Skip to main content

Doctor Vikatan: பலகாலமாகத் தொடரும் பல் கூச்சம்... சென்சிட்டிவிட்டிக்கான டூத் பேஸ்ட் தீர்வாகுமா?

எனக்கு பல வருடங்களாக பல் கூச்சம் இருக்கிறது. இதனால் பல் கூச்சத்துக்கான பேஸ்ட் பயன்படுத்துகிறேன். பல் கூச்சத்துக்கு என்ன காரணம்? அதற்கான பேஸ்ட்டை தினமும் பயன்படுத்துவது சரியானதா?

பல் மருத்துவர் மரியம் சஃபி

பதில் சொல்கிறார் நாகர்கோவிலைச் சேர்ந்த பல் மருத்துவர் மரியம் சஃபி

பொதுவாக பற்களின் மேலுள்ள எனாமல் தேய்ந்துபோய், அதையடுத்த `டென்ட்டின்' லேயர்( Dentin) எக்ஸ்போஸ் ஆவதால்தான் பற்களில் கூச்ச உணர்வு ஏற்படும். பற்களில் கூச்சம் ஏற்பட பல காரணங்கள் இருக்கலாம். அவற்றில் மிக முக்கியமானது தவறான பிரஷ்ஷிங் முறை.

அதாவது சரியான முறையில் பல் துலக்காதது. பல் துலக்கும்போது ரொம்பவும் அழுத்தியோ, கடினமாகவோ தேய்ப்பது, தவறான திசைகளில் தேய்ப்பது, தவறான பிரஷ் உபயோகிப்பது போன்றவற்றால் எனாமல் தேய்ந்து போகும் வாய்ப்புகள் அதிகமாகும்.

Tooth brush

அதனால் உள்ளே உள்ள டென்ட்டின் லேயர் எக்ஸ்போஸ் ஆகும். அதன் விளைவாகவும் பல் கூச்சம் அதிகரிக்கும்.

அடுத்தபடியாக உங்களுக்கு ஈறுகளில் ஏதேனும் பிரச்னை இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். அப்படி இருந்தாலும் வேர்கள் வெளியே எக்ஸ்போஸ் ஆகி, அதன் காரணமாகவும் பல் கூச்சம் அதிகரிக்கலாம். சிலருக்கு உறக்கத்தின்போது பற்களைக் கடிக்கும் பழக்கம் இருக்கும்.

இது பல நாள்களாகத் தொடரும்பட்சத்திலும், பற்களில் கூச்ச உணர்வு அதிகரிக்கும். முன்பு நீங்கள் பற்களுக்கு ப்ளீச்சிங் மாதிரியான சிகிச்சைகளை மேற்கொண்டிருந்தாலும் கூச்ச உணர்வு வரலாம். சிலவகை வைட்டமின் குறைபாடும் இதற்கு காரணமாகலாம்.

Gum diseases

பற்களின் கூச்சத்தில் இருந்து விடுபட, சென்சிட்டிவிட்டிக்கான டூத் பேஸ்ட்டை பயன்படுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். தற்காலிகத் தீர்வாக அதைப் பயன்படுத்தலாம். ஆனால் பற்களின் கூச்சத்துக்கு என்ன காரணம் என்பதை நீங்கள் கண்டுபிடித்து அதற்கான சிகிச்சையை மேற்கொள்வதுதான் நிரந்தர தீர்வு.

பிரச்னைக்கான மூல காரணத்தை சரிசெய்யாமல் தற்காலிக தீர்வை மட்டுமே தொடர்வது காலப்போக்கில் பற்கள் தொடர்பான பிரச்னைகளை அதிகப்படுத்தலாம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

Doctor Vikatan: நாள்பட்ட இருமல், கூடவே சிறுநீர்க்கசிவும், காதில் ஒலிக்கும் சத்தமும்... என்ன பிரச்னை?

Doctor Vikatan: என் வயது 50. எனக்கு நாள்பட்ட இருமல் இருக்கிறது. மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து எடுத்துக் கொண்டு இருக்கிறேன். இருமினால் சிறுநீர்க் கசிவு ஏற்படுகிறது. காதில் சில நேரங்களில் அலை அடிப்பது போல் சத்தம் கேட்கிறது. இதற்கெல்லாம் என்ன சிகிச்சை எடுக்க வேண்டும்? - Jayarani, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம். பொது மருத்துவர் அருணாசலம் உங்கள் விஷயத்தில் இருமலைக் கட்டுப்படுத்த முதலில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இரண்டு வாரங்களுக்கு மேல் தொடரும் இருமல், காசநோயின் அறிகுறியாகவும் இருக்கக்கூடும். நிறைய பேர் அது தெரியாமல் இருமல் மருந்தைக் குடித்துக் குடித்து அதைக் கட்டுப்பாட்டில் வைக்க முயல்கிறார்கள். இது தவறு. இருமலுக்கான காரணம் தெரிந்து சிகிச்சை எடுப்பதுதான் சரியானது. இருமலில் வறட்டு இருமல், சளியுடன் கூடிய இருமல், ஆஸ்துமா இருமல் என மூன்று வகை உண்டு. வறட்டு இருமல் என்பது ஒருவித பாக்டீரியாவால் வருவது. ஒவ்வொரு முறை இருமும்போதும் சளியும் சேர்ந்து வருவது, சளி இருமல். மூன்றாவது ஆஸ்துமாவினால், வீஸிங்கால் வருவது. அதாவது காற்றுப்பாதை ச...