிவ்வாக இருக்க முடிவதில்லை. அதனாலும் உடலியக்கங்களைக் குறைத்துக் கொள்கிறார்கள். ரத்தக் குழாய் அடைப்பின் காரணமாக இதயத்துக்கு போதுமான ஆக்ஸிஜன் செல்வதில்லை.

டிரெட்மில் டெஸ்ட் செய்யும்போது ஒருவரால் எவ்வளவு தூரம் நடக்க முடிகிறது, வேகமாக நடக்கும்போது ஏதேனும் அசாதாரண அறிகுறிகள் தெரிகின்றனவா என்று தெரியும்.

ECG

இசிஜி டெஸ்ட் எடுக்கிறார்கள்.... நார்மல் என்று ரிசல்ட் வருகிறது. அதனால் இனி எதிர்காலத்தில் அவர்களுக்கு ஹார்ட் அட்டாக்கே வராது என்று சொல்ல முடியாது. ஏனெனில் இசிஜி என்பது ஏற்கெனவே மாரடைப்பு வந்ததையும், தற்சமயம் அதற்கான ஆபத்து இருக்கிறதா என்பதையும் மட்டும்தான் காட்டும். அதுவே இதயத்தில் 30 சதவிகித அடைப்பு இருந்தால் அது இசிஜியிலோ, டிரெட்மில் டெஸ்ட்டிலோ தெரியாது. நார்மல் என்றே காட்டும்.

எனவே சிலருக்கு கார்டியாக் CT மற்றும் ஆஞ்சியோகிராம் என இரண்டு பிரத்யேக டெஸ்ட்டுகள் மூலம்தான் ரத்தக்குழாய் அடைப்பைத் துல்லியமாகக் கண்டுபிடிக்க முடியும். அதற்காக எல்லோரும் போய் இந்த இரண்டு டெஸ்ட்டுகளையும் செய்து கொள்ளுங்கள் என்று சொல்வதாக அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டாம்.

இதயம்

இதயம் தொடர்பான பிரச்னைகள் வரலாம் என்ற ரிஸ்க் பிரிவில் உள்ளவர்கள் மருத்துவரிடம் பேசி, முன்னெச்சரிக்கையாக இந்த டெஸ்ட்டை செய்து கொள்ளலாம். மற்றபடி 40 வயதுக்கு மேலானவர்கள் இசிஜி மற்றும் டிரெட்மில் டெஸ்ட் செய்து பார்ப்பதில் தவறு கிடையாது.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...

மரபணு சிகிச்சையில் செவித்திறன் பெற்ற சிறுமி - அனைத்து பரம்பரை நோய்களுக்கும் தீர்வு கிடைக்குமா?

நம் உடல், பல கோடான கோடி செல்களால் ஆனது. இந்தச் செல்களில் சுமார் 22 ஆயிரம் மரபணுக்கள் உள்ளன. பெரும்பாலான செல்களில் உட்கரு உண்டு. இங்குதான் DNA மூலக்கூறுகள் உள்ளன. இந்த DNA மூலக்கூறுகள்தான் இந்த மரபணுத் தகவல்களைச் சுமந்து கொண்டு உள்ளன. இந்த மரபணுக்களின் இயக்கம்தான், நம் இயக்கம். உதாரணமாக, நம் உமிழ் நீரில் அமைலேஸ் என்ற ஒரு நொதி உள்ளது. இந்த நொதிதான் நம் உணவில் உள்ள மாவுப் பொருளைச் சிதைத்து குளுக்கோஸை உற்பத்தி செய்கிறது. இந்த நொதியை உற்பத்தி செய்யத் தேவையான தகவல், AMY1 என்ற மரபணுவில் உள்ளது. இந்த மரபணுவில் உள்ள தகவலின் படிதான் அமைலேஸ் என்ற ஒரு நொதி தயாரிக்கப்படுகிறது. அதாவது, AMY1 என்ற மரபணுவில் ஏதாவது தவறு இருந்தால், அமைலேஸ் என்ற ஒரு நொதி செயலிழக்கும். இந்த நிலையில் உள்ள மரபணு நோயாளி, உணவு சாப்பிட்டால் அவருக்குச் செரிமானமாகாது. மரபணு அதிகரிக்கும் உணவுத் தேவை: தொழில்நுட்பத்தில் தயாராகும் செயற்கை மீன், இறைச்சி... உடலுக்கு நல்லதா..? மரபணுவில் உள்ள தகவலில் தவறு இருந்தால், மரபணு நோய் ஏற்படும். இதனைப் பரம்பரை நோய் எனலாம். காரணம், இந்த நோய் பெற்றோர்கள்/மூதாதையர்களிடமிருந்து பிள்ளைகளுக்கு ...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...