Skip to main content

Doctor Vikatan: பலகாலமாகத் தொடரும் பல் கூச்சம்... சென்சிட்டிவிட்டிக்கான டூத் பேஸ்ட் தீர்வாகுமா?

எனக்கு பல வருடங்களாக பல் கூச்சம் இருக்கிறது. இதனால் பல் கூச்சத்துக்கான பேஸ்ட் பயன்படுத்துகிறேன். பல் கூச்சத்துக்கு என்ன காரணம்? அதற்கான பேஸ்ட்டை தினமும் பயன்படுத்துவது சரியானதா?

பல் மருத்துவர் மரியம் சஃபி

பதில் சொல்கிறார் நாகர்கோவிலைச் சேர்ந்த பல் மருத்துவர் மரியம் சஃபி

பொதுவாக பற்களின் மேலுள்ள எனாமல் தேய்ந்துபோய், அதையடுத்த `டென்ட்டின்' லேயர்( Dentin) எக்ஸ்போஸ் ஆவதால்தான் பற்களில் கூச்ச உணர்வு ஏற்படும். பற்களில் கூச்சம் ஏற்பட பல காரணங்கள் இருக்கலாம். அவற்றில் மிக முக்கியமானது தவறான பிரஷ்ஷிங் முறை.

அதாவது சரியான முறையில் பல் துலக்காதது. பல் துலக்கும்போது ரொம்பவும் அழுத்தியோ, கடினமாகவோ தேய்ப்பது, தவறான திசைகளில் தேய்ப்பது, தவறான பிரஷ் உபயோகிப்பது போன்றவற்றால் எனாமல் தேய்ந்து போகும் வாய்ப்புகள் அதிகமாகும்.

Tooth brush

அதனால் உள்ளே உள்ள டென்ட்டின் லேயர் எக்ஸ்போஸ் ஆகும். அதன் விளைவாகவும் பல் கூச்சம் அதிகரிக்கும்.

அடுத்தபடியாக உங்களுக்கு ஈறுகளில் ஏதேனும் பிரச்னை இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். அப்படி இருந்தாலும் வேர்கள் வெளியே எக்ஸ்போஸ் ஆகி, அதன் காரணமாகவும் பல் கூச்சம் அதிகரிக்கலாம். சிலருக்கு உறக்கத்தின்போது பற்களைக் கடிக்கும் பழக்கம் இருக்கும்.

இது பல நாள்களாகத் தொடரும்பட்சத்திலும், பற்களில் கூச்ச உணர்வு அதிகரிக்கும். முன்பு நீங்கள் பற்களுக்கு ப்ளீச்சிங் மாதிரியான சிகிச்சைகளை மேற்கொண்டிருந்தாலும் கூச்ச உணர்வு வரலாம். சிலவகை வைட்டமின் குறைபாடும் இதற்கு காரணமாகலாம்.

Gum diseases

பற்களின் கூச்சத்தில் இருந்து விடுபட, சென்சிட்டிவிட்டிக்கான டூத் பேஸ்ட்டை பயன்படுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். தற்காலிகத் தீர்வாக அதைப் பயன்படுத்தலாம். ஆனால் பற்களின் கூச்சத்துக்கு என்ன காரணம் என்பதை நீங்கள் கண்டுபிடித்து அதற்கான சிகிச்சையை மேற்கொள்வதுதான் நிரந்தர தீர்வு.

பிரச்னைக்கான மூல காரணத்தை சரிசெய்யாமல் தற்காலிக தீர்வை மட்டுமே தொடர்வது காலப்போக்கில் பற்கள் தொடர்பான பிரச்னைகளை அதிகப்படுத்தலாம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...