Skip to main content

`அரசு இல்லத்துக்கும் பணம் கட்டி விடுகிறேன்; என் வருமானம் என்ன தெரியுமா?’ - ஊழல் குறித்து பேசிய மம்தா

மேற்கு வங்கத்தின் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தற்போதைய தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சராக இருக்கும் பார்த்தா சாட்டர்ஜி, இதற்கு முன்பு கல்வித்துறை அமைச்சராக இருந்தார். அப்போது பள்ளி சேவை ஆணையத்தால் (WBSSC) அரசு நடத்தும் உதவி பெறும் பள்ளிகளில் சட்டவிரோத நியமனங்கள் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்தக் குற்றச்சாட்டைத் தொடர்ந்து ஆசிரியர் பணி நியமன ஊழல் தொடர்பாக, பார்த்தா சாட்டர்ஜியின் உதவியாளர் அர்பிதா முகர்ஜியின் வீட்டில் அமலாக்க இயக்குநரகம் சோதனை நடத்தியது. அப்போது 21 கோடி ரூபாய் ரொக்கமாக மீட்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஆசிரியர் பணி நியமன முறைகேடு தொடர்பான பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி கடந்த 23-ம் தேதி கைதுசெய்யப்பட்டார்.

பார்த்தா சாட்டர்ஜி

இந்த நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, "நான் தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்டுள்ளேன். அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி அப்படி ஒரு செயலைச் செய்ய முடியும் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. ஒருவேளை குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டாலும் பரவாயில்லை. ஆனால் உண்மை சரியான நேரத்தில் வெளிவர வேண்டும். நான் ஊழலை ஆதரிக்கவில்லை என்றாலும், எல்லா மக்களும் ஒரே மாதிரி இருப்பதில்லை.

யாராவது தவறு செய்திருந்தால் அதனை திருத்திக் கொள்ள அவருக்கு அவகாசம் வழங்கப்பட வேண்டும். ஆனால் எல்லோரும் புனிதர்கள் என்று என்னால் கூற முடியாது, ஆனால் நான் வேண்டுமென்றே எந்தத் தவறுகளிலும் இதுவரை ஈடுபட்டதில்லை. நான் என் வாழ்நாள் முழுவதும் அரசியலில் இருந்துவருகிறேன்.

மம்தா பானர்ஜி

என்னைப் பொறுத்தவரை அரசியல் என்பது மக்கள் சேவை. இதை நான் எனது ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரிடம் இருந்து கற்றுக்கொண்டேன். எனக்கு இதற்கு முன்பு முன்னாள் எம்.பி.யாக ரூ.1 லட்சம் ஓய்வூதியம் கிடைக்கிறது, முதல்வராக இருப்பதால் இன்னும் ரூ.2 லட்சம் சம்பளம் வாங்க முடியும், ஆனால் நான் எதையும் வாங்கவில்லை. நான் முதல்வருக்கான சர்க்யூட் ஹவுஸில் தங்கியிருந்தாலும், அதற்கு நான் பணம் செலுத்துகிறேன்.

அரசிடமிருந்து பணம் வரவில்லை என்றால் என்னுடைய வருமானம் என்ன தெரியுமா? நான் புத்தகங்களை எழுதுகிறேன், அதிலிருந்து எனக்கு உரிமத்தொகை கிடைக்கிறது. அதிலிருந்து தான் தேவைகளை நிறைவேற்றிக்கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...