Skip to main content

கடன் சுமை; வீட்டை விற்க முடிவு; லாட்டரி பரிசால் மீண்ட குடும்பம்; நடந்தது இதுதான்!

கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் மஞ்சேஸ்வரம் பகுதியைச் சேர்ந்தவர் முஹம்மது என்ற பாவா. நில புரோக்கர் வேலை செய்துவந்தார். முஹம்மதுவுக்கு மனைவி மற்றும் நான்கு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். புரோக்கர் தொழிலில் சுமார் 15 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மேலும் கொரோனா காரணமாக வருவாயும் குறைந்துள்ளது. ஏற்கெனவே மூத்த மகளுக்கு திருமணத்துக்காக கடன் வாங்கிய நிலையில் வீடு கட்டுவதற்கு என வங்கியில் 10 லட்சம் ரூபாய் கடன்பெற்றுள்ளார். லோன் தொகை வீடுவைக்க பற்றாமல் போனதால் உறவினர்களிடம் இருந்து 20 லட்சம் ரூபாய் கடனாக வாங்கியுள்ளார். வீடு வேலை முடிந்த நிலையில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு இரண்டாவது மகளுக்கும் திருமணம் நடத்தி வைத்துள்ளார். இதனால் முஹம்மதுவுக்கு கடன் சுமை அதிகரித்துள்ளது.லாட்டரி வட்டியும், கடனும் கழுத்தை இறுக்கியது. புரோக்கர் தொழிலும் அடிவாங்கியதால் கடனை அடைக்க முடியாமல் திணறியுள்ளார். வேறு வழி இல்லாமல் ஆசையாய் கட்டிய தனது வீட்டை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளார் முஹம்மது. 2000 சதுர அடி உள்ள வீடும், நிலமும் 40 லட்சம் ரூபாய்க்கு வாங்குவதற்கு ஒருவர் முன்வந்துள்ளார். முஹம்மதுவும் வீட்டை விற்பனை செய்யத் தயாராகியுள்ளார். இதற்கிடையே கேரளா அரசின 50-50 (Fifty Fifty) லாட்டரியில் 50 ரூபாய் கொடுத்து கடந்த சனிக்கிழமை ஒரு லாட்டரி சீட்டு எடுத்துள்ளார். இதற்கிடையே வீட்டை விலை பேசிய நபர் டோக்கன் அட்வான்ஸ் கொடுத்து, விலையை உறுதி செய்வதற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணிக்கு வருவதாகக் கூறியிருக்கிறார். அன்றைய தினம் 50-50 லாட்டரி குலுக்கல் நடைபெற்றுள்ளது. மாலை 3 மணியளவில் முஹம்மது எடுத்த எஃப்.எஃப் 537904 என்ற எண் கொண்ட லாட்டரி சீட்டுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ளதாகத் தகவல் வெளியானது. இதனால் முஹம்மதுவும், அவரது குடும்பத்தினரும் மகிழ்ச்சியடைந்தனர். வீட்டை விலை பேசியவர்கள் அட்வான்ஸ் கொடுக்க முஹம்மதுவின் வீட்டுக்கு மாலை 5.30 மணியளவில் சென்றுள்ளனர். அவர்களிடம் லட்டரியில் ஒரு கோடி ரூபாய் பரிசு விழுந்ததைக் கூறியதுடன், வீட்டை விற்கவில்லை எனக்கூறி சந்தோஷமாக வழியனுப்பி வைத்துள்ளார் முஹம்மது. லாட்டரியில் ஒரு கோடிரூபாய் பரிசு விழுந்த முஹம்மது இதுபற்றி முஹம்மது கூறுகையில், "நான் தொடர்ந்து லாட்டரி எடுக்கும் பழக்கம் கொண்டவன் அல்ல. எப்போதாவது டிக்கெட் எடுப்பேன். எனக்கு சுமார் ஐம்பது லட்சம் ரூபாய் கடன் உள்ளது. கடனை அடைத்துபோக மீதி பணத்தை ஏழைகளுக்கு கொடுக்கத் தீர்மானித்திருக்கிறேன்" என்றார். கடன் சுமையால் வீட்டை விற்பனை செய்வதற்கு சில மணி நேரத்துக்கு முன் லாட்டரியில் ஒரு கோடி ரூபாய் விழுந்துள்ள சம்பவம் கேரளாவில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.
http://dlvr.it/SVkSqX

Comments

Popular posts from this blog

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...

மரபணு சிகிச்சையில் செவித்திறன் பெற்ற சிறுமி - அனைத்து பரம்பரை நோய்களுக்கும் தீர்வு கிடைக்குமா?

நம் உடல், பல கோடான கோடி செல்களால் ஆனது. இந்தச் செல்களில் சுமார் 22 ஆயிரம் மரபணுக்கள் உள்ளன. பெரும்பாலான செல்களில் உட்கரு உண்டு. இங்குதான் DNA மூலக்கூறுகள் உள்ளன. இந்த DNA மூலக்கூறுகள்தான் இந்த மரபணுத் தகவல்களைச் சுமந்து கொண்டு உள்ளன. இந்த மரபணுக்களின் இயக்கம்தான், நம் இயக்கம். உதாரணமாக, நம் உமிழ் நீரில் அமைலேஸ் என்ற ஒரு நொதி உள்ளது. இந்த நொதிதான் நம் உணவில் உள்ள மாவுப் பொருளைச் சிதைத்து குளுக்கோஸை உற்பத்தி செய்கிறது. இந்த நொதியை உற்பத்தி செய்யத் தேவையான தகவல், AMY1 என்ற மரபணுவில் உள்ளது. இந்த மரபணுவில் உள்ள தகவலின் படிதான் அமைலேஸ் என்ற ஒரு நொதி தயாரிக்கப்படுகிறது. அதாவது, AMY1 என்ற மரபணுவில் ஏதாவது தவறு இருந்தால், அமைலேஸ் என்ற ஒரு நொதி செயலிழக்கும். இந்த நிலையில் உள்ள மரபணு நோயாளி, உணவு சாப்பிட்டால் அவருக்குச் செரிமானமாகாது. மரபணு அதிகரிக்கும் உணவுத் தேவை: தொழில்நுட்பத்தில் தயாராகும் செயற்கை மீன், இறைச்சி... உடலுக்கு நல்லதா..? மரபணுவில் உள்ள தகவலில் தவறு இருந்தால், மரபணு நோய் ஏற்படும். இதனைப் பரம்பரை நோய் எனலாம். காரணம், இந்த நோய் பெற்றோர்கள்/மூதாதையர்களிடமிருந்து பிள்ளைகளுக்கு ...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...