Skip to main content

ரிஷி சுனக் Vs லிஸ் ட்ரஸ்: இங்கிலாந்து பிரதமர் தேர்தலையொட்டி அரங்கேறிய காரசார விவாதம்!

இங்கிலாந்தில் பிரதமர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றுவருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் போரிஸ் ஜான்சன் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்ததையடுத்து, புதிய பிரதமரைத் தேர்வு செய்யும் பணியில், ஆளுங்கட்சியான கன்சர்வேடிவ் கட்சி தீவிரமாக இறங்கியுள்ளது. இதற்காக நடத்தப்படும் தேர்தலில், இந்திய வம்சாவளியான ரிஷி சுனக், வெளியுறவுத்துறை அமைச்சர் லிஸ் டிரஸ் உட்பட மொத்தம் 8 எம்.பி-க்கள் போட்டியிட்டனர். இதில் பல்வேறு சுற்றுகளின் முடிவில் ஒவ்வொரு எம்.பி-க்களாக வெளியேற, தொடக்கம் முதலே அதிக வாக்குகளுடன் ஆதிக்கம் செலுத்திவந்த ரிஷி சுனக் - லிஸ் டிரஸ் ஆகியோர் தற்போது இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

போரிஸ் ஜான்சன்

இதற்கிடையே தேர்தலில் வெற்றி பெற ஒருவரையொருவர் போட்டி போட்டுக்கொண்டு நிர்வாகிகளிடையே வாக்குறுதிகளை அளித்துவருகின்றனர். இருப்பினும், கன்சர்வேடிவ் கட்சியின் உறுப்பினர்கள் கலந்துகொண்ட தனியார் கருத்துக்கணிப்பில் ரிஷி சுனக், லிஸ் டிரஸ்-ஐ விட பின்னடைவைச் சந்தித்திருக்கிறார். அதாவது கன்சர்வேடிவ் கட்சி உறுப்பினர்களில் 38 சதவிகித பேர் மட்டுமே ரிஷி சுனக்குக்கும், 62 சதவிகித பேர் லிஸ் டிரஸ்-கும் ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ரிஷி சுனக்

இந்த நிலையில், ரிஷி சுனக் மற்றும் லிஸ் டிரஸ் இருவரும் நேற்று முன்தினம் இரவு தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு ஆதரவு திரட்டியுள்ளனர். அப்போது அந்த நிகழ்ச்சியில் ரிஷி சுனக் மற்றும் லிஸ் டிரஸ் இடையே காரசாரமான விவாதம் அரங்கேறியது.

விவாதத்தின்போது இருவருக்கும் பொதுவாகக் கேட்கப்பட்ட கேள்வியில், சீனா மீதான இங்கிலாந்து கொள்கை மிகவும் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று இருவருமே பதிலளித்தனர். இருப்பினும் ரிஷி சுனக், முன்னதாக லிஸ் டிரஸ் சீனாவுக்குச் சென்றிருந்ததைச் சுட்டிக்காட்டி, சீனாவுடனான பிரிட்டனின் உறவு பொற்காலம் என்று லிஸ் டிரஸ் முன்னர் கூறியதாக அவர் மீது குற்றம் சாட்டினார்.

மேலும், சீனாவின் சைபர் தாக்குதலை சமாளிக்கவும், தொழில்நுட்ப பாதுகாப்பில் சிறந்த நடைமுறையைப் பகிர்ந்து கொள்ளவும், புதிய சர்வதேச கூட்டணியை நான் உருவாக்குவேன் என்று ரிஷி சுனக் கூறினார்.

அதைத்தொடர்ந்து ரஷ்யா - உக்ரைன் போர் தொடர்பாக, உக்ரைன் துறைமுகங்களிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் தானியங்களைப் பாதுகாக்க இங்கிலாந்து கடற்படையிடம் அனுப்பப்படுமா என்ற கேள்வி இருவரிடமும் முன்வைக்கப்பட்டது. இதற்கு இருவருமே அனுப்பப்படாது என பதிலளிக்க, உக்ரைனுக்கு ஆதரவாகப் பொருளாதார உதவி போன்றவற்றை இங்கிலாந்து தொடர்ந்து செய்யும் என ரிஷி சுனக் கூடுதலாகப் பதிலளித்தார். தொடர்ந்து லிஸ் டிரஸ், ரஷ்யா-உக்ரைன் போரில் இங்கிலாந்து நேரடியாகத் தலையிடாது என்று கூறினார்.

