Skip to main content

Doctor Vikatan: Low BP-யால் தினமும் தலைச்சுற்றல்... இனிப்பு சாப்பிடுவது உதவுமா?

என் வயது 40. தினமும் காலையில் சமையல் வேலையில் இருக்கும்போது ஒருமுறை தலைச்சுற்றல் வருகிறது. ஒரு நிமிடம் ஓய்வெடுத்தால் சரியாகிவிடுகிறது. லோ பிபியாக இருக்கும், ஏதேனும் இனிப்பாகச் சாப்பிட்டால் சரியாகிவிடும் என்று கேள்விப்பட்டதில் இருந்து, தலைச்சுற்றல் வரும்போதெல்லாம் இனிப்பு சாப்பிடுகிறேன். லோ பிபி ஏன் வருகிறது, அதற்கும் இனிப்புக்கும் என்ன தொடர்பு? இதை குணப்படுத்த முடியுமா?

ஸ்பூர்த்தி அருண்

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண்

நீங்கள் எதைவைத்து உங்களுக்கு லோ பிபி ( Low BP) இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள் என்பது தெரியவில்லை. பொதுவாக லோ பிபி என்பது ரத்த அழுத்தமானது 90/60-க்கு கீழே இருக்கும் நிலை.

பலரும் தனக்கு லோ பிபி இருப்பதாகச் சொல்வதுண்டு. அவர்கள் உணரும் அறிகுறிகளை வைத்து அப்படித் தவறாகப் புரிந்து கொள்கிறவர்கள்தான் அதிகம். ஆனால் முறைப்படி ரத்த அழுத்தத்தை டெஸ்ட் செய்து பார்த்து, அது 90/60-க்கு கீழே இருப்பது உறுதிசெய்யப்பட்டால்தான் அதை லோ பிளட் பிரஷர் என எடுத்துக்கொள்ள முடியும்.

சென்னை போன்ற நகரங்களில் நிலவும் வெப்பநிலை காரணமாக, உடலில் நீர்ச்சத்து குறைந்து இப்படி குறை ரத்தஅழுத்தம் வருவது மிகவும் சகஜம். போதுமான அளவு தண்ணீர் குடிக்காதவர்களுக்கு அவ்வப்போது ரத்த அழுத்தம் குறைய வாய்ப்புகள் உண்டு.

BP

அனீமியா எனப்படும் ரத்தச்சோகை, தைராய்டு குறைபாடு போன்ற பாதிப்புகள் உள்ளவர்களுக்கும் ரத்த அழுத்த அளவு குறையலாம். சிலருக்கு அவர்கள் எடுத்துக்கொண்டிருக்கும் மருந்துகளின் பக்கவிளைவாகக் கூட ரத்த அழுத்த அளவு குறையலாம்.

எனவே, நீங்களாக உங்களுக்கு குறை ரத்த அழுத்தம் என நினைத்துக் கொண்டிருக்காமல் முறையான பரிசோதனையின் மூலம் அதை உறுதிசெய்ய வேண்டும். அதற்கு என்ன காரணம் என்பதைக் கண்டறிந்து, அதை குணப்படுத்த வேண்டும்.

குறை ரத்த அழுத்தத்துக்கும் ஸ்வீட் சாப்பிடுவதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஒருவேளை உங்களுக்கு ரத்தச் சர்க்கரை அளவு குறைந்து, அதன் விளைவாக தலைச்சுற்றல் ஏற்பட்டிருக்கலாம். ரத்தச் சர்க்கரை அளவு குறைந்து, தலைச்சுற்றல் வருவோருக்கு இப்படி உடனே ஸ்வீட் கொடுப்பது நம்மூரில் பலரும் செய்யும் தவறு. இப்படி ஸ்வீட் சாப்பிடுவதால் லோ பிளட் பிரஷர் பாதிப்பை சரிசெய்ய முடியாது.

dehydration

உடலில் நீர்ச்சத்து வறண்டு, அதன் விளைவாக ரத்த அழுத்தம் குறையும்போதுதான் இளநீர் குடிப்பது, ஓஆர்எஸ் கலந்த தண்ணீர் குடிப்பது போன்றவற்றைச் செய்யச் சொல்வார்கள். மற்றபடி இனிப்புக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்பதால் நீங்கள் உடனடியாக மருத்துவரை அணுகி, உங்கள் தலைச்சுற்றலுக்கான காரணத்தைத் தெரிந்து சிகிச்சை எடுக்க வேண்டியது அவசியம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...