Skip to main content

கடன் சுமை; வீட்டை விற்க முடிவு; லாட்டரி பரிசால் மீண்ட குடும்பம்; நடந்தது இதுதான்!

கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் மஞ்சேஸ்வரம் பகுதியைச் சேர்ந்தவர் முஹம்மது என்ற பாவா. நில புரோக்கர் வேலை செய்துவந்தார். முஹம்மதுவுக்கு மனைவி மற்றும் நான்கு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். புரோக்கர் தொழிலில் சுமார் 15 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மேலும் கொரோனா காரணமாக வருவாயும் குறைந்துள்ளது. ஏற்கெனவே மூத்த மகளுக்கு திருமணத்துக்காக கடன் வாங்கிய நிலையில் வீடு கட்டுவதற்கு என வங்கியில் 10 லட்சம் ரூபாய் கடன்பெற்றுள்ளார். லோன் தொகை வீடுவைக்க பற்றாமல் போனதால் உறவினர்களிடம் இருந்து 20 லட்சம் ரூபாய் கடனாக வாங்கியுள்ளார். வீடு வேலை முடிந்த நிலையில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு இரண்டாவது மகளுக்கும் திருமணம் நடத்தி வைத்துள்ளார். இதனால் முஹம்மதுவுக்கு கடன் சுமை அதிகரித்துள்ளது.லாட்டரி வட்டியும், கடனும் கழுத்தை இறுக்கியது. புரோக்கர் தொழிலும் அடிவாங்கியதால் கடனை அடைக்க முடியாமல் திணறியுள்ளார். வேறு வழி இல்லாமல் ஆசையாய் கட்டிய தனது வீட்டை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளார் முஹம்மது. 2000 சதுர அடி உள்ள வீடும், நிலமும் 40 லட்சம் ரூபாய்க்கு வாங்குவதற்கு ஒருவர் முன்வந்துள்ளார். முஹம்மதுவும் வீட்டை விற்பனை செய்யத் தயாராகியுள்ளார். இதற்கிடையே கேரளா அரசின 50-50 (Fifty Fifty) லாட்டரியில் 50 ரூபாய் கொடுத்து கடந்த சனிக்கிழமை ஒரு லாட்டரி சீட்டு எடுத்துள்ளார். இதற்கிடையே வீட்டை விலை பேசிய நபர் டோக்கன் அட்வான்ஸ் கொடுத்து, விலையை உறுதி செய்வதற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணிக்கு வருவதாகக் கூறியிருக்கிறார். அன்றைய தினம் 50-50 லாட்டரி குலுக்கல் நடைபெற்றுள்ளது. மாலை 3 மணியளவில் முஹம்மது எடுத்த எஃப்.எஃப் 537904 என்ற எண் கொண்ட லாட்டரி சீட்டுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ளதாகத் தகவல் வெளியானது. இதனால் முஹம்மதுவும், அவரது குடும்பத்தினரும் மகிழ்ச்சியடைந்தனர். வீட்டை விலை பேசியவர்கள் அட்வான்ஸ் கொடுக்க முஹம்மதுவின் வீட்டுக்கு மாலை 5.30 மணியளவில் சென்றுள்ளனர். அவர்களிடம் லட்டரியில் ஒரு கோடி ரூபாய் பரிசு விழுந்ததைக் கூறியதுடன், வீட்டை விற்கவில்லை எனக்கூறி சந்தோஷமாக வழியனுப்பி வைத்துள்ளார் முஹம்மது. லாட்டரியில் ஒரு கோடிரூபாய் பரிசு விழுந்த முஹம்மது இதுபற்றி முஹம்மது கூறுகையில், "நான் தொடர்ந்து லாட்டரி எடுக்கும் பழக்கம் கொண்டவன் அல்ல. எப்போதாவது டிக்கெட் எடுப்பேன். எனக்கு சுமார் ஐம்பது லட்சம் ரூபாய் கடன் உள்ளது. கடனை அடைத்துபோக மீதி பணத்தை ஏழைகளுக்கு கொடுக்கத் தீர்மானித்திருக்கிறேன்" என்றார். கடன் சுமையால் வீட்டை விற்பனை செய்வதற்கு சில மணி நேரத்துக்கு முன் லாட்டரியில் ஒரு கோடி ரூபாய் விழுந்துள்ள சம்பவம் கேரளாவில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.
http://dlvr.it/SVkSqX

Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...