Skip to main content

ஒன் பை டூ

வினோஜ் பி. செல்வம், மாநிலச் செயலாளர், பா.ஜ.க

``உண்மையைச் சொல்லியிருக்கிறார். கடந்த எட்டு ஆண்டுகளாக இந்தியாவிலுள்ள அனைத்துத் துறைகளின் முன்னேற்றத்திலும் பிரதமர் அதிக கவனம் செலுத்திவருகிறார். அதனால்தான் பொருளாதார வளர்ச்சியில் இங்கிலாந்தைப் பின்னுக்குத் தள்ளி, இந்தியா முன்னேறியிருக்கிறது. குறிப்பாக விவசாயிகளின் முன்னேற்றத்துக்காகவும், வேளாண்துறை வளர்ச்சிக்காகவும் பிரதமர் தொடர்ந்து பாடுபட்டுக்கொண்டிருக்கிறார். அதன் விளைவாகவே இந்திய விவசாயிகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளவு அதிகரித்திருக்கிறது. இன்றைய தேதிக்கு விருதுநகரில் உள்ள ஒரு விவசாயி, தான் விளைவித்த பொருள்களை எந்த இடைத்தரகரின் உதவியும் இல்லாமல் சிங்கப்பூருக்கும், துபாய்க்கும் ஏற்றுமதி செய்யமுடியும் என்கிற நிலை ஏற்பட்டிருக்கிறது. நேரடிச் சந்தை விற்பனை, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தியுள்ளது. கொரோனா காலகட்டத்தில், 13 கோடி விவசாயிகளுக்குத் தவணை முறையில் தலா 6,000 ரூபாய் நேரிடையாக அவர்களின் வங்கிக் கணக்கில் வரவுவைக்கப்பட்டது. இதுவே கடந்த ஆட்சியாக இருந்திருந்தால், நிச்சயம் கமிஷன் போக சொற்ப தொகைதான் கிடைத்திருக்கும். விவசாயிகளின் வளர்ச்சிக்காகப் பல புதிய திட்டங்கள், கடன் உதவி, பயிர்க் காப்பீடு, சலுகை என அனைத்தையும் செய்து கொடுத்திருக்கிறார். முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி அதன் மூலம் இந்தியாவின் பொருளாதாரத்தையும் உயர்த்தியிருக்கிறார் பிரதமர் மோடி.’’

வினோஜ் பி. செல்வம்
கனகராஜ்

கனகராஜ், மாநிலச் செயற்குழு உறுப்பினர், சி.பி.எம்

``அப்பட்டமான பொய். பா.ஜ.க அரசு கொண்டுவந்த வேளாண் சட்டத்துக்கு எதிராக மாதக்கணக்கில் டெல்லி முற்றுகையிடப்பட்டதையும், பா.ஜ.க-வினரால் கார் ஏற்றி விவசாயிகள் கொல்லப்பட்டதையும் மறந்துவிட்டார்களா... மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பாகவே, பிரதமர் பயிர்க் காப்பீடு திட்டம் செயலில் இருக்கிறது. 2014-க்கு முன்பாக, இந்தக் காப்பீட்டுத் திட்டத்துக்கு, ஒன்றிய அரசும், மாநில அரசும் தலா 49 சதவிகிதமும், விவசாயிகள் தரப்பில் 2 சதவிகிதமும் வழங்க வேண்டும். ஆனால், 2016-க்குப் பிறகு, ஒன்றிய அரசின் பங்கை 23 சதவிகித மாகக் குறைத்தது பா.ஜ.க அரசு. தற்சமயம் அந்தந்த மாநில அரசுதான் 1,000 கோடி ரூபாய்க்கும் மேல் கூடுதல் தொகை வழங்குகிறது. ‘விளைபொருளுக்கு 1.5 மடங்கு அதிக விலை, 60 வயதுக்கு மேற்பட்ட விவசாயிகளுக்குப் பென்ஷன்’ என்றெல்லாம் 2014 தேர்தல் அறிக்கையில் சொன்னது பா.ஜ.க. அது பற்றி இன்றுவரை மோடி வாய் திறக்கவில்லை. இந்தியாவின் மொத்த கோதுமை உற்பத்தி 1.6 கோடி டன் குறைந்திருக்கிறது. இந்திய உணவுக் கழகம் கோதுமை கொள்முதலைப் பெருமளவு குறைத்திருக்கிறது. இதனால், விளைபொருளைத் தனியாருக்கு விற்கும் நிலை செயற்கையாக உருவாக்கப்பட்டிருக்கிறது. விவசாயி நிம்மதியாக விவசாயம் செய்ய முடியாமல்,‘இந்திய வேளாண்மையைக் குழிதோண்டிப் புதைத்தவர் மோடி’ என்று சொல்லியிருந்தால் சரியாக இருந்திருக்கும்.


Comments

Popular posts from this blog

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

Doctor Vikatan: நாள்பட்ட இருமல், கூடவே சிறுநீர்க்கசிவும், காதில் ஒலிக்கும் சத்தமும்... என்ன பிரச்னை?

Doctor Vikatan: என் வயது 50. எனக்கு நாள்பட்ட இருமல் இருக்கிறது. மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து எடுத்துக் கொண்டு இருக்கிறேன். இருமினால் சிறுநீர்க் கசிவு ஏற்படுகிறது. காதில் சில நேரங்களில் அலை அடிப்பது போல் சத்தம் கேட்கிறது. இதற்கெல்லாம் என்ன சிகிச்சை எடுக்க வேண்டும்? - Jayarani, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம். பொது மருத்துவர் அருணாசலம் உங்கள் விஷயத்தில் இருமலைக் கட்டுப்படுத்த முதலில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இரண்டு வாரங்களுக்கு மேல் தொடரும் இருமல், காசநோயின் அறிகுறியாகவும் இருக்கக்கூடும். நிறைய பேர் அது தெரியாமல் இருமல் மருந்தைக் குடித்துக் குடித்து அதைக் கட்டுப்பாட்டில் வைக்க முயல்கிறார்கள். இது தவறு. இருமலுக்கான காரணம் தெரிந்து சிகிச்சை எடுப்பதுதான் சரியானது. இருமலில் வறட்டு இருமல், சளியுடன் கூடிய இருமல், ஆஸ்துமா இருமல் என மூன்று வகை உண்டு. வறட்டு இருமல் என்பது ஒருவித பாக்டீரியாவால் வருவது. ஒவ்வொரு முறை இருமும்போதும் சளியும் சேர்ந்து வருவது, சளி இருமல். மூன்றாவது ஆஸ்துமாவினால், வீஸிங்கால் வருவது. அதாவது காற்றுப்பாதை ச...