Skip to main content

Doctor Vikatan: நிமோனியா காய்ச்சல்.... ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவுமா?

Doctor Vikatan: வீட்டில் ஒருவருக்கு நிமோனியா (Pneumonia) காய்ச்சல்  வந்தால் அது குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்கும் பரவுமா...  பரவாமலிருக்க என்ன செய்ய வேண்டும்?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, நுரையீரல் சிகிச்சை சிறப்பு மருத்துவர் வந்தனா.

 நுரையீரல் சிகிச்சை சிறப்பு மருத்துவர் வந்தனா.
நுரையீரல் சிகிச்சை சிறப்பு மருத்துவர் வந்தனா.

வீட்டில் ஒருவருக்கு நிமோனியா காய்ச்சல் வந்தால், அந்தக் குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்கும் அது நிச்சயம் பரவும். இந்தக் காய்ச்சலை ஏற்படுத்தக்கூடிய இந்தப் பாக்டீரியாவும் சரி, வைரஸ்களும் எளிதில் பரவக்கூடியவை (highly contagious).

பாதிக்கப்பட்ட நபர் இருமும்போதோ அல்லது தும்மும்போதோ, அவர்களுடைய சுவாசத் துளிகள் (respiratory droplets) காற்றில் பரவுகின்றன. அதன் மூலம் அந்தக் கிருமிகளும் காற்றில் பரவுகின்றன. அதனால், அது எளிதாக மற்ற குடும்ப உறுப்பினர்களுக்கும், அருகில் உள்ளோருக்கும் பரவக்கூடும். 

அதுமட்டுமல்லாமல், பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்தும் கப்புகள் (cups), பாத்திரங்கள் (utensils) அல்லது அவர்கள் பயன்படுத்தும் டிஷ்யூ (tissues) மூலமாகவும் இந்தத் தொற்றுகள் (infections) பரவுவதற்கு வாய்ப்பு உள்ளது.

நிமோனியா காய்ச்சல் என்றில்லை, எந்த வகையான வைரஸ் தொற்றோ (viral infection), பாக்டீரியா தொற்றோ வந்திருப்பவர்கள் தும்மும்போதும் இருமும்போதும் அவர்களுடைய மூக்கையும் வாயையும் மூடிக் கொள்ள வேண்டியது ரொம்ப ரொம்ப முக்கியம். 

தும்மும்போதும் இருமும்போதும் அவர்களுடைய மூக்கையும் வாயையும் மூடிக் கொள்ள வேண்டியது ரொம்ப ரொம்ப முக்கியம்.

கைகுட்டை (handkerchief) பயன்படுத்துவதும் அல்லது குறைந்தது கையை வைத்து மறைப்பதும், உடனே கையைக் கழுவுவதும்  முக்கியம். நோய்வாய்ப்பட்டிருக்கும் காலங்களில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது (social distancing) ரொம்பவே முக்கியம். 

அவர்களைத் தனிமைப்படுத்திக் கொள்வது, குறைந்தபட்சம் ஒரு வாரமாவது தனிமைப்படுத்திக் கொள்வதும் நல்லதுதான். அந்த நேரத்தில் அவர்கள் பயன்படுத்தும் பாத்திரங்கள், தட்டுகள், உடைகள் போன்றவற்றையுமே தனியே வைத்திருப்பதும் முறைப்படி சுத்தப்படுத்துவதும் மிக அவசியம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். 


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...