Skip to main content

``காந்தி குடும்பம் இல்லாமல் காங்கிரஸுக்கு எந்த அடையாளமும் இருக்காது!" - மூத்த தலைவர் திக்விஜய சிங்

காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பதவிக்கு அடுத்தமாதம் 17-ம் தேதி தேர்தல் நடக்கவிருக்கிறது. முதலில் கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் ராகுல் காந்தியே மீண்டும் தலைவராக வேண்டும் எனக் கூறிவர, ராகுல் காந்தியும் தொடர்ச்சியாக அதனை மறுத்துவந்தார். அதையடுத்து, காங்கிரஸ் எம்.பி சசி தரூர், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் ஆகியோர் போட்டியிடுவதாகப் பேச்சுக்கள் அடிபட்டன.

சசி தரூர் - அசோக் கெலாட்

பின்னர், ராஜஸ்தான் அரசியலில் சில நெருக்கடிகள் எழ, அசோக் கெலாட் உடனடியாக இன்று டெல்லிக்கு விரைந்து காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியை நேரில் சந்தித்தார். அதன்பிறகு, தலைவர் பதவிக்கான தேர்தலில் தான் போட்டியிடவில்லை என செய்தியாளர்களிடம் அசோக் கெலாட் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து தற்போது, தேர்தலில் வேட்புமனு செய்வதற்குக் கடைசி நாளான இன்று, சசி தரூர் மற்றும் மூத்த தலைவர் திக்விஜய சிங் வேட்புமனு தாக்கல் செய்யவிருப்பது உறுதியாகியுள்ளது.

திக்விஜய சிங்

இந்த நிலையில் தனியார் ஊடகமொன்றுக்குப் பேட்டியளித்த திக்விஜய சிங், ``இப்போதுவரை, அசோக் கெலாட்தான் எங்களின் அதிகாரபூர்வ வேட்பாளராக இருக்கலாம் என்று கருதப்பட்டது. அசோக் கெலாட் போட்டியிட்டிருந்தால், நாங்கள் அதை மதித்திருப்போம். எப்போதும் அவர் காங்கிரஸுக்கு விஸ்வாசமாக இருந்துவருகிறார். ஆனால் ராஜஸ்தானில் நடந்த துரதிஷ்டவசமான சம்பவத்தால் இது தவிர்க்கப்பட்டிருக்கலாம்" என்று கூறினார்.

சோனியா - ராகுல் காந்தி

மேலும் கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் பிளவு மற்றும் நெருக்கடி குறித்துப் பேசிய திக்விஜய சிங், ``இந்தக் கட்சிக்குள் பலமுறை பிளவுகள் ஏற்பட்டிருக்கின்றன. ஆனால் 99 சதவிகித காங்கிரஸார், சுதந்திரத்திற்கு முன்பும் சரி, பின்பும் சரி தேசத்திற்குச் சேவை செய்த குடும்பத்தை ஆதரித்திருக்கின்றனர். மேலும் நேரு-காந்தி குடும்பம் இல்லாமல் காங்கிரஸுக்கு எந்த அடையாளமும் இருக்காது" எனத் தெரிவித்தார்


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...