ரிஷி சுனக்

அதைத்தொடர்ந்து லிஸ் டிரஸை தாக்கிப்பேசிய ரிஷி சுனக், ``40 பில்லியன் பவுண்டுகளுக்கு மேல் நிதியில்லாத வரிக் குறைப்புகளை நீங்கள் உறுதியளித்துள்ளீர்கள். உங்களின் வரி குறைப்பு திட்டம் மில்லியன் கணக்கான மக்களைத் துயரத்தில் தள்ளும்" என்று வாதிட்டார்.

அதைத்தொடர்ந்து கருவூல அமைச்சராக ரிஷி சுனக் கொண்டுவந்த திட்டங்கள் குறித்து அவரை விமர்சித்த லிஸ் டிரஸ், ``கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வரிகளை அவர் உயர்த்தியுள்ளார். அதனால் இப்போது மந்தமான நிலையை நாங்கள் எதிர்கொள்கிறோம். இதற்கான உண்மைகளும் புள்ளிவிவரங்களில் உள்ளது. மக்கள் தத்தளிக்கின்றனர் என்று என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. நான் விரைந்து செயல்படுவேன்" என்று கூறினார்.

ரிஷி சுனக் Vs லிஸ் ட்ரஸ்

செப்டம்பர் 2-ம் தேதியோடு வாக்குப்பதிவு முடிவடையும் நிலையில், இவர்களின் இந்த காரசாரமான விவாதம் இப்போதே தேர்தலில் யார் வெற்றி பெறப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பை இன்னும் கூட்டியுள்ளது. கருத்துக்கணிப்பில் என்ன வந்தாலும், செப்டம்பர் 5-ம் தேதி தான் தேர்தலில் யார் வெற்றிபெற்றார் என்பது தெரியவரும். அதுவரையில் பொறுத்திருப்போம்!


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...

மரபணு சிகிச்சையில் செவித்திறன் பெற்ற சிறுமி - அனைத்து பரம்பரை நோய்களுக்கும் தீர்வு கிடைக்குமா?

நம் உடல், பல கோடான கோடி செல்களால் ஆனது. இந்தச் செல்களில் சுமார் 22 ஆயிரம் மரபணுக்கள் உள்ளன. பெரும்பாலான செல்களில் உட்கரு உண்டு. இங்குதான் DNA மூலக்கூறுகள் உள்ளன. இந்த DNA மூலக்கூறுகள்தான் இந்த மரபணுத் தகவல்களைச் சுமந்து கொண்டு உள்ளன. இந்த மரபணுக்களின் இயக்கம்தான், நம் இயக்கம். உதாரணமாக, நம் உமிழ் நீரில் அமைலேஸ் என்ற ஒரு நொதி உள்ளது. இந்த நொதிதான் நம் உணவில் உள்ள மாவுப் பொருளைச் சிதைத்து குளுக்கோஸை உற்பத்தி செய்கிறது. இந்த நொதியை உற்பத்தி செய்யத் தேவையான தகவல், AMY1 என்ற மரபணுவில் உள்ளது. இந்த மரபணுவில் உள்ள தகவலின் படிதான் அமைலேஸ் என்ற ஒரு நொதி தயாரிக்கப்படுகிறது. அதாவது, AMY1 என்ற மரபணுவில் ஏதாவது தவறு இருந்தால், அமைலேஸ் என்ற ஒரு நொதி செயலிழக்கும். இந்த நிலையில் உள்ள மரபணு நோயாளி, உணவு சாப்பிட்டால் அவருக்குச் செரிமானமாகாது. மரபணு அதிகரிக்கும் உணவுத் தேவை: தொழில்நுட்பத்தில் தயாராகும் செயற்கை மீன், இறைச்சி... உடலுக்கு நல்லதா..? மரபணுவில் உள்ள தகவலில் தவறு இருந்தால், மரபணு நோய் ஏற்படும். இதனைப் பரம்பரை நோய் எனலாம். காரணம், இந்த நோய் பெற்றோர்கள்/மூதாதையர்களிடமிருந்து பிள்ளைகளுக்கு ...