Skip to main content

ரிஷி சுனக் Vs லிஸ் ட்ரஸ்: இங்கிலாந்து பிரதமர் தேர்தலையொட்டி அரங்கேறிய காரசார விவாதம்!

இங்கிலாந்தில் பிரதமர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றுவருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் போரிஸ் ஜான்சன் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்ததையடுத்து, புதிய பிரதமரைத் தேர்வு செய்யும் பணியில், ஆளுங்கட்சியான கன்சர்வேடிவ் கட்சி தீவிரமாக இறங்கியுள்ளது. இதற்காக நடத்தப்படும் தேர்தலில், இந்திய வம்சாவளியான ரிஷி சுனக், வெளியுறவுத்துறை அமைச்சர் லிஸ் டிரஸ் உட்பட மொத்தம் 8 எம்.பி-க்கள் போட்டியிட்டனர். இதில் பல்வேறு சுற்றுகளின் முடிவில் ஒவ்வொரு எம்.பி-க்களாக வெளியேற, தொடக்கம் முதலே அதிக வாக்குகளுடன் ஆதிக்கம் செலுத்திவந்த ரிஷி சுனக் - லிஸ் டிரஸ் ஆகியோர் தற்போது இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

போரிஸ் ஜான்சன்

இதற்கிடையே தேர்தலில் வெற்றி பெற ஒருவரையொருவர் போட்டி போட்டுக்கொண்டு நிர்வாகிகளிடையே வாக்குறுதிகளை அளித்துவருகின்றனர். இருப்பினும், கன்சர்வேடிவ் கட்சியின் உறுப்பினர்கள் கலந்துகொண்ட தனியார் கருத்துக்கணிப்பில் ரிஷி சுனக், லிஸ் டிரஸ்-ஐ விட பின்னடைவைச் சந்தித்திருக்கிறார். அதாவது கன்சர்வேடிவ் கட்சி உறுப்பினர்களில் 38 சதவிகித பேர் மட்டுமே ரிஷி சுனக்குக்கும், 62 சதவிகித பேர் லிஸ் டிரஸ்-கும் ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ரிஷி சுனக்

இந்த நிலையில், ரிஷி சுனக் மற்றும் லிஸ் டிரஸ் இருவரும் நேற்று முன்தினம் இரவு தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு ஆதரவு திரட்டியுள்ளனர். அப்போது அந்த நிகழ்ச்சியில் ரிஷி சுனக் மற்றும் லிஸ் டிரஸ் இடையே காரசாரமான விவாதம் அரங்கேறியது.

விவாதத்தின்போது இருவருக்கும் பொதுவாகக் கேட்கப்பட்ட கேள்வியில், சீனா மீதான இங்கிலாந்து கொள்கை மிகவும் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று இருவருமே பதிலளித்தனர். இருப்பினும் ரிஷி சுனக், முன்னதாக லிஸ் டிரஸ் சீனாவுக்குச் சென்றிருந்ததைச் சுட்டிக்காட்டி, சீனாவுடனான பிரிட்டனின் உறவு பொற்காலம் என்று லிஸ் டிரஸ் முன்னர் கூறியதாக அவர் மீது குற்றம் சாட்டினார்.

மேலும், சீனாவின் சைபர் தாக்குதலை சமாளிக்கவும், தொழில்நுட்ப பாதுகாப்பில் சிறந்த நடைமுறையைப் பகிர்ந்து கொள்ளவும், புதிய சர்வதேச கூட்டணியை நான் உருவாக்குவேன் என்று ரிஷி சுனக் கூறினார்.

அதைத்தொடர்ந்து ரஷ்யா - உக்ரைன் போர் தொடர்பாக, உக்ரைன் துறைமுகங்களிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் தானியங்களைப் பாதுகாக்க இங்கிலாந்து கடற்படையிடம் அனுப்பப்படுமா என்ற கேள்வி இருவரிடமும் முன்வைக்கப்பட்டது. இதற்கு இருவருமே அனுப்பப்படாது என பதிலளிக்க, உக்ரைனுக்கு ஆதரவாகப் பொருளாதார உதவி போன்றவற்றை இங்கிலாந்து தொடர்ந்து செய்யும் என ரிஷி சுனக் கூடுதலாகப் பதிலளித்தார். தொடர்ந்து லிஸ் டிரஸ், ரஷ்யா-உக்ரைன் போரில் இங்கிலாந்து நேரடியாகத் தலையிடாது என்று கூறினார்.

ரிஷி சுனக்

அதைத்தொடர்ந்து லிஸ் டிரஸை தாக்கிப்பேசிய ரிஷி சுனக், ``40 பில்லியன் பவுண்டுகளுக்கு மேல் நிதியில்லாத வரிக் குறைப்புகளை நீங்கள் உறுதியளித்துள்ளீர்கள். உங்களின் வரி குறைப்பு திட்டம் மில்லியன் கணக்கான மக்களைத் துயரத்தில் தள்ளும்" என்று வாதிட்டார்.

அதைத்தொடர்ந்து கருவூல அமைச்சராக ரிஷி சுனக் கொண்டுவந்த திட்டங்கள் குறித்து அவரை விமர்சித்த லிஸ் டிரஸ், ``கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வரிகளை அவர் உயர்த்தியுள்ளார். அதனால் இப்போது மந்தமான நிலையை நாங்கள் எதிர்கொள்கிறோம். இதற்கான உண்மைகளும் புள்ளிவிவரங்களில் உள்ளது. மக்கள் தத்தளிக்கின்றனர் என்று என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. நான் விரைந்து செயல்படுவேன்" என்று கூறினார்.

ரிஷி சுனக் Vs லிஸ் ட்ரஸ்

செப்டம்பர் 2-ம் தேதியோடு வாக்குப்பதிவு முடிவடையும் நிலையில், இவர்களின் இந்த காரசாரமான விவாதம் இப்போதே தேர்தலில் யார் வெற்றி பெறப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பை இன்னும் கூட்டியுள்ளது. கருத்துக்கணிப்பில் என்ன வந்தாலும், செப்டம்பர் 5-ம் தேதி தான் தேர்தலில் யார் வெற்றிபெற்றார் என்பது தெரியவரும். அதுவரையில் பொறுத்திருப்போம்!


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...