Skip to main content

`அரசு இல்லத்துக்கும் பணம் கட்டி விடுகிறேன்; என் வருமானம் என்ன தெரியுமா?’ - ஊழல் குறித்து பேசிய மம்தா

மேற்கு வங்கத்தின் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தற்போதைய தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சராக இருக்கும் பார்த்தா சாட்டர்ஜி, இதற்கு முன்பு கல்வித்துறை அமைச்சராக இருந்தார். அப்போது பள்ளி சேவை ஆணையத்தால் (WBSSC) அரசு நடத்தும் உதவி பெறும் பள்ளிகளில் சட்டவிரோத நியமனங்கள் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்தக் குற்றச்சாட்டைத் தொடர்ந்து ஆசிரியர் பணி நியமன ஊழல் தொடர்பாக, பார்த்தா சாட்டர்ஜியின் உதவியாளர் அர்பிதா முகர்ஜியின் வீட்டில் அமலாக்க இயக்குநரகம் சோதனை நடத்தியது. அப்போது 21 கோடி ரூபாய் ரொக்கமாக மீட்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஆசிரியர் பணி நியமன முறைகேடு தொடர்பான பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி கடந்த 23-ம் தேதி கைதுசெய்யப்பட்டார்.

பார்த்தா சாட்டர்ஜி

இந்த நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, "நான் தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்டுள்ளேன். அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி அப்படி ஒரு செயலைச் செய்ய முடியும் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. ஒருவேளை குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டாலும் பரவாயில்லை. ஆனால் உண்மை சரியான நேரத்தில் வெளிவர வேண்டும். நான் ஊழலை ஆதரிக்கவில்லை என்றாலும், எல்லா மக்களும் ஒரே மாதிரி இருப்பதில்லை.

யாராவது தவறு செய்திருந்தால் அதனை திருத்திக் கொள்ள அவருக்கு அவகாசம் வழங்கப்பட வேண்டும். ஆனால் எல்லோரும் புனிதர்கள் என்று என்னால் கூற முடியாது, ஆனால் நான் வேண்டுமென்றே எந்தத் தவறுகளிலும் இதுவரை ஈடுபட்டதில்லை. நான் என் வாழ்நாள் முழுவதும் அரசியலில் இருந்துவருகிறேன்.

மம்தா பானர்ஜி

என்னைப் பொறுத்தவரை அரசியல் என்பது மக்கள் சேவை. இதை நான் எனது ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரிடம் இருந்து கற்றுக்கொண்டேன். எனக்கு இதற்கு முன்பு முன்னாள் எம்.பி.யாக ரூ.1 லட்சம் ஓய்வூதியம் கிடைக்கிறது, முதல்வராக இருப்பதால் இன்னும் ரூ.2 லட்சம் சம்பளம் வாங்க முடியும், ஆனால் நான் எதையும் வாங்கவில்லை. நான் முதல்வருக்கான சர்க்யூட் ஹவுஸில் தங்கியிருந்தாலும், அதற்கு நான் பணம் செலுத்துகிறேன்.

அரசிடமிருந்து பணம் வரவில்லை என்றால் என்னுடைய வருமானம் என்ன தெரியுமா? நான் புத்தகங்களை எழுதுகிறேன், அதிலிருந்து எனக்கு உரிமத்தொகை கிடைக்கிறது. அதிலிருந்து தான் தேவைகளை நிறைவேற்றிக்கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...