Skip to main content

ஆண்மையின்மையை மறைத்து திருமணம்... தெரிய வந்ததும் விவாகரத்து - நீதிமன்றத்தின் உத்தரவு என்ன?

ஆண்மையின்மையை மறைத்து திருமணம் செய்தவர் மீது மோசடிப்பிரிவில் வழக்குப்பதிவு செய்ய, உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மதுரை உயர் நீதிமன்றம் இந்த வழக்கு குறித்து விசாரித்தபோது, மதுரையைச் சேர்ந்த பெண்ணுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்துள்ளது. ஏகப்பட்ட நகை, சீர்வரிசை பொருள்கள் வரதட்சணையாகக் கொடுக்கப்பட்ட நிலையில், கணவர் மனைவியோடு சேர்ந்து வாழவில்லை. புகுந்த வீட்டிலுள்ளவர்கள் பல கொடுமைகளைச் செய்துள்ளனர். இதனால் பிரச்னை ஏற்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு வெளிநாட்டுக்கு சென்றுவிட்டார் கணவர். அதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மனைவி, மதுரை தல்லாகுளம் காவல் நிலையத்தில் புகார் செய்தும் சரியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையில், மோசடி செய்து திருமணம் செய்த கணவர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டி அப்பெண், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில், ``கடந்த ஆண்டு எனக்கு திருமணம் நடந்தது. கணவருடன் சென்னையில் வசித்து வந்தேன். என் கணவரின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது. என்னுடன் குடும்பம் நடத்துவதில் அவருக்கு ஆர்வம் இல்லை.திருமண மோசடிவிவாகரத்து செய்த கணவரை விருந்தினரைப்போல் நடத்த வேண்டும் - உயர் நீதிமன்றத் தீர்ப்பும் விவாதங்களும்... அவருக்கு ஆண்மைக்குறைவால் முதல் திருமணம் தோல்வியில் முடிந்துள்ளது. அதை மறைத்து உண்மையைக் கூறாமல் கணவரும் அவர் குடும்பத்தினரும் என்னை மணம் முடித்தனர். இதைத் தெரிந்துகொண்டதால், என்னை தலாக் மூலம் விவகாரத்து செய்துவிட்டு வெளிநாட்டுக்குச் சென்றுவிட்டார். ஆண்மையற்றவர் என்பதை மறைத்து திருமணம் செய்தவர் மீது நான் கொடுத்த புகார், சாதாரண வழக்காக பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் ஏமாற்றி மோசடி செய்தல் போன்ற பிரிவுகளைச் சேர்க்க வேண்டும்" எனக் கோரியிருந்தார். அரசுத்தரப்பில், ``இந்த புகார் முதற்கட்ட விசாரணைக்காக சமூக நலத்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் அறிக்கை கிடைத்ததும் எப்.ஐ.ஆரில் மாற்றம் செய்வது குறித்து காவல்துறையினர் பரிசீலிப்பார்கள்" என்று தெரிவிக்கப்பட்டது.மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவு!வழுக்கைத் தலையை மறைத்து திருமணம் செய்ய முயற்சி! - உண்மை தெரிந்ததால் திருமணத்தை நிறுத்திய மணப்பெண் திருமணத்துக்கு பின்பு இந்த விஷயம் தெரியவந்த நிலையில் தலாக் முறையில் விவாகரத்து கூறிவிட்டு கணவர் வெளிநாடு சென்றுவிட்டார். ஆகவே, மனுதாரர் கொடுத்த புகாரில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் 417, 420 ஆகிய பிரிவுகளை வழக்கில் சேர்க்க வேண்டும். 4 மாதங்களில் விசாரணை நடதி இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். கல்வி, வேலை, உடல்நலத் தகுதியை மறைத்து மோசடியாக திருமணம் செய்பவர்களுக்கு இந்த வழக்கு முன்னுதாரணமாக இருக்கும் என்கிறார்கள் சட்டத்துறையைச் சேர்ந்தவர்கள்.
http://dlvr.it/SVltf1

Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...