Skip to main content

தடை செய்யப்பட்ட 14,000 கத்திகள்; சீனாவிலிருந்து இறக்குமதி - பிரபல நிறுவனத்துக்கு நோட்டீஸ்!

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட தடை செய்யப்பட்ட 14,000 கத்திகளை டெல்லி போலீஸார் பறிமுதல் செய்திருக்கின்றனர். மேலும் இது சம்பந்தமாக 5 பேரை போலீஸார் கைதும் செய்து இருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் தடை செய்யப்பட்ட கத்திகளை தங்கள் இணையதளங்களில் விற்பனை செய்ததற்காக, ஈ-காமர்ஸ் தளங்களான ஃபிளிப்கார்ட், மீஷோ நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருப்பாகாகவும் போலீஸ் தெரிவித்திருக்கிறது.

போலீஸ் கைது

இந்த சம்பவம் குறித்து பேசிய டெல்லியின் தெற்கு மாவட்ட போலீஸ் அதிகாரி பெனிடா மேரி ஜெய்கர், ``சி.ஆர் பூங்காவில் உரிமை கோரப்படாத ஒரு பார்சலிலிருந்து, ராம்புரி கத்திகள் எனப்படும் 50 தடைசெய்யப்பட்ட, பட்டன்-ஆசிட்டிவேடட் கத்திகள் மீட்கப்பட்டன. பார்சலிலிருந்த பெயர் மற்றும் முகவரியை வைத்து, மாளவியா நகரில் முகமது சாஹல் என்பவருக்குச் சொந்தமான துணிக்கடைக்கு வந்த போலீஸார் 500க்கும் மேற்பட்ட சட்டவிரோத கத்திகளை கண்டெடுத்தனர். அதைத்தொடர்ந்து முகமது சாஹல், அவரின் ஊழியர் வாசிம் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். அதன்பின்னர் முகமது சாஹல் கொடுத்த தகவலின்படி முகமது யூசுப் என்பவருடன், சீனாவுக்கு கத்திகளுக்கு ஆர்டர் கொடுப்பவரான ஆஷிஷ் சாவ்லாவிடம் விசாரணை நடத்திய போலீஸார், அவரின் குடோனிலிருந்து 13,000க்கும் மேற்பட்ட கத்திகளை பறிமுதல் செய்தனர்.

பிளிப்கார்ட்

இறுதியாக இதில் இறக்குமதியாளர் மற்றும் ஏற்றுமதியாளர்களின் உரிமையாளர் மயங்க் பப்பரை போலீஸ் கைது செய்தது. இதில் கைதான மயங்க் பப்பர், கடந்த ஆண்டில் 19,000 கத்திகளுக்கு ஆர்டர் செய்ததாகக் கூறினார்" என்று தெரிவித்தார்.

மேலும் இந்த விவகாரத்தில், சுங்க அதிகாரிகளின் பங்கு குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், எப்படி விற்பனை செய்தார்கள் என்பது குறித்து மீஷோ, ஃபிளிப்கார்ட் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருப்பதாகவும் போலீஸ் கூறியிருக்கிறது.


Comments

Popular posts from this blog

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

Doctor Vikatan: நாள்பட்ட இருமல், கூடவே சிறுநீர்க்கசிவும், காதில் ஒலிக்கும் சத்தமும்... என்ன பிரச்னை?

Doctor Vikatan: என் வயது 50. எனக்கு நாள்பட்ட இருமல் இருக்கிறது. மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து எடுத்துக் கொண்டு இருக்கிறேன். இருமினால் சிறுநீர்க் கசிவு ஏற்படுகிறது. காதில் சில நேரங்களில் அலை அடிப்பது போல் சத்தம் கேட்கிறது. இதற்கெல்லாம் என்ன சிகிச்சை எடுக்க வேண்டும்? - Jayarani, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம். பொது மருத்துவர் அருணாசலம் உங்கள் விஷயத்தில் இருமலைக் கட்டுப்படுத்த முதலில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இரண்டு வாரங்களுக்கு மேல் தொடரும் இருமல், காசநோயின் அறிகுறியாகவும் இருக்கக்கூடும். நிறைய பேர் அது தெரியாமல் இருமல் மருந்தைக் குடித்துக் குடித்து அதைக் கட்டுப்பாட்டில் வைக்க முயல்கிறார்கள். இது தவறு. இருமலுக்கான காரணம் தெரிந்து சிகிச்சை எடுப்பதுதான் சரியானது. இருமலில் வறட்டு இருமல், சளியுடன் கூடிய இருமல், ஆஸ்துமா இருமல் என மூன்று வகை உண்டு. வறட்டு இருமல் என்பது ஒருவித பாக்டீரியாவால் வருவது. ஒவ்வொரு முறை இருமும்போதும் சளியும் சேர்ந்து வருவது, சளி இருமல். மூன்றாவது ஆஸ்துமாவினால், வீஸிங்கால் வருவது. அதாவது காற்றுப்பாதை ச...